//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு


மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் குறித்து வெறுப்படைந்துள்ள அரசாங்கத்தில் பலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில் சந்திரிக்காவின் தலையீட்டில், வெள்ளை அலரி என்ற பெயரில் ரகசியமான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய அமைப்பில், பொலன்நறுவை மற்றும் பதுளை மாவட்டங்களை சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருவர் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகளும், முன்னாள் பிரதமரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள், பழைய இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

அண்மையில் பதவியை ராஜினாமா செய்த ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்றிய ஹேமகுமார நாணயக்காரவும் புதிய அரசியல் முன்னணி குறித்து அண்மையில் ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து, இந்த புதிய அரசியல் அமைப்பை கட்டியெழுப்ப தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.  அதேவேளை 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய சந்திரிக்கா மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக