//]]>3

புதன், 30 மே, 2012

காலி கோட்டையின் கண்காணிப்பு பீரங்கிகள் 100 மாயம்


காலி கோட்டையின் கண்காணிப்பு நிலைகளில் பொருத்தப்பட்டிருந்த 100 பீரங்கிகள் காணாமற் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒல்லாந்தரின் ஆட்சியில் இலங்கை இருந்த போது, பயன்படுத்தப்பட்ட பீரங்களே காணாமற் போயுள்ளதாக காலி மரபுரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது.
காலி கோட்டையில் இந்த பீரங்கிகளை கண்காணிப்பு நிலைகளில் பொருத்தி வைத்து ஒல்லாந்தர் பயன்படுத்தி வந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கையின் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தப் பீரங்கிகளை உலோகத்துக்காக களவாடிச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விஜையின் அரிய சிறிய வயதுப்படங்கள்

DOB : 22-June1974
Height : 5'11''
Father : S.A.Chandrasekharan (film director)
Mother : Shobha Chandrasekharan
Wife : Sangeetha
Son : Jason Sanjay
Daughter: Divya Saasha












பேஸ்புக் நன்பர் நேரில் வந்து பாராட்டினார் மாணவி தற்கொலைக்கு முயற்சி!


பிளஸ்டூவில் 1148 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை அவரது பேஸ்புக் நண்பர் நேரில் வந்து பாராட்டினார். இதை மாணவியின்தாயார் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். தற்போது படுகாயத்துடன் அந்த மாணவி உயிருக்குப் போராடி வருகிறார். தான் பாராட்டியதால் இவ்வளவு பெரிய விபரீதமா என்ற மன உளைச்சலில் அந்த பேஸ்புக் நண்பர் மாணவியைக் காப்பாற்ற கடவுளிடம் வேண்டி வருகிறார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் மிஸ்ரா பிரியதர்ஷினி. 17 வயதாகும் இவர் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தார். பிரமாதமாக படிக்கும் பிரியதர்ஷினி தேர்வில் 1148 மதிப்பெண்களை அள்ளியிருந்தார். எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர ஆர்வமாக இருந்து வந்தார்.
பிரியதர்ஷினிக்கு பேஸ்புக் மூலம் பிரதீஷ் என்பவர் நண்பராக இருந்தார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். நேற்று பிரியதர்ஷினியை நேரில் சந்தித்து அதிக மார்க் வாங்கியதற்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக வீட்டுக்கு வந்தார் பிரதீஷ். அப்போது வீட்டில் பிரியதர்ஷினி மட்டுமே இருந்துள்ளார். மற்றவர்கள் வெளியே போயிருந்தனர்.
இதையடுத்து பிரதீஷை வரவேற்று வீட்டுக்குள் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார் பிரியதர்ஷினி. இந்த நிலையில், பிரியதர்ஷினியின் தாயார் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது யாரோ ஒருவருடன் தனது மகள் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் யார் அது என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரியதர்ஷினி இவர் எனது பேஸ்புக் நண்பர் என்று கூறி பிரதீஷை அறிமுகப்படுத்தினார். ஆனால்அதைப் பொருட்படுத்தாத அவரது தாயார், ஏன் இப்படி வீட்டுக்குள் அனுமதித்தாய் என்று கூறி கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி வேகமாக தனது வீட்டின் 2வது மாடிக்குப் போய் அங்கு அமர்ந்து நீண்ட நேரம் அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.
கீழே விழுந்க வேகத்தில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு விட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் மிதந்தார். அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினியின் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், பிரதீஷை அழைத்து விசாரித்தனர். அவர் அப்போது பெரும் அதிர்ச்சியுடன் இருந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்புதான் பிரியதர்ஷினி பிரதீஷுக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளாராம். நல்ல மதிப்பெண் பெற்ற அவரை நேரில் பாராட்டுவதற்காக வந்த நேரத்தில் இப்படி ஒரு விபரீதம் நடந்து விட்டதால் அதிர்ச்சியுடன் உள்ளார் பிரதீஷ்.
பிரியதர்ஷினி பத்திரமாக திரும்ப வேண்டும், உயிர் பிழைக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திப்பதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக விவசாயி அறிவிப்பு



தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கொளாநல்லி குட்டப்பாளையத்தில் தங்கவேல்(வயது 53) என்ற விவசாயி வசிக்கின்றார்.
இவர் இதுவரை 3 முறை மொடக்குறிச்சி சட்டசபை தேர்தலிலும் மற்றும் ஈரோடு-சேலம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டு உள்ளார்.
இந்த தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது கோவணம் கட்டியபடி மாட்டு வண்டியில் வந்த காரணத்தினால் “கோவணம் தங்கவேல்” என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார்.
இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடபோவதாக கோவணம் தங்க வேல் கூறியுள்ளார்.
இதுபற்றி கோவணம் தங்கவேல் கூறியதாவது: 2001ம் ஆண்டு நடந்த மொடக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டேன். பிறகு 2006, 2011-ம் ஆண்டுகளில் நடந்த மொடக்குறிச்சி தேர்தலிலும் இதுபோல சென்று மனு தாக்கல் செய்தேன்.
மேலும் 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தொகுதிகளில் ஈரோடு-சேலம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். விரைவில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் முடிவு செய்து உள்ளேன். இதற்காக வேட்பு மனு தாக்கல் தொடங்கும் முதல் நாளே நான் வேட்பு மனு தாக்கல் செய்வேன்.
உயர்ந்த எண்ணம் கொண்ட குடிமகன்: இந்திய நாடு விவசாயத்தில் தன்னிறைவு பெற வேண்டும், இந்திய விவசாயி இந்தியாவில் உயர் பதவியில் அமரவேண்டும்.
பள்ளி-கல்லூரிகளில் விவசாயம் கட்டாய பாடமாக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு நீர் வளமும், நில வளமும் தூய்மை குன்றாமல் கிடைக்க வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டுள்ளார் கோவணம் தங்கவேல்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எனக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

44,000 அகதிகள் யாழ்ப்பாணத்தில் மட்டும்


புலம் பெயர்ந்தோர் சேவை அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி யாழ்ப்பாணம் வளைகுடாப்பகுதியில் மட்டும் 44,559 பேர் அகதிகளாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் போரின் காரணமாக குடும்பத்தினரை இழந்து 53 முகாம்களிலும் வேறு சில நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இவற்றில் பலர் போரால் பாதிக்கபட்ட சேதமடைந்த ரெயில் நிலையங்களில் தஞ்சமடைந்திருந்தனர்.
 ஆனால் தற்போது மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது என்று கூறி அங்கிருந்தும் அகதிகள் விரட்டியடிக்கப்படுவதாக ஆதாரபூர்வ தகவல்கள் தெரிக்கின்றன. இது தவிர உயர்பாதுகாப்பு வளையம் வடக்கு வலிகாமம் பகுதியில் மீண்டும் குடியேறுவதற்காக சுமார் 32,000 பேர் காத்திருக்கின்றனர்.
 45 கிராமப் பகுதிகளில் வலிகாமம் வடக்குப் பகுதியில் சுமார் 20 கிராமங்களில் மட்டுமே இதுவரை மீண்டும் குடியமர்த்தப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 25 கிராமங்களில் 9 கிராமங்களில் ஒரு பகுதியில் மட்டும் குடியேற்றப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.
 யாழ்ப்பாணத்தில் மட்டும் சுமார் 44,000 பேர் அகதிகளாக உள்ளது அங்குள்ள மோசமான நிலையை உணர்த்துகையில் இந்தியாவிலிருந்து சென்ற எம்.பி.க்கள் குழுவிற்கு இவையெல்லாம் கண்ணில் தென் படாமல் போனது ஆச்சரியமா? அயோக்கியத்தனமா என்பது புரியவில்லை.

சிங்களம் தமிழருக்கு உரிமை இல்லை என கருதினால் தனி ஈழத்திற்காக பிரிந்து நிற்கத் தயார் (video)




தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளுடன் இலங்கையில் வாழ இடமில்லை என தெற்கும் சிங்கள அரசியல்வாதிகளும் கருதினால் தனி ஈழம் அமைக்க தனித்து நிற்கத் தயார் என மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்று (29) வெலிக்கடை சிறைக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியவற்றை மேலுள்ள காணொளியில் காண்க…

