//]]>3

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்



குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை இன்று யாழ். கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியைச் சந்தித்துள்ள சந்தேகநபர், அவருக்கு குளிர்பானம் அருந்தக் கொடுத்ததாகவும் அச்சிறுமி மயக்கமடைந்ததும் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் சந்தேகநபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இணுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதேடுதலின் போது, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார், யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை அணி அதிரடி





இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இலங்கை அணி அதிரடி விளையாடி வருகிறது.
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் தொடங்கியது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லகிரு திரிமன்னே 8 ஓட்டங்களும், திலகரத்ன டில்சன் 14 ஓட்டங்களும் எடுத்து ஏமாற்றமளித்தனர். அடுத்து களமிறங்கிய சங்கக்கராவும் முதல் பந்திலியே ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
ஆனால் பின்பு களமிறங்கிய அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன சதத்தை கடந்து 11 பவுண்டரியும், 1 சிக்சரும் அடித்து 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய திலன் சமரவீரா அரைசதம் கடந்து 54 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பறக்கும் காரின் சோதனை ஓட்டம் வெற்றி (வீடியோ இணைப்பு)


அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் டெரபியூஜியா. மசாசூசட்ஸ் மாநிலம் வூபர்ன் நகரை தலைமையிடமாக கொண்டது.
ரேஸ் கார்கள், சிறிய ரக விமானங்கள், விமான பாகங்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. தரையில் மட்டுமின்றி வானத்திலும் செல்லக்கூடிய காரை உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்நிறுவனம் 2006ம் ஆண்டு ஈடுபட்டது.
கடந்த 2009ம் ஆண்டில் தயாரிப்பு பணிகள் முடிந்த பின், பல கட்டமாக இதன் சோதனை நடந்து வந்தது. டிரான்சிஷன் என்று இந்த காருக்கு பெயரிடப்பட்டது.
இதை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய அமெரிக்க தேசிய ஹைவே பாதுகாப்பு அமைப்பு கடந்த ஜூலையில் அனுமதி அளித்தது. இதையடுத்த சோதனை ஓட்டம் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பிளாட்ஸ்பர்க் விமான நிலையத்தில் கடந்த 23ம் திகதி நடத்தப்பட்டது.
டெரபியூஜியா நிறுவனத்தின் தலைமை சோதனை பைலட் பில் மிட்டீர் ஓட்டிச் சென்றார். முதலில் தரையில் வழக்கமான கார் போல ஓடிச் சென்றது.
சிறிது நேரத்தில் கார் கதவுகள் போல இருந்த இறக்கைகள் இரு பக்கமும் விரிந்தன. மெல்ல உயரே எழும்பிய கார் 8 நிமிடத்துக்கு 1400 அடி உயரம் வரை பறந்து பத்திரமாக தரையிறங்கியது.
சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக டெரபியூஜியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அன்னா டிட்ரிச் தெரிவித்துள்ளார்.
சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஆண்டுக்குள் சந்தைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
கார் விலை ரூ.1.42 கோடி. ஆர்டர் கொடுக்க விரும்புபவர்கள் ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 சீட்கள் உள்ளன. ஓட, பறக்க அன்லெடட் பெட்ரோல் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


.

ஓவியர் கிருசானந்தின் ஓவியங்கள் சில