//]]>3

வியாழன், 10 மே, 2012

150 ஆண்டுகளைத் தாண்டி வாழ மாத்திரை !



மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறத. இந்நிலையில் ஆரோக்யமான உடல்நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவூஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில் .
மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இதுமட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்யமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும் என்றார்.

1500 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவில் கண்டுபிடிப்பு.சீனாவில்



சீனாவின் பெரிய பாலைவனமான சிங்ஜாங்கில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சி குழுவினரின் 2 மாத கடுமையான முயற்சியால் நேற்று முன்தினம் வெளிகொண்டு வரப்பட்டது.
இந்த கோவில் சுற்றிலும் சதுர வடிவிலான 4 வராண்டாக்களுடன் கூடிய மைய மண்டபத்தை கொண்டு அமைந்துள்ளது. மண்டபத்தின் நடுவே சிதைந்த நிலையில் புத்தரின் பெரிய சிலை ஒன்று உள்ளது.
இந்தியாவில் புத்த மதம் தோன்றிய காலத்தில் இருந்த இந்திய கட்டிட கலையை அடிப்படையாக கொண்டு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. எனவே புத்தமத ஆய்வில் ஈடுபடும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இந்தியாவிலிருந்து புத்தமதம் சீனாவில் பரவிய காலம் குறித்த முக்கிய ஆதாரமாக இது இருக்கும் என சீனாவின் மூத்த அகழ்வாராய்ச்சியாளர் கூறினார்


குட்டை பாவாடை அணிந்ததால் மேடைகளில் திண்டாடும் பிரபலங்கள்



குட்டை பாவாடை அணிவது இப்பொழுது பிரபலங்களின் வாடிக்கையாகிவிட்டது. பொது நிகழ்ச்சிகளில் குட்டைப்பாவாடையோடு பங்குபற்றும்போது, எசக்கு பிசக்காக எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக உடலளவிலும், மனதளவிலும் திண்டாடும் கொரிய பிரபலங்களின் படங்கள் இணைக்கப்படுகின்றன.

கைகளில் வரையப்பட்ட அற்புத சிற்ப ஓவியங்கள் (Photos)


Body Painting முறையில், அற்புதமான கைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் இவை.

ரஜினி – தீபிகா இடையில் உறவு வலுப்பெறுகிறது?



கோச்சடையான் திரைப்படம் ரஜினியின் மகள் சௌந்தர்யாவால் இயக்கப்படுகிறது. இதில் சூப்பர் ஸ்டாருடன் தீபிகா படுகோன் கதாநாயகியாக இணைந்துள்ளார்.
படப்பிடிப்பு தளங்களில், தீபிகா படுகோன், சூப்பர் ஸ்டாரை ”அப்பா” என்றே அழைத்து வருகிறாராம்.
இந் நிலையில் சென்னையில் தற்போது நடைபெற்று வரும் கோச்சடையானின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பில் ரஜினியும் தீபிகாவும் மிக நெருக்கமாக காதல் செய்வது போல நடன அசைவுகள் வைத்திருந்தாராம் நடன இயக்குனர் சரோஜ்கான்.
அந்த நெருக்கமான காட்சியில் நடிக்க மறுத்துள்ள சூப்பர்ஸ்டார், தனது மகள் போன்ற தீபிகாவுடன் இவ்வாறான நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

பெரிய மொய் கொடுத்து ஸ்நேகாவுக்கு டும்… டும்…!விஜய் ரிவி



நடிகை ஸ்நேகா – பிரசன்னா ஜோடி திருமண பந்தத்தில் இணைய இன்னும் 24 மணிநேரத்துக்கும் குறைவான மணித்துளிகளே மீதமிருக்கின்றன.
இவ் நட்சத்திர ஜோடி திருமணம் நாளை, சென்னை வாணாகரம் வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
பெரும் என்ணிக்கையில் திரையுலக நடிகர் நடிகைகள் சமூகமளிப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் திருமண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இவர்களது திருமண நிகழ்ச்சியை நேரடியக ஒளிபரப்பும் உரிமையை விஜய் தொலைக்காட்சி பெரும் தொகை பணம் கொடுத்து வாங்கியுள்ளது.
திருமணம் நடப்பதற்கு முன்னர் பெரிய அளவில் மொய்ப்பணம் இவ் நட்சத்திர ஜோடிக்கு கிடைத்துள்ளது…!

நடிகைகள் இருவருக்கும் இந்த சண்டை தேவை தானா?



பெரிதாக தமிழ் சினிமா உலகில் எடுபட முடியாமல் திண்டாடுபவர்கள் நடிகை ஓவியாவும், ”யுத்தம் செய்” நடிகை தீபா ஷா வும். இவர்களின் மார்க்கெட் நிலைமை இப்படி இருக்க, நட்சத்திர நடிகைகள் போல் இருவரும் சண்டை போட்டு கொண்டுள்ளனர்.
”சில்லுனு ஒரு சந்திப்பு” படப்பிடிப்பில் ஓவியாவும், தீபா ஷா வும் நடித்து வருகிறார்கள்.
இதன் படப்பிடிப்பு திங்கட்கிழமை மாதவரத்தில் நடந்தது. அப்போது தீபா ஷாவுக்கும், ஓவியாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதால் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து தீபா ஷா வெளியேறியதாக செய்தி வெளியானது.
நடந்தது குறித்து தீபா ஷா கூறியதாவது…
இந்தப் படத்தில் எனது காட்சிகள் கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வந்தது. எனக்காக கேரவன் கொடுத்திருந்தனர்.
திடீரென்று அங்கு ஓவியா வந்தார். அரை மணி நேரம் மட்டும் ஓவியா உங்கள் கேரவனில் தங்குவார், அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று பட யூனிட்டை சேர்ந்தவர்கள் கூறினர்.
நானும் பரவாயில்லை என்று இருந்தேன். மலேசிய சேனல் ஒன்றுக்காக அவர் வீடியோ பேட்டி கொடுக்க இருப்பதாகக் கூறினார். நான் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தேன். கேரவனுக்குள்ளேயே கேமராவை கொண்டு வந்தனர். இது பிரச்னையாக இருக்கும் என்று சொன்னேன். ஐந்து நிமிடம் தான் என்றார்.
பிறகு இருபது நிமிடம் வரை போய்க்கொண்டிருந்தது. எனக்கு அடுத்த ஷாட் இருப்பதால் மேக்கப் போடுவதற்கு இடைஞ்சலாக இருந்ததை சொன்னேன். வெளியே போகச் சொன்னார்கள். இது எனக்காக கொடுக்கப்பட்ட கேரவன். நான் ஏன் வெளியே போகவேண்டும் என்றேன்.
பேசிக்கொண்டிருக்கும் போதே ஓவியாவின் மானேஜர் அருண், என்னை அடிக்கப் பாய்ந்தார். எனது மேக்கப் மேன் ஓடிப்போய் அவரை தடுத்தார். எனக்கு ஷாக் ஆகிவிட்டது.
இப்படியொரு மோசமான சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து நான் வெளியேறிவிட்டேன். பிறகு பட யூனிட், ஓவியாவையும் அருணையும் மன்னிப்புக் கேட்க வைத்தபிறகு நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இதுதான் நடந்தது.
நான் யுத்தம் செய் படத்தில் நடித்தபோதே எனக்கு மானேஜராக இருக்கிறேன் என்று அருண் கேட்டார். மறுத்துவிட்டேன். அந்த கோபத்தில் இந்த சம்பவத்தை பயன்படுத்தி மீடியாவுக்கு என்னை பற்றி தவறான செய்தியை அளித்துள்ளார். இதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
ஓவியாவின் மானேஜர் அருணிடம் கேட்ட போது…
கேரவனில் ஓவியா பேட்டி அளித்த போது, தீபா ஷா செல்போனில் சத்தமாகப் பேசினார். உடனே ஓவியா, பத்து நிமிஷம் அமைதியாக இருங்கள் என்றார்.
என்றாலும், அவர் பேசிக்கொண்டே இருந்ததால், இடைஞ்சலாக இருந்தது. நான் தீபா ஷாவிடம், அமைதியாக இருக்கும்படி சொன்னேன். அப்போது தீபா ஷாதான் என்னையும், ஓவியாவையும் தகாத வார்த்தையால் பேசினார். இது அங்கிருந்தவர்களுக்குத் தெரியும் என்றார்.

யாழ் கந்தர்மடம்அருள் மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத் தேர்த் திருவிழா 2012(வீடியோ)

யாழ். கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள அருள் மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத் தேர்த் திருவிழா (08.05.2012) காட்சிகளும் தண்டகைக்காட்சியும் 

பல நோய்களுக்கு பயன்படும் மங்குஸ்தான் தற்போது அருகிவருகிறது



பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும்
தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர்
சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள்
 உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள்
 குடலுக்கு நல்லது.

பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு
 வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல்
ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில்
 விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற
 தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி
 தடிமனாக இருக்கும்.

இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று
அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள்
 இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். மலேசியா,
 மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில்
 அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில்
 தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர்.
இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு

சீதபேதி

இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான்
பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக
அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்
சீதபேதி உடனே குணமாகும்.உடல் சூட்டைத் 
தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு
 உண்டு.
கண் எரிச்சலைப் போக்க

கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலை
முறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி
 அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால்
 சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள்
. இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால்
கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும்.
 இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும்
 உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில்
தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும்
கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.


மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு,
 அல்லது அதன் தோலை காயவைத்து பொடி
செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்
துர்நாற்றம் நீங்கும்.