கிரிக்கெட்டுக்காக ஆடை இழக்கும் நடிகைகள்



நடிப்பொ அல்லது திறமையோ எதுவுமே தெவை இல்லை பெண்களுக்கு. வெறும் கவர்ச்சி மட்டும் போது பிரபலமாகிவிடலாம் சினிமாவில்.அதை மனதில் வைத்துத்தான் சில மாடல்கள் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில்.
பூனம் பாண்டேதான் இந்த அவிழ்ப்பு புரட்சிக்கு திலகமிட்டு தொடங்கி வைத்தவர். இப்போது அவரது பாணியில் ஏகப்பட்ட பேர் கவர்ச்சியில் கரைபுரண்டோடத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா உலகக் கோப்பையை வென்றால் ஒட்டுத் துணியில்லாமல் ஓடுவேனாக்கும் என்று கூறி உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் பூனம். ஆனால் பப்ளிக்காக அதைச் செய்ய முடியாமல் போனதால் உடனடியாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியும், பேஸ்புக் மூலமும், டிவிட்டர் மூலமும் தனது கவர்ச்சியை களேபரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார் பூனம்.
அதேபோல பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவை தனது கவர்ச்சியால் தள்ளாட வைத்துக் கொண்டிருக்கும் வீணா மாலிக், ஒரு பத்திரிகைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து பயமுறுத்தினார்.
இந்த நிலையில் தற்போது ரோஸ்லின் கான் தன் பங்குக்கு கவர்ச்சியைக் கொட்ட ஆரம்பித்துள்ளார். ஐபிஎல்லுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரோஸ்லின் சமீபத்தில் படு கவர்ச்சிகரமான செயல்களில் ஈடுபட்டு வியர்க்க வைத்தார். இப்போது அவரது ஹாட்டான புகைப்படங்கள் உலா வர ஆரம்பித்துள்ளன – வழக்கம் போல நெட்டில்தான்.
அதில் ஒரு புகைப்படத்தில், கிரிக்கெட் வீரர்களைப் போல கையில் பேட், கிளவுஸ், ஷூ, பேடுடன் காட்சி தருகிறார் ரோஸ்லின். வலது கையில் பேட்டைப் பிடித்தபடி நிற்கும் அவர், இடது கையால் தனது மினி ஸ்கர்ட்டை விலக்கி தனது பின்பக்கத்தைக் காட்டுகிறார்.
அவரது இடுப்பில் ஐபிஎல் லோகோவை பொறித்துள்ளார். பின்பக்கத்தில் பை டிக்கெட் நவ் என்ற வாசகத்தையும் கூடவே போட்டு வைத்துள்ளார்.
ஏங்க இப்படி என்று ரோஸ்லினிடம் கேட்டால், ஜான் ஆப்ரகாமும், துஷார் கபூரும் இப்படி போஸ் கொடுத்தால் மக்கள் என்ன நினைப்பார்களோ அதே போலத்தான் என்னுடைய போஸையும் பார்ப்பார்கள் என்று சூப்பர் பதில் கொடுக்கிறார் ரோஸ்லின்.

நடிகை பீபாஷாவின் விலை 60 மில்லியன் ரூபா


கால்டன் சுப்பர் செவன் றகர் போட்டிகளின் இறுதிப் போட்டி (ஜூன் 03) நடைபெறும் தினத்தில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்காக இந்திய பொலிவூட் நடிகர், நடிகைகளை அழைத்துவர 150 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிக்காக பொலிவூட் திரையுலகின் பிரபல நடிகையான பிபாஷா பாசு, சமீரா ரெட்டி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிபாஷாவை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக அவருருக்கு 60 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
அவருடன் 15 பேர் அடங்கிய பரிவாரங்களும் இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 26, 7ஆம் திகதிகளில் கண்டி போகம்பரை விளையாட்டடரங்கில் நடைபெற்ற கால்இறுதிப் போட்டிகளின் போது வட இந்திய திரையுலக நட்சத்திரங்களான விவேக் ஒப்ராய், பிரீதி சின்டா ஆகியோர் அழைத்துவரப்பட்டிருந்தனர். இதற்காக 70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், எழுவர் கொண்ட ரக்பி போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களில் அதிக கொடுப்பனவு வடக்கு றக்பி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுதர்ஷன முதுதன்திரிக்கே வழங்கப்படுகிறது. அவருக்கு நாளொன்றுக்கு 74,000 ரூபா வழங்கப்படுகிறது.
இதனைத்தவிர சஜித் சாரங்க என்ற வீரருக்கு 65,000 ரூபாவும், திலிப் செலவத்திற்கு நாளொன்றுக்கு 59,000 ரூபாவும் வழங்கப்படுகிறது.
இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படுகிற கொடுப்பனவில் 10 மடங்கு அதிகமாக செலுத்தி இந்தப் போட்டிகளுக்கு வெளிநாட்டு வீரர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை வீரர்களுக்கு செலவிடப்படும் நிதியில் பன்மடங்கு நிதி வட இந்திய சினிமா நடிகை, நகர்களுக்கு வழங்கப்படுகிறது.

உல்லாசப் பயணிகளை கவர்ந்த கீரிமலை



யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தரிசனம் செய்கின்றமைக்கு மிக விரும்புகின்ற ஆலயங்களில் ஒன்றாக கீரிமலை உள்ளது.

88 இலங்கை தமிழர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம்.


இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலரைக் கொண்ட மற்றுமொரு அகதிகள் படகொன்று ஆட்கடத்தல்காரர்கள் பிடியில் சிக்காதுஅவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 88 இலங்கைத் தமிழ் அகதிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த படகு விரைவில் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை வந்தடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா, அதிகளவான இளைஞர்கள் படகில் இருப்பதாகக் கூறியுள்ளது.
இவர்கள் மீன்பிடி படகில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 211 புகலிடக் கோரிக்கையாளர்களே அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
ஆயினும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 586 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மதச்சுதந்திரத்திற்கு தடை மாணவிகள் பெற்றோர் விசனம்


நுவரெலியா நல்லாயன் மகளீர் கல்லூரியில் அண்மைக் காலமாக தமிழ் மாணவிகள் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது.. 
இவர் குறித்த தமிழ் மாணவிகளை நெற்றிப் பொட்டு வைக்கவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாடசாலையின் அதிபரும் ஒரு சிங்களராவார். அங்கு தமிழ், சிங்கள, மொழிகள் இரண்டிலுமே
பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்து இஸ்லாம், கிறிஸ்தவ, கத்தோலிக்க, பௌத்த மதங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் இங்கு கல்விபயின்று வருகின்றனர். எனினும் இந்து மதம் மற்றும் நெற்றிப் பொட்டு வைக்கும் மாணவிகள் அவற்றை வைக்கக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
அப்படியும் அவர்கள் வைத்துக் கொண்டு வந்தால் பலவந்தமாக பொட்டுகள் அழிக்கப்பட்டு குறித்த ஆசிரியை காலால் அவற்றை மிதிப்பதாகவும் பெற்றோர் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். 
இவ்விடயமாக கல்வித்துறை சார்ந்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். அன்பு நட்பு, ஒற்றுமை கண்ணியம் மதங்களையும் இனங்களையும் மதிக்கும் பண்புகளை கற்பிக்கும் பாடசாலையிலேயே இவ்வாறான இனவாத போக்கு கடைபிடிக்கப்படுவது வருந்தத்தக்க விடயமாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மீனவர் கடலுக்குச் செல்ல பாஸ் நடைமுறை


யாழ்ப்பாணம் மாதகல் கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல பாஸ் அனுமதியைப் பெற வேண்டும் என கடற்படையினர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பால் தொழிலுக்குச் செல்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாஸ் அனுமதியைப் பெறுவதற்கு மீனவரின் புகைப்படங்கள், அவர்களின் விவரங்கள், கடற்றொழில் உபகரணங்களின் விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென கடற்படையினர் கட்டளையிட்டுள்ளனர்.
இதனால் கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையிலுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழ ராணுவத்தினர்



யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தினர் யாழ். கட்டளைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது:
“பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், கற்றலுக்கான அச்சமற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒரு போதும் ராணுவத்தினரைப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துமாறு நாம் கோரவில்லை” எனத் தெரிவித்தனர்.
இதேவேளை மாணவர்கள் மீதான தாக்குதலை படைத்தரப்பே மேற்கொண்டிருந்ததாக மாணவர்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன் கடந்த காலங்களிலும் இத்தகைய ராணுவப்பிரசன்னம் பல்கலைக்கழக சூழலில் நிலவியோது மாணவர்கள் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டனர். மாணவர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டதுடன் அவர்கள் மீதான சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்திருந்தன.
தற்போது மீண்டும் ராணுவப் பிரசன்னம் யாழ். பல்கலைக்கழக சூழலில் ஏற்படுமானால் மீண்டும் மாணவர்கள் தற்போது உள்ளதைவிட அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இரா.சம்பந்தன் தான் தனி ஈழம் கோரவில்லை


தனி ஈழம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டின் போது 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இதன் போது இலங்கையில் தமிழர்களுக்கான தனி ராஜயம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து வானொலியொன்று கருத்து கேட்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

படையினரின் அத்துமீறல்களால் கிளி மக்கள் அவதி.


கிளிநொச்சி கிருஷ்ணபுர மக்கள் சிறஙீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரின் தொடரும் கெடுபிடிகள் கரணமாக அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி  கிருஷ்ணபுர மக்கள் தெரிவிக்கின்றார்.
கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் அலுவலகத்துக்கு அண்மையாக உள்ள படையினரின் பயிற்சி முகாம் ஒன்றினுள் நிலைகொண்டுள்ள படையினரே தொடர்ந்து கிருஷ்ணபுரம் மற்றும் அதை அடுத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் மாற்று வலுவுள்ள (அங்கவீனர்கள்) போராளிகளின் புனர்வாழ்வு நிலையமாக இருந்த நவம் அறிவுகூடம் காணப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படையினரே இவ்வாறு இடையூறை ஏற்படுத்துவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இரவு நேரங்களின் வீடுகளுக்குள் அத்துமீறி பிரவேசிப்பதாகவும், காணிகளுக்குள் வந்து மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள், இது சம்பந்தமாக கேள்வி எழுப்பியபோது அது தமது பயிற்சியின் ஒரு பகுதி என படையினர் அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் கூறினர்.
படையினர் தமது வீடுகள் மற்றும் காணிகளுக்குள் தங்கியிருப்பதால், தாம் அச்சத்துடன் இரவைக் கழிக்க வேண்டியுள்ளதாக, அந்தப் பிரதேச மக்கள்   செய்தியாளரிடம் மேலும் கூறினர்.
இது மட்டுமன்றி ஆயுதம் தரித்த படையினர் இவ்வாறு இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பிரவேசிப்பதால், குழந்தைகள் பெண்கள் அச்சத்துடன் இரவைக் கழிக்கதாக தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத கிராம அமைப்பொன்று, இதற்கு முன்னரும் கிறிஸ் பூதம் என்னும் பீதியை மக்கள் மத்தியில் படையினர் கட்டவிழ்த்து விட்டிருந்தனர் எனச் சுட்டிக்காட்டினர்.
ஆனைத்துலக ரீதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் படைப் பயிற்சி முகாம்களை நடாத்திக் கொண்டிருக்கும் ஒரேயொரு படையினர், சிறீலங்கா படையினராகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், கிளிநொச்சியில் மட்டுமன்றி தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் தமது ஆக்கிரமிப்பை பலப்படுத்த படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் அதிகம் ஈடுபட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சிக்கு எளிய பரிகாரம் இதோ!


பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பின்வரும் பரிகாரங்களை செய்வதால் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம்.
ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம்.
எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும்.
ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும்.
அகதிகளுக்கு உதவலாம். வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.
மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம்.
நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.

ஐபோனிற்க்கு போட்டியாக LG இன் HD LCD!



ஸ்மார்ட் போன் களில் அப்பிளின் ஐ போனுக்கு தனிச்சிறப்புக்கள் உண்டு. அதிலும் அதன் அதி துல்லியமான ரெட்டீனா திரைக்கு தனி ரசிகர்களே உண்டு.
அத்தகைய அப்பிள் ரெட்டீனா திரைக்கு சவால்விடும் வகையில் அதி துல்லிய எச்.டி எல்.சி.டி திரையை தனது ஸ்மார்ட் போன்களுக்காக தென்கொரியாவின் எல்.ஜி (LG) நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த எல்சிடி பேனல் மூலம் 1920 X 1080 பிக்ஸல் துல்லியத்தில் காட்சிகளை துல்லியமாக பார்க்க முடியும்.
இத் திரை இவ் ஆண்டின் நடுப்பகுதியில் சந்தைக்கு வெளிவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

facebook இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் 3 லட்சம் பேர்ள்


எதிர்வரும் ஜூலை மாதம் உலக அளவில் குறைந்தது 3 லட்சம் பேர் இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை (FBI) எச்சரித்துள்ளது. தாங்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை dcwg.org என்ற முகவரியில் ஓர் இணையத்தளத்தினை அமைத்துள்ளது.
இத்தளத்திற்கு சென்று உங்களது கணணி மால்வேர் வைரஸ் புரோகிராமினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெறலாம். டி.என்.எஸ் சேஞ்சர் (DNS Changer) மால்வேர் என அழைக்கப்படும் இந்த வைரஸைப் பரப்பியவர்கள், பல லட்சம் டொலர் பணத்தை இதன் மூலம் ஏமாற்றி சம்பாதித்துள்ளனர்.
இந்த வைரஸ் பாதித்த கணணி மூலம் இணைய இணைப்பில் செல்கையில், இந்த வைரஸ் நாம் காண விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும். அங்கு நம் ஆசையையும், ஆர்வத்தினையும் தூண்டும் வகையில் வாசகங்கள் தரப்பட்டு மேலும் சில லிங்க்குகள் தரப்படும். இதில் கிளிக் செய்து மாற்றிக் கொள்பவர்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் திருடப்பட்டு, அதன் மூலம் பண மோசடியும் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் டொலர் என எப்.பி.ஐ மதிப்பிட்டுள்ளது.
இந்த மால்வேர் பாதிப்பினை நீக்கும் கிளீன் சேவையை எப்.பி.ஐ இதற்கென அமைத்த இணையத்தளம் தருகிறது. அப்படியும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் 3 லட்சம் பேர் இதனால், பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள். ஜூலை மாதம் இவர்களால் தாங்கள் விரும்பும் இணையத்தளங்களுக்குச் செல்ல முடியாது என எப்.பி.ஐ செய்தியாளர் ஜென்னி தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 29 மே, 2012

யாழில் விடுதி உரிமையாளருக்கு நீதிமன்றம் பிடியாணை!


யாழ் மாநகர சபையிலுள்ள விடுதி உரிமையாளர் ஒருவரைக் கைதுசெய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது.

யாழ் நகரில் விருந்தினர் விடுதி என்ற பேரில் காதல் ஜோடிகளை தங்கவைத்து கலாச்சார சீரழிவுக்கு விடுதியை கொடுத்து விபச்சாரத்திற்கு உதவியதாக இந்த விடுதி உரிமையாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விடுதி இயங்குவதை தடை செய்யுமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் கலாச்சர சீரழிவு நடைபெறுகிறது. திருமணமாகாத பெண்கள், ஆண்கள் ஜோடியாக தங்குகின்றனர். அத்துடன் விடுதியில் தங்குபவர்களின் அடையாள பதிவினை மேற்கொள்வதில்லை. மது விற்பனை, புகைத்தல் என்பன நடைபெறுகிறது என இந்த வழக்கின் குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா எதிர்வரும் ஜுன் 16ம் திகதிக்கு முன்பாக இந்த விடுதியின் உரிமையாளரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.பி.எல்.வெற்றி…பிறந்த மேனியை காட்டிய பிரபல நடிகை



ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதால், நடிகை பூனம் பாண்டே இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.
21 வயது பூனம் பாண்டே
21 வயதான நடிகையும், பிரபல மாடல் அழகியுமான பூனம் பாண்டே கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்ற பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
ஆனால், இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றும், பூனம் நிர்வாணமாக தோன்றி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மீண்டும் அறிவிப்பு
இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடிகர் ஷாருக்கானின் `கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி வெற்றி பெற்றால் `நிர்வாண போஸ்’ கொடுப்பதாக மீண்டும் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை தோற்கடித்த `கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி `சாம்பியன்’ பட்டம் வென்றது.
நிர்வாண போஸ்
அதைத்தொடர்ந்து, இந்த முறை தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் 

பாலியல் சேட்டை 61 வயதுப்பிக்கு கைது


10 வயது சிறுமியை சிறுமியை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய காவி போர்த்திய பிக்கு ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.மஹியங்கனை, 51ஆம் கட்டை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சிறுமியை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய 61 வயதான காவி போர்த்திய பிக்கு இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

TNA முன்நாள் MP யயிலில்


கடந்த வருடம் திருக்கோயில் நடந்த கலவரம் தொடர்பாக பொத்துவில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்றைய தினம்மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்று மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் திருக்கோவில் பகுதியில் (12.8.2011) மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் பொலிஸார் இவ் மர்ம மனிதர்களை (கிறீஸ் மனிதன்) விடுவிக்க முயற்சியெடுப்பதாக அறிந்த பொதுமக்கள் மிகவும் கோபமுற்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்களைச் சுற்றி பொல்லுகள், தடிகள் சகிதம் திரண்ட பொது மக்கள் மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோசங்களை எழுப்பினர்.
பின்னர் பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.
இவ் வேளையில் அங்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு இப்பிரச்சினையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பொதுமக்கள் சார்பில் பொலிஸாருடன் பேசினார்.
மக்களின் எதிர்ப்பு அதிகமானதால் படையினர் ஸ்தலத்துக்கு வந்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர். பொது மக்கள் படையினரை கற்களால் திருப்பி தாக்கினர். பின்னர் மீண்டும் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்தே மக்களை விரட்டியடித்தனர் படையினர்.
இச்சம்பவத்தில் மக்களைத்திரட்டி கலகத்தில் ஈடுபட்டதாக திருக்கோயில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்திரநேருவை அழைத்திருந்தும் கூட அவர் லண்டன் சென்றிருந்ததால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை. இதனால் இவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் நீதிமன்றிற்கு ஆஜராகியிருந்தார். இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று மணித்தியாலங்கள் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பின்னர் சாட்சிகள் வரவழைக்கப்பட்டு சந்திரகாந்தனை பிணையில் செல்ல அனுமதியளித்தார். மீண்டும் அடுத்த மாதம் 30அம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

4 பேர் கோப்பாயில் கைது


யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் எந்த ஆவணங்களையும்வைத்திருக்காமையினாலும் இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நான்கு பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் யாழ். நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இவர்கள் யாழில் நடைபெறும் கொள்ளைச் சந்தேக நபர்களாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கோப்பாய் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சந்தேகத்திற்கிடாக முறையில் நடமாடிய நான்கு பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணையை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளே தமிழர்களின் பாதுகாவலர் ஏற்றுக் கொள்ளும் புத்த பிக்கு



தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா.வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடைமையை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமில தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
போரின் பின்னரும் வடக்கு கிழக்கில் தமிழர்களினதோ தெற்கில் சிங்களவர்களினதோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி வருவதுடன் சர்வதேச ரீதியிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது.
மனித உரிமை பிரச்சினைகள் நாட்டில் தற்போது வெளிப்படையாகவே இடம் பெறுகின்றன. குறிப்பாக நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி சூழல் திரும்பவில்லை. மாறாக கடத்தல், காணாமல் போதல், தாக்கப்படுதல் என பல்வேறு மனித உரிமை மீறல்களே நாட்டில் இடம்பெற்றன.
இதனை காரணம் காட்டி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளன.
முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இக்குற்றச்செயல்கள் குறைவாகவே காணப்பட்டன. தற்போது அது பல மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன், எந்தவொரு நாடுமே செய்யாத விடயமொன்றை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளது.
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமெழுதி, அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை திட்ட வரைவு அமைத்து அமெரிக்காவிற்கு கொண்டுச் சென்று காண்பித்தது.
உள்நாட்டில் யாருக்குமே மேற்படி செயற்திட்ட வரைவு காண்பிக்கப்படவில்லை.

திங்கள், 28 மே, 2012

மாணவி துஸ்பிரயோகம் ஆசிரியர் கைது


மாணவ, மாணவியர் 16 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மாவனெல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இவரை அடுத்த 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியரின் நடத்தை குறித்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதிகார சபையின் பொலிஸார் குறித்த ஆசிரியரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அவுஸ்ரேலியாவிறக செல்ல முற்பட்ட 113 கைது


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்ட 113 இலங்கையர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை அவுஸ்திரேலியா அல்லது வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சித்த ஆறு முகவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு மற்றும் காலி முகத்திடல் ஆகிய பகுதிகயில் வைத்து இன்று (28) அதிகாலை இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கடல் பகுதிக்கு ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் டொல்பின் வர்க்க வான்கள் ஏழு என்பன குற்ற விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியா செல்லவென ஒரு நபரிடம் தலா இரண்டு லட்சம் ரூபா பணம் முகவர்களால் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்களிடம் பிரதான முகவர் 316 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கண் திருஷ்டிக்கு உன்ன வழி



கண் திருஷ்டி என்பது மனதில் பொறாமை கொண்டு பார்ப்பவர்களின் எதிமறை அலைகளின் விளைவு ஆகும். இதனால் காரிய தடை, சிக்கல்கள், துன்பங்கள் ஏற்படுமென நம்பப்படுகிறது.
கண் திருஷ்டிக்கு என்ன செய்யலாம்?
எதிர்மறையான பார்வைகளின் கவனத்தை கலைத்து அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.
இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.
சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் கண்திருஷ்டி பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

வரப்போகிறது பேஸ் புக் ஸ்மார்ட் போன்



முன்னனி சமூக வலையமைப்பான பேஸ்புக்தனது வளர்ச்சியை இணையத்துடன் மாத்திரம் நிறுத்திவிடாது இலத்திரனியல் உற்பத்தியிலும் தடம்பதிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஃபேஸ்புக் சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
ஃபேஸ்புக் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்க ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்களை வளைத்துப் போட்டுள்ளது ஃபேஸ்புக்.
இதுவரை ஏனைய ஸ்மார்ட் போன்களில் வெறும் அப்ஸ் ஆக மாத்திரம் வலம் வந்த ஃபேஸ்புக், தற்போது ஸ்மார்ட் போனாக வடிவெடுக்கவுள்ளது.
சமூகவலைத்தளங்களில் ஏனைய சமூகதளங்களுக்கு பேஸ்புக் பாரிய தலையிடியாக உள்ள இந் நிலையில், இதன் ஸ்மார்ட் போன்கள் அப்பிள், சம்சுங் நிறுவனன்களுக்கு சவாலை ஏற்படுத்துமென எதிர்பர்க்கப்படுகிறது.

பெண்கள் கணவரிடம் மறைக்கவேண்டியது



காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் பெண்கள் தங்கள் கணவரிடம் சில விடயங்களை மறைக்கத்தான் வேண்டும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.
அதில் முக்கியமாக பெண்கள் தமது பெண் தோழிகளின் மொபைல் இலக்கங்களை கணவரிடமோ, அல்லது கணவரின் மொபைல் இலக்கத்தை நண்பிகளிடமோ பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக உங்கள் நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ஆபத்தில் முடிந்துவிடும். ஏனென்றால் அவர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். தவறான உறவுக்கும் வழிவகுத்துவிடும். நாம் எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதில் ரொம்பவே கவனமா இருக்கணும்.
என்று கூறுகிறார்கள் குடும்ப நல நிபுணர்கள்.
எச்சரிக்கையா இருங்க தோழிகளே!

மரணச் சனி நடக்கும் போது மடடாயம் மரணம்



ஒவ்வொரு மனிதனுக்கு‌ம் மூன்று அல்லது நான்கு முறை ஏழரைச் சனி வரும்.
முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள், இரண்டாவது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள்.
மரணச் சனி நடைபெறும் போது மரணம் ஏற்படுமென பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், அது அப்படி கிடையாது. பிறக்கும் போது சனி பகவான் யோகாதிபதியாக இருந்தார் என்றால், 4வது சனியையும் கடந்தும் உயிர் வாழலாம்.
அதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சனி சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும்.
ஆணவத்தில் பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் ஈகோவை குறைப்பதுதான் சனீஸ்வர பாகவானின் வேலை. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.

8 வயது கல்லூரி மாணவி கற்பளிப்பு



தென்மராட்சி நாவற்குழியில் எட்டுவயதுப் பாலகி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.
குறித்த சிறுமியின் உறவினர் எனத் தெரிவிக்கப்படும் 19 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை கடந்த 2 வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
எனினும் இந்த விடயம் எவருக்கும் தெரியாமலே இருந்தது. எனினும் நேற்றுமுன்தினம் சிறுமி பாடசாலையில் திடீரென மயக்கமடைந்து விழுந்தாள். இது தொடர்பாக ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரித்த போதே குறித்த இளைஞரால் தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வரும் விடயத்தை சிறுமி போட்டுடைத்தாள். இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் துரித நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நாவற்குழியைச் சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்தனர். இவர் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை விசாரணைக்கு உட்படுத்திய நீதிவான் குறித்த சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.