//]]>3

செவ்வாய், 17 ஜூலை, 2012

இலங்கை இராணுவத்தினர் இராணுவ கல்லூரியில் நடைபெறும் மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்

தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரியில் நடைபெறும்  கருத்தரங்கில் பங்கேற்றிருந்த இலங்கை இராணுவத்தினர் இன்று காலை மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

யாழ்.நகரில் ஆட்டோ விபச்சாரம்

யாழ்.நகரில் ஆட்டோ சேவையில் ஈடுபடும் சாரதிகளின் மூலம் அரங்கேற்றப்படும் விபச்சாரம்,காவல்துறையினர் கண்டும் காணதது போல் விட்டுவிடுகின்றார்கள்.
குறிப்பாக யாழ்.பஸ்நிலையத்தினை மையமாகக் கொண்டு இயங்கிவரும் விபச்சாரம் மாலை வேளைகளில் களைகட்டிக்காணப்படுகின்றது. பஸ்நிலையத்திற்குள் நிற்கும் விலை மாதுக்களிடம் நேரடியாகவே அல்லது பஸ்நிலையத்தினைசுற்றி நிற்கும் ஆட்டோ சாரதிகளின் மூலமாகவே விலை மாதுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இராணுவ மயமாக மாறும் வவுனியா


எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வவுனியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சம நேரத்தில் இடம்பெற்ற இரு தாக்குதல்கள்


வவுனியா சிறைக்குள் கொடூரமான முறையில் தாக்கி படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபனின் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை புதன்கிழமை நெல்லியடி பேருந்து நிலையத்தில் அமைதிவழியிலான ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்துவதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சிங்கள புலனாய்வாளர்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

மூர் வீதியில் கைக்குண்டுகள் மீட்பு

மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளிவாசல் பகுதிக்குப் பின் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குப் பின்புறமாக உள்ள மலசல கூடத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகளை நேற்று திங்கட்கிழமை காலை முருங்கன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.