//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

யாழ். ஆரியகுளம் சந்தியில் வீதியால் சென்ற பெண் மீது சேஷ்டை! இளைஞன் மீது தாக்குதல்


யாழ். ஆரியகுளம் பகுதியில்  தனியார் கல்லூரி மாணவி ஒருவரின் கையைப் பிடித்து இழுத்த இளைஞன் ஒருவரை யாழ்.பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த   தனியார் கல்லூரி மாணவி  கையைப் பிடித்து இழுத்ததை வீதிப் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவதானித்துள்ளனர்.

குறித்த இளைஞன்  தனியார் கல்லூரி மாணவி கையைப் பிடித்து இழுத்த போது அப்பெண் அலறியபோது வீதியில் சென்றவர்கள் அவ்விளைஞனை பிடித்து சமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அப்போது அப்பகுதிக்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் இருவரையும் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த  தனியார் கல்லூரி மாணவி விசாரணை முடிவில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
குறித்த  அந்த இளைஞன் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உப பரிசோதகர் குணசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக