யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலத்தை இன்று (12) வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸார் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஆனந்தா வீதி பெரியபுலம் மானிப்பாயைச் சேர்ந்த 20 வயதான லதாரூபன் ஷாலினி என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது மரணத்திற்கு காதல் விவகாரம் காரணம் என அயலவர்களினால் தெரிவிக்கப்படுகின்ற போதும் அதன் உண்மை நிலைமை தெரியவரவில்லை.
சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாகம் நீதவான் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு மானிப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக