//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

உளவு விமான அணியை நிறுத்தியது இந்தியா



சிறிலங்காவுடனான கடல் எல்லை மற்றும் கிழக்கு கடற்பரப்பின் மீது கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதற்காக, புதிய ஆளில்லா உளவு விமான அணியொன்றை இந்தியா - சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக - உச்சிப்புளியில் நிறுவியுள்ளது.

இராமநாதபுரத்தில் உள்ள உச்சிப்புளியில் இயங்கும் ‘ஐஎன்எஸ் பருந்து‘ என்று அழைக்கப்படும் இந்தியக் கடற்படையின் விமானதளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து இந்தப் புதிய அணி செயற்படத் தொடங்கியுள்ளது. 


இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா இந்த ஆளில்லா உளவு விமான அணியை ஆரம்பித்து வைத்தார். 


INAS 344 என்று அழைக்கப்படும் இந்த அணி, இந்தியக் கடற்படையின் மூன்றாவது ஆளில்லா உளவு விமான அணியாகும். 


இந்தத் தளத்தில் இருந்து முதற்கட்டமாக, இஸ்ரேலியத் தயாரிப்பான மூன்று உளவு விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக