//]]>3

செவ்வாய், 5 ஜூன், 2012

நோயாளியிடம் புலனாய்வுப்பிரிவு எனக் கூறி பணத்தை திருடியவர் கைது



யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளரைப் பார்ப்பதற்காக சென்ற இவர், தன்னை குற்றப்பபுலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவித்து, நோயாளியிடமிருந்த 4 ஆயிரம் ரூபாவை திருடிச் சென்றுள்ளார்.குறித்த நபர் நோயாளியிடமிருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தபோது யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் நேற்று (04) ஒப்படைக்கப்பட்டதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
தன்னை பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறிக் கொண்டு, இவர் பல திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் இவரைக் கைது செய்வதற்கு தாங்கள் தேடிவந்ததாகவும் யாழ்.பொலிஸார் கூறினர்.
மேலும், கைது செய்யப்பட்ட இந்த நபரை இன்று (05) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தயாராகி வருகின்றனர்.