//]]>3

ஞாயிறு, 13 மே, 2012

அமெரிக்க தூதரகத்தில் போராளி தஞ்சம்-கருணா மீது தற்கொலை தாக்குதல் நடத்த வந்தவர்


கடந்த இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு JEEVARATNAM ; DOB: AUGUST 25th 1983 KATTANKUDDY, Batticaloa, Sri Lanka; National Identity Card Number: 832383171V.
என்ற அடையாளத்தை தரித்த போராளி ஒருவர் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்ற போது அவர் மீது தற்கொலைதாக்குதலை நடத்தி அவரை கொலை செய்யும் படி புலிகள் பணித்திருந்தனர் .
அதை அடுத்து அவர் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் அனுப்பி வைக்க பட்ட நபர் தாக்குதலை நடத்தாமல் அமெரிக்கா தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் .இவை தொடர்பான செய்தியினை உடனடி விரைந்து வசிங்கடனுக்கு தெரிய படுத்த பட்டுள்ளது .
தனது பதின் ஐந்தாவது வயதில் போராட்டத்தில் இணைந்த நபர் இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு கரும்புலிகள் அணியில் இணைத்துபயிற்று விக்க பட்டார் .ஆறுமாத காலங்களாக கருபுலி தாக்குதல் அணிகள் பயிற்சி இடம் பெற்றுள்ளது .நாள் இரண்டு மணித்தியாலங்கள் என வழங்க பட்டு வந்துள்ளது .
இந்த செய்தியினை கொழும்பு தூதரகம் வசிங்கடனுக்கு அனுப்பி வைக்க பட கேபிள் குறிப்பினை கையபடுத்திய விக்கிலீக்ஸ்இந்த பரபரப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது .
இவர் டக்கிலஸ் மீது தாக்குதல் நடத்த அனுப்பி வைக்க பட்டிருந்தார் என அதில் சுட்டி காட்ட பட்டுள்ளது !

கையில் ஓட்டை போட்டு ஐ பொட் ஐ பொருத்திய இளைஞன்



தற்போது அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. ஐ போன் வாங்குவதற்காக தனது சிறுநீரகத்தை விற்ற இளைஞன், தனது கற்பை விலை பேசிய பெண் என பலரை பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஒருவர், அவருக்கு ஐ பொட் எப்போதும் தன்கூடவே இருக்க வேண்டும் என்று விருப்பமாம். கையில் வார் கொண்டு இணைக்க விரும்பாத இவர், வில்லங்கமான ஓர் முயற்சியில் இறங்கினார்.
கை மணிக்கட்டில் துளை போட்டு அதில் வலிமையான காந்த நட்டுக்களை பொருத்தி, அதிலே ஐ பொட் ஐ பொருத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்யும் விமானத்தின் உட்புறம் எப்படி இருக்கும்?



அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்யும் உத்தியோகபூர்வ விமானமாக எயார்ஃபோஸ் வன் (AirForce One) பயன்படுகிறது.
அதிஉயர் சொகுசு வசதி செய்யப்பட்ட இவ் விமானம் அதி உச்ச பாதுகாப்பு வலையமைப்பை உள்ளடக்கியுள்ளது.
இவ் விமானத்தை பராமரிக்க மணித்தியாலத்துக்கு £116,000 செலவாகிறது. மேலும் இதில் 87 தொலைபேசிகள், 19 தொலைக்காட்சிகள், ஜிம், ஆடம்பர ஹொட்டெல் என்பனவும் உள்ளன
இவ் விமானத்தின் உட்பாகம் எப்படி இருக்கும்?

சில திருமணமான பெண்கள் கள்ளக் காதலனை நாடுவது ஏன்?



திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.
தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.
ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.
தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்

5 நாட்களுக்கு மூடப்படும்! காலி வீதி


நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த மே மாதம் 19ஆம் திகதி வெற்றி விழா கொண்டாட்ட பேரணியை நடாத்தும் பொருட்டு காலி வீதி மூடப்படவுள்ளது.
காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்கும் பழைய பாராளுமன்றக் கட்டிடத்திற்கும் இடையிலான வீதி அவ்வப்போது மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாளை மே 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான ஐந்து நாட்களுக்கு பாதை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நாட்களில் காலை 6.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதிகளில் அவ்வப்போது பாதை மூடப்படவுள்ளது.
இதன் போது மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனர்.

விடுதலையான தமிழ் பெண் மீண்டும் சிறையில்..!



பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு, செங்கலடி உமா மில் ரோட்டைச் சேர்ந்த சிவராணி சந்திரகுமார் என்ற 30 வயதான பெண்ணுக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது.
 2008 ஆகஸ்ட் 29ம் திகதி, குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பாதுகாப்புப் படையினருடைய கடுமையான சித்திரவதைகளின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
 கடந்த நான்கு வருடங்களாக சிறையில் கடுமையான சித்திரவதைக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட இவர், அதனால் தற்போது ஒரு மனநோயாளியாகியிருப்பதாக இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி இவர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும், அவரைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராததால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த 8ம் திகதி குறித்த பெண்ணை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரது மனோநிலையைக் கருத்திற்கொண்டு அவரை அங்கொடை மனநோயாளர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும் அவர் மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டிருப்தனால், அவரது நலன்களைக் கவனிப்பதற்காக யாரும் முன்வராமையால் அவரை அனுமதிக்க மருத்துவமனை வட்டாரம் மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள அவரது உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
எனவே குறித்த இந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பி தேகாரோக்கியத்துடனும் மன நலத்துடனும் வாழ்வதற்கு சமூக பொதுநல அமைப்புகள், மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புகளை முன்வர வேண்டுமென அரசியல் கைதிகளின் வெலிக்கடை பெண்கள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிலிம்பேர் பெற்ற தமிழ் நடிகர்களின் முழுமையான விபரம்



1972 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் பிலிம்பேர்விருது பெற்றவர்களும், அவர்கள் தேசிய விருது பெற காரணமான திரைப்படங்களின் விபரங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
2010 விக்ரம் – ராவணன்
2009 பிரகாஷ் ராஜ் – காஞ்சிவரம்
2008 சூர்யா – வாரணம் ஆயிரம்
2007 கார்த்தி – பருத்திவீரன்
2006 அஜித் குமார் – வரலாறு
2005 விக்ரம் – அந்நியன்
2004 சூர்யா – பேரழகன்
2003 விக்ரம் – பிதாமகன்
2002 அஜித் குமார் – வில்லன்
2001 விக்ரம் – காசி
2000 கமல்ஹாசன் – ஹே ராம்
1999 அஜித் குமார் – வாலி
1998 சரத்குமார் – நட்புக்காக
1997 சரத்குமார் – சூர்யவம்சம்
1996 கமல்ஹாசன் இந்தியன்
1995 கமல்ஹாசன் – குருதிப்புனல்
1994 சரத்குமார் – நாட்டாமை
1993 கார்த்திக் – பொண்ணு மணி
1992 கமல்ஹாசன் – தேவர் மகன்
1991 கமல்ஹாசன் – குணா
1990 கார்த்திக் – கிழக்கு வாசல்
1989 கார்த்திக் – வருஷம் பதினாறு
1988 கார்த்திக் – அக்னி நட்சத்திரம்
1987 சத்யராஜ் – வேதம் புதிது
1986 விஜயகாந்த் – அம்மன் கோவில் கிழக்காலே
1985 சிவாஜி கணேசன் – முதல் மரியாதை
1984 ரஜினிகாந் – நல்லவனுக்கு நல்லவன்
1983 பாக்யராஜ் – முந்தானை முடிச்சு
1982 மோகன் – பயணங்கள் முடிவதில்லை
1981 கமல்ஹாசன் – ராஜ பார்வை
1980 சிவகுமார் – வண்டி சக்கரம்
1979 சிவகுமார் – ரோசாப்பூ ரவிக்கை காரி
1978 கமல்ஹாசன் – சிகப்பு ரோஜாக்கள்
1977 கமல்ஹாசன் – பதினாறு வயதினிலே
1976 கமல்ஹாசன் – ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
1975 கமல்ஹாசன் – அபூர்வ ராகங்கள்
1974 ஜெமினி கணேசன் – நான் அவனில்லை
1973 சிவாஜி கணேசன் – கெளரவம்
1972 சிவாஜி கணேசன் – ஞான ஒளி

பேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ள புதிய வசதி!



இணைய மற்றும் சமூகவலையமைப்பில் பல புதுமைகளைப் புகுத்திய நிறுவனங்களில் பேஸ்புக்கும் ஒன்று. 

இந்நிலையில் பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கென அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களைப்போல 'எப் ஸ்ட்ரோர்' ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளது.

இதனூடாக பேஸ்புக் பாவனையாளர்கள் அப்ளிகேஷன்களைக் கொள்வனவு செய்யமுடிவதுடன், டெவலப்பர்கள் தங்களது அப்பிளிகேஷன்களை விற்பனை செய்யவும் முடியும். 

அப்பிளின் 'ஐ டியூன்ஸ்', கூகுளின் 'பிளே' ஆகிய 'எப் ஸ்டோர்களைப் போலவே பாவனையாளர்கள் பேஸ்புக்கின் 'எப் ஸ்டோரில்' உள்ள அப்ளிகேஷன்களையும் தரப்படுத்த முடியும். 

இதில் மொபைல் மற்றும் கணனிகளுக்கான அப்ளிகேஷன்களும் விற்பனை செய்யப்படவுள்ளன. 


இதன்மூலம் பேஸ்புக்கின் 900 மில்லியன் பாவனையாளர்களும் நன்மையடைவர் என அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. 

இதேவேளை பேஸ்புக்கின் வருவாய் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

பேஸ்புக்கினைக் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் போன்ற மொபைல் சாதனங்களின் ஊடாக உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையே இதற்கான பிரதான காரணமாகும். 

மொபைல் சாதனங்களில் குறைந்தளவு விளம்பரங்களையே பேஸ்புக்கினால் வழங்கமுடியும், சாதாரண கணனிகளுடன் ஒப்பிடும் போது இது மிகக்குறைவு. 

பேஸ்புக்கின் வருவாயில் பெருந்தொகை, விளம்பரங்களின் மூலமே கிடைக்கப்பெறுகின்றது. 

தற்போது குறைந்துவரும் வருவாயை ஒருவாறு ஈடுகட்டும் முகமாகவே பேஸ்புக் ' எப் ஸ்டோரினை' ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ___

துறைமுக விரிவாக்கப் பணியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி



கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கும் செயற்திட்டத்தை பார்வையிடுவதற்கு இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமையவே இச்சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்றும் நாளையும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் பார்வையிட முடியும். ___

நித்தியானந்தாவின் ஆனந்தம் புதிய தொலைக்காட்சி



நித்தியானந்தா தன் அடுத்த முயற்சியாக ஆனந்தம் என்ற பெயரில் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற சர்ச்சை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் தன் ஆன்மிக சீடர்களை குஷிப்படுத்த நித்யானந்தா தயாராகி வருகிறார். 


ஆன்மிக தகவல்கள் அடங்கியதாக அந்த அலைவரிசை அமையவுள்ளது. அதற்கான உறுதிப்பத்திரம் பெற்றுள்ள நிலையில் விரைவில் பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடங்க உள்ளது. 

'எதிர்வரும் ஜனவரியில் ஆனந்தம் ஒளிபரப்பு தொடங்கும். அதற்கான வேலைகள் நடக்கின்றன. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்மிக அன்பர்களுக்கு விருந்தாக இருக்கும்" என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ___


சாவகச்சேரியில் வெடிவிபத்து - சிறுவனொருவன் காயம்



சாவகச்சேரியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார்.

இந்த வெடிச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குறித்த சிறுவன் தாயுடன் விறகு வெட்ட சென்ற வேளையிலேயே இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெடிச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு நேட்டோ மாநாட்டில் பங்கேற்க அழைப்பில்லை



ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்க அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் எதிர்வரும் 20ஆம் 21ஆம் திகதிகளில் நேட்டோ மாநாடு நடைபெறவுள்ளது. அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பாகிஸ்தான் சார்பில் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, இராணுவத் தளபதி கயானி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த மாநாட்டிற்கு பாகிஸ்தானுக்கு அழைப்பில்லை என்று நேட்டோ பொதுச் செயலாளர் ராஸ்முசென் அறிவித்துள்ளார். கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். 

கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், மொராக்கோ உட்பட 60 நாட்டுப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்கள். ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் அழைக்கப்படவில்லை. பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதே அழைப்பு விடுக்காமைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.