//]]>3

சனி, 19 மே, 2012

அயலவரின் தூக்கத்தை கெடுத்த sex வீடியோ

இந்தச் சம்பவம் பிரித்தானியாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டில் செக்ஸ் வைத்துக் கொள்வதால் தங்களது தூக்கம் தொலைவதாக தெரிவித்த அயலவர்கள் சத்தமாக செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஜோடியின் ஓடியோவை ஒலிப்பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். தற்போது அந்த ஓடியோ இணையத்தில் செம ஹிட் ஆகியுள்ளது. 26 வயதான Lee Moore என்பவர் எடுத்த ஓடியோ தான் இணையத்தில் மில்லியன் கணக்கானோரைக் கவர்ந்துள்ளது.

ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையில் நடந்தது என்ன


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார்.
வொசிங்டனில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கங்கள் வருமாறு-
 கேள்வி – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இன்றுகாலை இராஜாங்கச் செயலர் நடத்திய சந்திப்பு குறித்து தெளிவுபடுத்த முடியுமா?
நுலன்ட் – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இராஜாங்கச்செயலர் இன்றுகாலை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மிகவும் முக்கியமான – நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விரிவான அணுகுமுறை, அதைப் பகிரங்கப்படுத்துவது குறித்த அரசின் திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தார்.
தனியே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி, உண்மையான வெளிப்படைத்தன்மை, திறந்த, பொதுவான செயற்பாடு அவசியம் என்று இராஜாங்கச்செயலர் ஊக்கப்படுத்தினார்.
பொறுப்புக்கூறலையும் கவனத்தில் கொள்ள வேண்டும், நல்லிணக்கத்தை பலப்படுத்த சிறிலங்காவுக்குள்ளேயும் வெளியேயும் பொது நம்பிக்கையை ஏற்படுத்தும் நகர்வுகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம் என்றும் அவர் கூறினார்.
தற்போது இதனை நீங்கள் இதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
நடைமுறைப்படுத்துவது தொடர்பான உறுதியான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை உங்கள் மக்களுக்கு, உலகிற்குக் காட்ட வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
வடக்கில் படைக்குறைப்பு, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல், மனிதஉரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுவான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எப்போதும் போலவே வலியுறுத்தினார்.
ஈரானின் மசகு எண்ணெயில் சார்ந்திருப்பதை குறைப்பதற்கான சிறிலங்காவின் நகர்வுகள் குறித்தும், அவர்கள் கருத்துகளைப் பரிமாறினர்.
இந்த விடயத்தில் சிறிலங்கா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் ஊக்குவித்தோம்.
கேள்வி – பொறுப்புக்கூறுதல் பற்றிக் குறிப்பிட்டபோது, போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட – போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள் குறித்து அவர் பேசினாரா?
நுலன்ட்- நாம் பொறுப்புக்கூறல் என்று பேசும்போது இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே அர்த்தம்.
கேள்வி – எனக்குத் தெரியும், ஆனால் அவர் (ஹிலாரி) எப்படி அதுபற்றிக் கேட்டார்?
நுலன்ட் – அவர் பொதுவான சொற்களிலேயே பேசினார். பொப் பிளேக், மைக் போஸ்னர் ஆகியோருடன் அவர்கள் விரிவாகப் பேசுவதற்கு தனியான சந்திப்புகள் இருந்தன.
கேள்வி – பொதுச்சந்திப்பிலும், தனிப்பட்ட சந்திப்பிலும், அவர்கள் பேசுவதற்கு செலவிட்ட நேரம் அதிகமா?
நுலன்ட்- இல்லை.
கேள்வி – எனவே, அது ஏறத்தாழ சமம் என்கிறீர்களா?
நுலன்ட் – அவர்கள் பொதுவாக 10 நிமிடங்கள் பகிரங்கமாகவும், தனியாக 35 நிமிடங்கள் தனியாகவும் பேசினார்கள்.
கேள்வி – 10 நிமிடங்கள் நடந்த பகிரங்க சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், தான் பேசுவதற்கு எட்டரை நிமிடங்களை எடுத்துக் கொண்டாரே. அவர் தனிப்பட்ட அட்டவணையில் ஆதிக்கம் செலுத்தியதாக கருதுகிறீர்களா?
நுலன்ட் – இல்லையில்லை…. அது ஒரு சமமான கலந்துரையாடல்