//]]>3

ஞாயிறு, 13 மே, 2012

5 நாட்களுக்கு மூடப்படும்! காலி வீதி


நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த மே மாதம் 19ஆம் திகதி வெற்றி விழா கொண்டாட்ட பேரணியை நடாத்தும் பொருட்டு காலி வீதி மூடப்படவுள்ளது.
காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்கும் பழைய பாராளுமன்றக் கட்டிடத்திற்கும் இடையிலான வீதி அவ்வப்போது மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாளை மே 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான ஐந்து நாட்களுக்கு பாதை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நாட்களில் காலை 6.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதிகளில் அவ்வப்போது பாதை மூடப்படவுள்ளது.
இதன் போது மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக