//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

சிறுவர் இல்லத்தில் உள்ள 29 சிறுமிகள் ஆர்ப்பாட்டம்


வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் உள்ள 29 சிறுமிகள் நேற்று இரவு 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது இல்லத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள காவலாளியை மாற்றவேண்டும், விடுதியின் இரவு மேற்பார்வையாளரை மாற்றவேண்டும், தமக்கான உணவுகள் சிறந்த வகையில் வழங்கப்படுவதில்லை, தமக்கு விளையாடுவதற்கு அனுமதிக்கப்படவதில்லை என தெரிவித்து அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந்


யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் அடையாளமாக திகழும் கல்வியை போதிக்கும் தமிழர் தாயகத்தின் உயர் கல்விக் கூடமான யாழ் பல்கலைக் கழக்கத்தில் இயக்க சக்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு (11-07-2-12) அன்று நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்தரை கவுக்க சதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளவர்கள் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமையல் எரிவாயு விலை குறைப்பு

இலங்கையில் சமையல் காஸின் விலை 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
லித்ரோ எனப்படும் அண்மையில் அரசாங்கத்தால் பங்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு நிறுவனவே இந்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

6.5 கோடி அபராதம் செலுத்தாது தப்பிய டோனி!


டோனி மீது 6.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்கை கர்நாடகா ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆண்கள் பற்றி பெண்களுக்கு தெரியாதவை


எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.
சொல்லப் போனால் ஆண்கள் நிறைய விஷயத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள்.

பில்லா 2 ஐ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் தல அஜித் க்கும் இடையில் சிறப்பான உறவுமுறை தொடரப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் மற்றையவரின் திரைப்படங்களை தவறாது பார்த்துவிடுவது வழமை. அந்த வகையில் சூப்பர் ஸ்டார், பில்லா 2 ஐ பார்த்துவிட்டு அஜித் இன் செயற்பாட்டை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வில்லியாக : ரம்யா


அருண் விஜய்யுடன் ‘தடையற தாக்க’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ரம்யா. ‘கண்டுபிடி, கண்டுபிடி’ படத்தில் சீமான் ஜோடியாக நடிக்கிறார். பாலு மகேந்திரா இயக்கும் படமொன்றிலும் நடிக்கிறார்.

கடலோரத்தில் உல்லாசம்


உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்கின்ற இடமாக இலங்கையின் கடற்கரைகள் விளங்குகின்றன.
இலங்கையின் பிரபல கடலோரங்களில் ஒன்று பெந்தோட்டை கடற்கரை. இது களுத்துறை மாவட்டத்தில் அமையப் பெற்று உள்ளது.
இங்கு கடந்த மாத நடுப்பகுதியில் கடலோர உல்லாச விழா இடம்பெற்றது.
இதன் போது எடுக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.

பாதுகாப்பற்ற நிலையில் 90,000 சிறார், சிறுமியர்கள்


இலங்கையில் தற்போது தொடர்ச்சியாக சிறார்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலையின் பழுதடைந்த பிணவறைக் குளிரூட்டி


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிணவறைக் குளீரூட்டிகள் யாவும் பழுதடைந்து விட்டதால் பிணவறையில் வைக்கப்பட்ட பெண்ணொருவருடைய சடலம் அழுகிப் பழுதடைந்துள்ளதால் வைத்தியசாலை நிர்வாகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது.

உளவாளிகளை புலிகள் படுகொலை செய்தனர்


உளவாளிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததுடன், தமிழ்வர்த்தக நிலையங்களில் களவாடினர் என முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் நிரோமி டி சொய்சாதெரிவித்துள்ளார்.

வர்ணக் கோழிக்குஞ்சுகள் வெள்ளையாகும் அதிசயம்


தென்பகுதியிலிருந்து வரும் சிங்கள வியாபாரிகள் முல்லைத்தீவுப் பகுதியில் மக்களைப் பல்வேறு வழிகளிலும் ஏமாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இராணுவத்தினரின் ஆதரவு இருப்பதால் சிங்கள வியாபாரிகளின் தில்லுமுல்லுகள் பற்றி வாய்திறக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் வீடியோ காட்சி பார்த்தவர்கள் கைது!



மூதூரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியை பார்த்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் போராளிகள் எனவும் தெரிய வருகின்றது.   அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியைக் கொண்ட 6 நிமிட மெமரி கார்ட்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.   இச்சந்தேக நபர்கள் இவ்வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தபோது மெமரி கார்ட் கைப்பற்றப்பட்டது. இச்சந்தேக நபர்கள் 50,000 ரூபா பணத்தையும் வைத்திருந்தனர்.   இவர்கள் மூதூர், பதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.   இச்சந்தேக நபர்களிடம் மூதூர் பொலிஸாரின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

நாடு பூராக 10,648 பேரைக் கைது செய்த பொலிஸார்!


நாடு முழுவதும் மேற்கொண்ட சுற்றி வளைப்புக்களில் இருந்து கடந்த 21 நாட்களுக்குள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 10,648 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ஹோஹண ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான பயிற்சிக்குழாமில்


புனர்வாழ்வு பெற்றுவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 16 பேர் அடுத்த வருடம் புதுடில்லியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான குழாமில் பயிற்சி பெற்றுவருவதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஹர்ஷா டி அபேகோன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியக் கனவு! மேலும் 41 பேர் திருமலையில் கைது



அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து அகதிகளாகச் செல்லுபவர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

கைத்தொழிற் பேட்டைகள் தொடர்பில் கலந்துரையாடல்


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினது கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழான தொழில் முதலீட்டாளர் சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.