//]]>3

ஞாயிறு, 13 மே, 2012

சாவகச்சேரியில் வெடிவிபத்து - சிறுவனொருவன் காயம்



சாவகச்சேரியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார்.

இந்த வெடிச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குறித்த சிறுவன் தாயுடன் விறகு வெட்ட சென்ற வேளையிலேயே இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெடிச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக