//]]>3

திங்கள், 28 மே, 2012

மாணவி துஸ்பிரயோகம் ஆசிரியர் கைது


மாணவ, மாணவியர் 16 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மாவனெல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இவரை அடுத்த 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியரின் நடத்தை குறித்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதிகார சபையின் பொலிஸார் குறித்த ஆசிரியரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அவுஸ்ரேலியாவிறக செல்ல முற்பட்ட 113 கைது


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்ட 113 இலங்கையர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை அவுஸ்திரேலியா அல்லது வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சித்த ஆறு முகவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு மற்றும் காலி முகத்திடல் ஆகிய பகுதிகயில் வைத்து இன்று (28) அதிகாலை இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கடல் பகுதிக்கு ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் டொல்பின் வர்க்க வான்கள் ஏழு என்பன குற்ற விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியா செல்லவென ஒரு நபரிடம் தலா இரண்டு லட்சம் ரூபா பணம் முகவர்களால் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்களிடம் பிரதான முகவர் 316 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கண் திருஷ்டிக்கு உன்ன வழி



கண் திருஷ்டி என்பது மனதில் பொறாமை கொண்டு பார்ப்பவர்களின் எதிமறை அலைகளின் விளைவு ஆகும். இதனால் காரிய தடை, சிக்கல்கள், துன்பங்கள் ஏற்படுமென நம்பப்படுகிறது.
கண் திருஷ்டிக்கு என்ன செய்யலாம்?
எதிர்மறையான பார்வைகளின் கவனத்தை கலைத்து அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.
இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.
சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் கண்திருஷ்டி பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

வரப்போகிறது பேஸ் புக் ஸ்மார்ட் போன்



முன்னனி சமூக வலையமைப்பான பேஸ்புக்தனது வளர்ச்சியை இணையத்துடன் மாத்திரம் நிறுத்திவிடாது இலத்திரனியல் உற்பத்தியிலும் தடம்பதிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஃபேஸ்புக் சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
ஃபேஸ்புக் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்க ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்களை வளைத்துப் போட்டுள்ளது ஃபேஸ்புக்.
இதுவரை ஏனைய ஸ்மார்ட் போன்களில் வெறும் அப்ஸ் ஆக மாத்திரம் வலம் வந்த ஃபேஸ்புக், தற்போது ஸ்மார்ட் போனாக வடிவெடுக்கவுள்ளது.
சமூகவலைத்தளங்களில் ஏனைய சமூகதளங்களுக்கு பேஸ்புக் பாரிய தலையிடியாக உள்ள இந் நிலையில், இதன் ஸ்மார்ட் போன்கள் அப்பிள், சம்சுங் நிறுவனன்களுக்கு சவாலை ஏற்படுத்துமென எதிர்பர்க்கப்படுகிறது.

பெண்கள் கணவரிடம் மறைக்கவேண்டியது



காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் பெண்கள் தங்கள் கணவரிடம் சில விடயங்களை மறைக்கத்தான் வேண்டும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.
அதில் முக்கியமாக பெண்கள் தமது பெண் தோழிகளின் மொபைல் இலக்கங்களை கணவரிடமோ, அல்லது கணவரின் மொபைல் இலக்கத்தை நண்பிகளிடமோ பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக உங்கள் நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ஆபத்தில் முடிந்துவிடும். ஏனென்றால் அவர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். தவறான உறவுக்கும் வழிவகுத்துவிடும். நாம் எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதில் ரொம்பவே கவனமா இருக்கணும்.
என்று கூறுகிறார்கள் குடும்ப நல நிபுணர்கள்.
எச்சரிக்கையா இருங்க தோழிகளே!

மரணச் சனி நடக்கும் போது மடடாயம் மரணம்



ஒவ்வொரு மனிதனுக்கு‌ம் மூன்று அல்லது நான்கு முறை ஏழரைச் சனி வரும்.
முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள், இரண்டாவது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள்.
மரணச் சனி நடைபெறும் போது மரணம் ஏற்படுமென பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், அது அப்படி கிடையாது. பிறக்கும் போது சனி பகவான் யோகாதிபதியாக இருந்தார் என்றால், 4வது சனியையும் கடந்தும் உயிர் வாழலாம்.
அதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சனி சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும்.
ஆணவத்தில் பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் ஈகோவை குறைப்பதுதான் சனீஸ்வர பாகவானின் வேலை. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.

8 வயது கல்லூரி மாணவி கற்பளிப்பு



தென்மராட்சி நாவற்குழியில் எட்டுவயதுப் பாலகி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.
குறித்த சிறுமியின் உறவினர் எனத் தெரிவிக்கப்படும் 19 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை கடந்த 2 வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
எனினும் இந்த விடயம் எவருக்கும் தெரியாமலே இருந்தது. எனினும் நேற்றுமுன்தினம் சிறுமி பாடசாலையில் திடீரென மயக்கமடைந்து விழுந்தாள். இது தொடர்பாக ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரித்த போதே குறித்த இளைஞரால் தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வரும் விடயத்தை சிறுமி போட்டுடைத்தாள். இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் துரித நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நாவற்குழியைச் சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்தனர். இவர் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை விசாரணைக்கு உட்படுத்திய நீதிவான் குறித்த சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கண்ணைக்கட்டி மாணவி கற்பழிப்பு



மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறைப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த இப்பாடசாலை மாணவியை அதேபகுதியினை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கண்களையும் கைகளையும் கட்டி மறைவான இடத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சிலாவத்துறை காவல்துறையில் இது தொடர்பாக முறைப்பாடு செய்த நிலையில் சிறுமி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலைகொண்டுசெல்லப்பட்டுள்ளார்
இதேவேளை இந்த மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காவல்துறயினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் ஏ. யூட்சன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.