//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பா.உ. சந்திரகுமாரின் வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்


பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளானதுடன், முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை வைத்தியசாலை வீதியின் குறுக்கே நிறுத்தியிருந்த சாரதி மமதையில் முச்சக்கர வண்டி எச்சரிக்கை ஒலி எழுப்பியோதும் அசட்டை செய்து விட்டு நின்றுள்ளார்.
இதனால் ஒரு வழிப்பாதையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத முச்சக்கர வண்டி பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்துடன் பக்கவாட்டில் மோதியுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியின் சாரதி தலை மற்றும் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு நின்றிருந்த பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினரின் வாகனச்சாரதியை தாக்க முற்பட்டனர்.
எனினும் அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசயத்தை சமாளிக்கும் பாணியில் நடந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக