//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

கைதிகளைப் பார்வையிட விசேட ஏற்பாடு



தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சத்தீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சத்தீஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள சகல சிறைச்சாலைகளிலும் இவ்ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கான உத்தரவு சகல சிறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக