//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

வாழ உதவி கோரும் யாழ். பொம்மை வெளி முஸ்லீம் மக்கள்



யாழ். பொம்மை வெளிப்பிரதேசத்தில் மீள்குடியமர்ந்த முஸ்லீம் மக்கள் எந்தவித வாழ்வாதார உதவிகளும் இன்றி பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் தேவை எல்லாம் நிரந்தரமாக வாழ்வதற்குரிய இருப்பிடங்களே. 

மிகவும் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இம்மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்ற முடியாமல் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருப்பதாக அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். 

தங்கள் மண்ணில் நிம்மதியாக வாழ்வதற்கு தமக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்ந்து 5 வருடங்கள் கட்ந்துள்ள போதிலும் வாழ்வதற்கான வீடு உட்பட அடிப்படை வசதிகள்,மின்சார வசதிகள் ஏதுமின்றி வாழ்வதாகவும், மீள் குடியமர்ந்து ஆறுமாத காலமாக வழங்கி வந்த நிவாரணமும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீளக்குடியமர்ந்த 330 முஸ்லீம் குடும்பங்களும் பள்ளிவாசலிற்கு சொந்தமான பள்ளக் காணியிலேயே வசித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மக்களிற்கு ஒரு பொதுக் கிணறும் இரண்டு மலசலகூடங்கள் மட்டுமே காணப்படுகின்றது. அத்துடன், குடிப்பதற்கான நீர் குழாய் மூலம் கிடைப்பதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தப்பிரதேசத்தினைச் சூழ உள்ள காணிகள் பள்ளக் காணிகளாக இருப்பதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் டெங்கு, மலேரியா போன்ற நுளம்பினால் பரவும் நோய்களும் பரவுகின்றதாகவும், பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 

இங்குள்ள குடும்பத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்க்ளாக இருப்பதாகவும், இதனால் குடும்ப வருமானம் போதாமல் உள்ளதாகவும், கூறும் பெண்கள், தமக்கு ஏதாவது ஒரு தொழில் வாய்ப்பினை பெற்றுத்தந்தால் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையினை குறைத்துக்கொள்வதுடன், தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர். 

மழைகாலங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் கூலி வேலைகளுக்கும் செல்ல முடியாதிருப்பதாகவும், அந்த நேரத்தில் குடும்பத்திலுள்ள குழந்தைகள் கூட பட்டினியுடனே இருப்பதாகவும் குறிப்பிடும் இந்தப் பெண்கள் சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கு தமக்கு உதவி புரியுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். 

நடிகை சார்மி பாலியல் தொழிலியாக



அனுஷ்கா, ஸ்ரேயா ஆகியோரைத் தொடர்ந்து நடிகை சார்மியும், தெலுங்கு படம் ஒன்றில் பாலியல் தொழிலியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் டென்த் கிளாஸ் படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சந்து. 

இவர் அடுத்து இயக்கும் படத்தில்தான் சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம். குடும்பச் சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் இளம்பெண் ஒருவர் மனதில் பல ஏக்கங்களைச் சுமந்தபடி சோகத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 

இந்நிலையில் அவளைச் சந்திக்கிறான் இளைஞன் ஒருவன். சிறந்த பாடகரும் எழுத்தாளருமான அவனைச் சந்தித்த பிறகு வாழ்க்கையில் புதிதாக ஒரு பிடிப்பு கிடைத்ததுபோல் உணர்கிறாள் அப்பெண். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் அது திருமணத்தில் முடிந்ததா, பாலியல் தொழிலில் இருந்து அப்பெண்ணால் வெளியே வர முடிந்ததா? என்கிற ரீதியில் போகிறதாம் இப்படத்தின் கதை. 

இப்படம் குறித்து டைரக்டர் சந்து அளித்துள்ள பேட்டியில், இந்தக் கதையை உருவாக்கியபோதே சார்மிதான் என் மனதில் முதலில் தோன்றினார். அவரை அணுகி கதையை சொன்னதும் எந்தவிதமான தயக்கமும் இன்றி நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தின் மூலம் அவரது நடிப்பாற்றலை ரசிகர்களால் முழுமையாக பார்க்க முடியும், என்று கூறியுள்ளார். 

நடிகை சார்மி அளித்துள்ள பேட்டியில், செக்ஸ் தொழிலாளியாக நடிப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அவர்களைப் போல் பரிதாபத்திற்குரிய ஜீவன்களைப் பார்க்க முடியாது. இப்படியொரு பாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அப்பெண்களின் உணர்வுகளையும் அவர்களின் பரிதாப நிலையையும் சமுதாயத்திற்கு எடுத்து சொல்ல முடியும். அந்த வகையில் பெருமையாக உணர்கிறேன், என்று கூறியிருக்கிறார். 

இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அதிகமுகா விலகல்



கண்துடைப்புக்காக இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து அதிகமுக விலகியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில் அதிமுக இடம்பெறாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். 

இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற வேண்டிய பல கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா புறக்கணிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். 

இந்த நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள பலரும் அரசின் நிலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். குழுவின் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பெரும்பான்மையினரை மீறி எதுவும் செய்ய இயலாது என்று கூறியுள்ளார். 

இந்த நிலையில் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகச் செல்லும் இந்தக் குழுவில் அதிமுக இடம்பெறாதது தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தைப் பிரதிபலிப்பதாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். 

யாழ் நல்லூரில் புதுவருடம்


யாழ் நல்லூரில் நடைபெற்ற புதுவருடப்பிறப்பு பூசை ஏராளமானவர்கள் பங்கேற்பு









நந்தன வருட கரும அனுஷ்டானங்கள்



நந்தன வருடம் சித்திரை 1ஆம் திகதி (13.04.2012) வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு அபரபக்க அட்டமித் திதியில், உத்தராட நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் சித்த நாமயோகத்தில், பாலவக்கரணத்தில், கன்னி லக்கினத்தில், கடக நவாம்சத்தில் இப்புதிய நந்தன வருடம் பிறக்கிறது. 

புண்ணிய காலம் - 

இன்று பிற்பகல் பிற்பகல் 1.45 மணி முதல் இரவு 9.45 நிமிடம் வரை 

தோஷ நட்சத்திரங்கள் - 

கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிடம், 1,2ஆம் பாதம், உத்தரம், மூலம், பூராடம், உத்தராடம் 

கைவிஷேட நேரங்கள் - 

15.04.2012 ஞாயிற்றுக் கிழமை 

முற்பகல் 8.42 - முற்பகல் 9.44 

முற்பகல் 9.56 - முற்பகல் 11.54 

பிற்பகல் 12.06 - பிற்பகல் 2.02 

16.04.2012 திங்கட்கிழமை 

முற்பகல் 9.10 - முற்பகல் 9.44 

முற்பகல் 9.52 - முற்பகல் 11.47 

பிற்பகல் 12.03 - பிற்பகல் 1.58 

காமதேனு மீது கோணேஸ்வரர்...


பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரத்தின் 6ஆம் நாள் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அலங்கரிக்கப்பட்ட காமதேனு (காராம் பசு) வாகனத்தில் கோணேஸ்வரப்பெருமான் சமேத மாதுமை அம்பாள் உடன் முருகப்பெருமான், கணபதி என நால்வர் சகிதம் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.

( செய்தி தமிள்மிரர் )

ஜனாதிபதி விடுத்துள்ள புதிய செய்தி



பிறந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டு எல்லோருக்கும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த புத்தாண்டாக அமையட்டும் என ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

புத்தாண்டுப் பண்டிகை மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையே குறிப்பிடத்தக்க பிணைப்பை ஏற்படுத்தும் ஒரு மிகப் பெரும் தேசிய விழாவாகும். புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு எமது உள்ளங்களுக்கு புதிய சிந்தனைகளையும் உணர்வுகளையும் கொண்டுவருகின்றது. 

அது எமது வாழ்க்கையையும் சமூகத்தையும் புதிய உறுதியுடனும் துணிவுடனும் பார்ப்பதற்கான வழியைக் காட்டுகின்றது. நட்புறவு மற்றும் ஐக்கியத்தினூடாக இப்புத்தாண்டு மேலும் அர்த்தம் நிறைந்ததாக மாறுகின்றது. எனவே இப்புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது எல்லோருக்கும் மத்தியில் நட்புறவையும் கூட்டுறவையும் கட்டியெழுப்ப எல்லா வகையிலும் முயற்சிப்பது அவசியமாகும். 

இப்புத்தாண்டுடன் இணைந் ததாகக் கடைப்பிடிக்கப்படும் பல்வேறு முக்கிய பாரம்பரியங்கள் குடும்பத்திற்கும் கிராமத்திற்குமிடை யேயான ஐக்கியத்தையும் புரிந் துணர்வையும் மேலும் பலப்படுத்துகின்றது. 

இந்த ஐக்கியம் தேசிய சுபீட் சத்திற்கான ஒரு மிக முக்கிய ஊக்க சக்தியாக அமைகின்றது. நாடு சுபீட்சத்தை நோக்கி முன்னேறி வருகின்ற சூழ்நிலையில் எல்லோரி னாலும் சுப நேரத்தில் கடைபிடிக்கப்படும் இந்தப் பாரம்பரியங்கள் ஒரு மிகப் பெரும் அருளாக அமையும். 

எனவே இப்புத் தாண்டின் பாரம்பரியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். 

இப்புதுவருட காலத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கும் முப்படையின ருக்கும் பொலிஸாருக்கும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து உத்தி யோகத்தர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

டக்ளஸ் தேவானந்தாவும் கோயிலும்



யாழ். அத்தியடி பிள்ளையார் கோவிலின் தேர்த் திருவிழா இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. 



காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூசை வழிபாட்டினையடுத்து தேர் பவனி காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. 


இந்நிகழ்வின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு வடமிழுத்தமை குறிப்பிடத்தக்கது.


    
 

கைதிகளைப் பார்வையிட விசேட ஏற்பாடு



தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சத்தீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சத்தீஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள சகல சிறைச்சாலைகளிலும் இவ்ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கான உத்தரவு சகல சிறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.

மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை



நேற்று (11) மாலை ஏற்பட்ட சுனாமி பீதியை அடுத்து மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்த நீர்கொழும்பு மீனவர்கள் இன்றும் (12) மீன்பிடி நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளனர். 

சுனாமி வரும் என்ற அச்சத்தில் நேற்று மாலை தமது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றதாகவும் அதனால் இன்று காலை மீன்பிடிக்கச் செல்ல படகுகளை தயார் செய்ய முடியவில்லை எனவும் நீர் கொழும்பு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒருநாள் மற்றும் நீண்டநாள் மீன்பிடியாளர்கள் என எவரும் இன்று நீர்கொழும்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரும்பு வியாபாரத்தில் சிறுவர்கள்



யுத்த காலத்தில் சேதமடைந்த துருப்பிடித்த இரும்புகளுக்கு தற்போது வர்த்தக சந்தையில் பெரும் கிராக்கி  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்னியிலிருந்து தினமும் பாவனைக்கு உதவாத பெருமளவு துருப்பிடித்த இரும்புகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் கொழும்பிற்கு குறைந்தது பத்து லொறிகள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் பழைய இரும்புகளை சேகரித்து வி்ற்பனை செய்யும் நடவடிக்கையில் சிறுவர் கூட்டம் அதிகளவில் ஆர்வம் காட்டிவருகி்ன்றது.

வறுமை காரணமாகவே கல்வியை  இடைநிறுத்திவிட்டு,  நாளாந்தம் வருமானம் பெறும் தொழிலில் சிறுவர்கள் ஈடுபட்டுவருகின்றனர் என நிவாரண பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போர் நடைபெற்ற காலத்தில் காங்கேசன்துறைமுகத்தில் கடலில் மூழ்கிய கப்பல்கள் தற்போது இந்திய அரசின் உதவியுடன் வெளியே  கொண்டுவரப்பட்டு கப்பலின்  இரும்புகளும் வெட்டி கொழும்பிற்கு கொண்டு செல்லப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயல் கிணற்றில் இளம் பெண் சடலம்



யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலத்தை இன்று (12) வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸார் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் ஆனந்தா வீதி பெரியபுலம் மானிப்பாயைச் சேர்ந்த 20 வயதான லதாரூபன் ஷாலினி என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவரது மரணத்திற்கு காதல் விவகாரம் காரணம் என அயலவர்களினால் தெரிவிக்கப்படுகின்ற போதும் அதன் உண்மை நிலைமை தெரியவரவில்லை. 

சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாகம் நீதவான் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு மானிப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.  

மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி பரிசு



அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாண அரசு அதிக பரிசு கொண்ட லாட்டரி ஒன்றை வெளயிட்டு இருந்ததது. இதன் முதல் பரிசு ரூ.3 ஆயிரம் கோடி.


லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது. அதில் முதல் பரிசு பெற்ற லாட்டரியை மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் சேர்ந்து வாங்கி இருந்தனர். அவர்களுக்கு வரி போக தலா ரூ 750 கோடி பணம் கிடைக்கும்.

பரிசு கிடைத்த 3 பேரும் இனி ஆஸ்பத்திரி வேலையை விட்டு வேறு தொழில் செய்ய போவதாக கூறியுள்ளனர்.

வரி அதிகரிப்பு மக்கள் சிரமம்



வாகன இறக்குமதிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருளுக்கான கேள்வியை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரி திருத்தத்தின் பிரகாரம் 2009 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து முப்பத்து ஒன்பதாயிரமாக காணப்பட்ட மோட்டார் சைக்கிள் பதிவிற்கான கட்டணம், 2011 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று பதிணெட்டு ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.

இதேவேளை 2009 ஆம் ஆண்டில் 34,563 ஆக காணப்பட்ட முச்சக்கரவண்டி பதிவிற்கான கட்டணம், 2011 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து முப்பத்தேழாயிரத்து எண்ணூற்று பதினாறாக உயர்த்தப்பட்டது.

வசந்த சமரசிங்க- தலைவர் அனைத்து நிறுவன ஊழியர் சங்கம்

தற்போது வாகனம் இல்லாதவர்களுக்கு அவை இல்லை. வாகனம் உள்ளவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு உள்ளன. அவற்றில் வரையறை விதிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை ஆனால் அன்றாடம் வேலைக்குச் செல்பவர்களும், விவசாயிகளும், சுயதொழில்களில் ஈடுபடுபவர்களுமே மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்கின்றனர். அதற்கும் வரி அறவிடுகின்றனர்.

கயந்த கருணாதிலக்க - ஊடகப் பேச்சாளர் ஐக்கிய தேசியக் கட்சி

இந்த வரி அதிகரிப்பின் பாதிப்பினை இப்போது அவதானிக்க முடிகின்றது. குறைந்த பட்சமாக மோட்டார் சைக்கிளொன்றின் விலையில் எண்பதிணாயிரம் முதல் ஒரு இலட்சம் வரையில் அதிகரிப்பு ஏற்படலாம். அத்துடன் முச்சக்கரவண்டியொன்றின் விலையானது ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவாக உயர்வடையலாம். இந்த வரி அதிகரிப்பினூடாக விலையிலும் உயர்வு ஏற்படும் என்பது தற்போதும் பதிவாகின்றது. அரசாங்கத்தின் வரி வருமானத்தை மில்லியன் கணக்கில் உயர்த்திக் கொள்வதற்காகவே மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு வரி அறவிடப்படுகின்றது. இதனாலேயே சாதாரண மக்களினால் செலுத்த முடியாத அளவிற்கு வரியை அறிவிடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.


செம்மரக்கட்டைகள் இராமேஸ்வரத்தில் மீட்பு



செம்மரக் கட்டைகள் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து இராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் பொலிஸார் இராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்குரிய நாட்டுப்படகை கியூ பிரிவு பொலிஸார் சோதனையிட்டனர். அப்படகில் 7அடி நீளத்தில் 62 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு மரக்கட்டையும் சுமார் 20 முதல் 30 கிலோ எடை கொண்டதாக இருந்தது. 

இதன்பின்னர் மரக் கட்டைகளுடன், நாட்டுப்படகை பொலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செம்மரக் கட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும், படகு இராமேஸ்வரம் நடராஜபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது. 

இக்கட்டைகளை இராமேஸ்வரம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் கணேசன் பார்வையிட்டார். இதன் சர்வதேச மதிப்பு சுமார் இந்திய ரூ. 1 கோடி இருக்கும் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர். மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் க்யூ பிரிவு பொலிஸார் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் கடத்தலுக்கு உடந்தையான படகு உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். 

கொழும்பில் வௌ்ளம் இரத்மலானையில் அதிக மழைவீழ்ச்சி பதிவு



கொழும்பில் இன்று முற்பகல் பெய்த மழை காரணமாக கிராண்ட்பாஸ் மஹவத்தை பிரதேசம் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளது.

வௌ்ளநிலைமை காரணமாக சுமார் 600 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்  சரத் லால் குமார குறிப்பிட்டுள்ளார்.


அந்த பிரதேசத்தின் கால்வாய் ஒன்று தடைப்பட்டதால் வௌ்ளநீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ இணைப்பதிகாரி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதியின் நிலைமை குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


இதேவேளை இன்று காலை 8.30ற்கு நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இரத்மலானை பிரதேசத்திலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஓவியர் கட்டிய பண வீடு


பொதுவாக வீடு மற்றும் அலுவலக கட்டிடங்களை செங்கல், சிமெண்ட், மணல் கொண்டு கட்டுவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. சில இடங்களில் மரத்தை கொண்டு அமைப்பதுண்டு.


இதே நேரத்தில் அயர்லாந்து நாட்டில் டூப்ளின் நகரை சேர்ந்த பிராங் புக்லீய் என்பவர் கிழிந்த பணம் நோட்டுகளை கொண்டே வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். செங்கல்களுக்கு பதில் பணம் நோட்டு கத்தைகளை அடுக்கி இந்த வீடு அமைந்திருக்கிறது.
இதற்காக அவருக்கு அந்த நாட்டின் மத்திய வங்கி ரூ.8 ஆயிரத்து 200 கோடி மதிப்புள்ள (1.4 பில்லியன் யூரோ) கிழிந்த நோட்டுகளை வழங்கியுள்ளது. மேலும் கதவு, ஜன்னல் அமைப்பதற்கான மரங்களை நண்பர்கள் சிலர் நன்கொடையாக கொடுத்து உதவி இருக்கிறார்கள்.
இந்த உதவிக்கரத்தால் பிராங் தனது 3 அறைகளைக் கொண்ட இல்லத்தை வெறும் ரூ.2,100 செலவிலேயே வெற்றிகரமாக கட்டி முடித்துவிட்டார். ஓவியரான அவர் இந்த வீட்டை நேரில் வந்து பார்த்து ரசியுங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கிறார்.

உளவு விமான அணியை நிறுத்தியது இந்தியா



சிறிலங்காவுடனான கடல் எல்லை மற்றும் கிழக்கு கடற்பரப்பின் மீது கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதற்காக, புதிய ஆளில்லா உளவு விமான அணியொன்றை இந்தியா - சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக - உச்சிப்புளியில் நிறுவியுள்ளது.

இராமநாதபுரத்தில் உள்ள உச்சிப்புளியில் இயங்கும் ‘ஐஎன்எஸ் பருந்து‘ என்று அழைக்கப்படும் இந்தியக் கடற்படையின் விமானதளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து இந்தப் புதிய அணி செயற்படத் தொடங்கியுள்ளது. 


இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா இந்த ஆளில்லா உளவு விமான அணியை ஆரம்பித்து வைத்தார். 


INAS 344 என்று அழைக்கப்படும் இந்த அணி, இந்தியக் கடற்படையின் மூன்றாவது ஆளில்லா உளவு விமான அணியாகும். 


இந்தத் தளத்தில் இருந்து முதற்கட்டமாக, இஸ்ரேலியத் தயாரிப்பான மூன்று உளவு விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. 

124 முறைப்பாடுகள்



புத்தாண்டு காலத்தில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் தொடர்பில்  124 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் கடந்த ஒரு வாரகாலத்திற்குள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிக கட்டணம் அறவிடல், பயணச்சீட்டு வழங்கப்படாமை,  உரிய நேரத்தில் சென்றடைய வேண்டிய இடத்தை சென்றடையாமை, வரையறையற்ற முறையில் பயணிகளை ஏற்றுதல் மற்றும் குளிரூட்டிகள் செயற்படாமை போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இந்த முறைப்பாடுகளுக்கு அமைய பஸ் சாரதிகள் நடத்துனர் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பதிவு செய்யப்பட்ட அடையாள  அட்டைகளை இரத்து செய்வதோடு போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக  இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சங்கக்காரவுக்கு 2 உயர் விருதுகள்




இன்று புதன்கிழமை இத்தெரிவுகள் அறிவிக்கப்பட்டன. 

34 வயதான குமார் சங்கக்கார கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் 2267 ஓட்டங்களைக் குவித்தார். அவர் உலகத் தரம் வாய்ந்த விக்கெட் காப்பாளராகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்கத்கது.

கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகையானது 1864 ஆம் ஆண்டுமுதல் வெளியிடப்பட்டு வருகிறது. 

1889 ஆம் ஆண்டு முதல் அச்சஞ்சிகையின் ஆசிரியரினால் வருடத்தின் 5 சிறந்த வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர். 2004 ஆம் ஆண்டிலிருந்து உலகின் முன்னிலை வீரருக்கான விருதும் வழங்கப்படுகிறது. இவ்விரு விருதுகளையும் ஒரே தடவையில் வென்ற முதலாவது வீரர் குமார் சங்கக்கார ஆவார். 

கன்னி எனக்கூறி மூன்றாம் திருமணம் செய்துகொண்ட இலங்கை பெண் சிக்கலில்!



இரண்டு முறை திருமணம் முடித்து குழந்தைகளுக்கு தாயான இலங்கை பெண் ஒருவர் குவைத்தில், இந்திய ஆணை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து குவைத் ஊடகமொன்று வெளியட்டுள்ள செய்தி பின்வருமாறு, 

இந்திய ஆண் கதை சொல்கிறார்- "நான் இலங்கை பெண்ணை காதலித்தேன். அவள் இரு முறை திருமணம் ஆனவள் என எனக்குத் தெரியாது. தான் ஒரு கன்னிப் பெண் எனவும் என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்தாள்." என இந்திய ஆண் குறிப்பிட்டுள்ளார். 

நீதிமன்றம் சென்று திருமணம் செய்து கொண்டபோது தான் இதற்கு முன்னர் திருமணம் ஆகாதவள் என்றும் கன்னிப் பெண் என்றும் குறித்த இலங்கை பெண் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்த நிலையில் சில விசாரணைகளில் பின் அவள் கன்னிப் பெண் அல்ல எனவும் இரண்டு முறை திருமணமாகி பல பிள்ளைகளுக்கு தாயானவள் எனவும் தெரிந்து கொண்ட இந்திய ஆண் அதிர்ச்சியடைந்துள்ளார். 

உடனடியாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இந்திய ஆண், தான் தனது காதலை மறந்து விட்டதாகக்கூறி சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார்

இதனையடுத்து குவைத் பொலிஸால் இலங்கை பெண் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சாதுர்யமாக தப்பிக்க முயன்ற ஒக்டோபஸ்


மீனவர்களால் பிடிக்கப்பட்ட ஒக்டோபஸ் ஒன்று மீன்பிடிப்படகிலிருந்து சாதுர்யமான முறையில் தப்பிக்க முயலும் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


கடல் வாழ் உயிரினமான ஒக்டோபஸ்கள் எட்டுக்கால்களை கொண்டனவாகும். இவற்றை தமிழில் சாக்குக்கணவாய்கள் என அழைப்பதுண்டு. ஒக்டோபஸ்களில் ஏறத்தாழ 300 வகையான இனங்கள் காணப்படுகின்றன.
இவை 5 சென்டி மீற்றர்களிலிருந்து 5 மீற்றர்கள் வரையான அளவுகளில் காணப்படுகின்றன. மேலும் இவை நான்கு தொடக்கம் ஐந்து வரையான ஆண்டுகள் உயிவாழக் கூடியனவாகும்.


Pages 381234 »