மூலநோயை குணப்படுத்த

நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல்
அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு
 சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை
 பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண்
ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக
 எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது
 நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை
 சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட
பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும்
 அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான்
 பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில்
 மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது
 நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின்
தோலை காய வைத்து பொடிசெய்து பாலில்
 கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

சிறுநீரைப் பெருக்க

சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில்
தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும்.
சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம்
சிறந்த மருந்தாகும்.

* இருமலை தடுக்கும்
* சூதக வலியை குணமாக்கும்
* தலைவலியை போக்கும்
* நாவறட்சியை தணிக்கும்.

மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி

உடலுக்குத்தேவையான அனைத்து
 ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை
 உண்டு பயனடைவோம்.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்


வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் சிலவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுங்கத் திணைக்கள விசேட தேடுதல் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சனத் பெனாண்டோ தெரிவித்தார். தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து குறித்த பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனுள் சிகரெட், பீடி, புகையிலை, கஜு உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கூட மாணவிகளோடு செக்ஸ் லீலை: பாக்கிஸ்தானியர்களுக்கு 77 வருட சிறை !



9 பேர் கொண்ட பாக்கிஸ்தான் முஸ்லீம் குழு ஒன்று லண்டனில் திட்டமிட்ட வகையில் 13 வயது தொடக்கம் 15 வயதுடைய பள்ளிக்கூட மாணவிகளுடன் பாலுறவில் ஈடுபட்டுள்ளனர். இச் செய்தியை அதிர்வு இணையம் கடந்த வருடம் வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. லண்டனுக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றில் பாக்கிஸ்தான் உணவு விடுதி ஒன்றை நடத்திவந்த இந் நபர்கள், அருகில் உள்ள தமது பலசரக்கு கடை நண்பர்களுடன் இணைந்து சிறுமிகளுக்கு மது விற்பனை செய்துள்ளனர். இந் நபர்கள் சுமார் 5 சிறுமிகளை மதுபோதைக்கு அடிமையாக்கி பின்னர் போதைவஸ்துகளையும் கொடுத்து அவர்களுடன் பாலுறவில் ஈடுபட்டுள்ளனர். தாம் அனுபவித்த சிறுமியை தனது நண்பர்களுக்கு கொடுப்பதும், அவர்கள் அதை தனது நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம்.

இவ்வாறு ஒரு சிறுமியை பலர் பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளனர். இவர்கள் வலையில் இதுவரை 5 பள்ளிக்கூடச் சிறுமிகள் வீழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் 15 க்கும் மேற்பட்ட சிறுமிகளை தம் வலையில் சிக்கவைத்து அவர்களுக்கு மதுபோதை ஏற்றி இறுதியில் தமது இச்சையை தீர்த்துக்கொண்டுள்ளனர். இவர்களில் ஒரு சிறுமி பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். நேற்றைய தினம் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது. அதற்கு முன்னதாக நீதிபதி குற்றவாளிகளைப் பார்த்து சில விடையங்களைத் தெரிவித்தார்.

நீங்கள் இச் சிறுமிகளை, உங்கள் சமூகத்தவர் இல்லாத காரணத்தால் தான் கற்பழித்துள்ளீர்கள் ! அவர்கள் உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இப்படி நீங்கள் செய்திருப்பீர்களா ? என்று கேள்வி எழுப்பினார். இந்த பாக்கிஸ்தான் முஸ்லீம்களில் ஒருவர் உடனே எழுந்து, நீதிபதியை நீ ஒரு இனவாதம் பிடித்தே வேசி எனத் தகாத வார்த்தைகளினால் திட்டினார். இதனால் அவர் நீதிமன்றில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இவர்கள் அனைவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Yamaha வின் 2012 க்கான Fazer மோட்டார் சைக்கிள்



யப்பானிய கம்பனியான யமகா வின் இந்திய தயாரிப்பான 2012 ஆம் ஆண்டுக்குரிய ஃபேஷர் FZ-S வகை மோட்டார் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யமகா வுடன் போட்டிக்கு ஹீரோ, பஜாஜ், டீ.வி.எஸ் போன்ற மோட்டார் நிறுவனங்கள் இருந்த போதும் தனது விசேட தன்மை கொண்ட வடிவமைப்பால் யமகா நிறுவனம் இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
முந்தைய மாடல்களில் இல்லாத, சௌகர்யமான பின்புற இருக்கை, அகலமான பின் சில்லு டயர், அழகிய கிரபிக்ஸ் வேலைப்பாடுகள் போன்றவற்றை 2012 மாடல் கொண்டுள்ளது.
White, Black Cyber Green, Lava Red, Midnight Black ஆகிய வர்ணங்களில் இம் மாடல்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.
டெல்லி காட்சியறையில் இவ் 2012 ஃபேஷர் FZ-S மோட்டர் சைக்கிளின் விலை 76380 இந்திய ரூபாய்கள் என விலையிடப்பட்டுள்ளது.