//]]>3

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

10.04.2012 juthaian > valampure news paper





பௌத்த பிக்கு ஒருவர் படையினரின் ஆதரவுடன் காணி உரிமையாளரை அச்சுறுத்தி வருவதோடு அப் பகுதியில் விகாரை கட்டுவதற்கும் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் முல்லைத்தீவு கொக்கிளாயில் உள்ள தனியார் காணியே இவ் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் தனக்கான இருப்பிடம் ஒன்றை அமைத்து விட்டார். இந் நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அங்குவந்த காணியின் உரிமையாளர் காணியை விடுவிக்குமாறு கேட்டிருக்கின்றார்.
இவ்வாறு மீள்குடியேறிவர் தனது காணியை விடுமாறு பிக்குவிடன் கேட்க, படையினரின் உதவியுடன் அக் காணி உரிமையாளரை அச்சுறுத்தியுள்ளார் பிக்கு.
இருந்தும் சிறிது காலம் சில காலம் வெளியூர் சென்றிருந்த பிக்கு மீண்டும் வந்திருக்கின்றார்.
தற்போதும் நிலத்தை வழங்க முடியாதென கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணியின் உரிமையாளருக்கு படையினரின் ஆதரவுடன் கடுமையான அச்சுறுத்தலை விடுத்திருக்கின்றார்.

மேலும் அந்தக் காணியில் விகாரையொன்றைக் கட்டப்போவதாகவும் பிக்

தலையை பதம் பார்த்த ஜெட் விமானம்

பொதுவாக உல்லாக பிரயாணிகளை மிகவும் கவரும் இடம் கடற்கரை என்றே சொல்லாம்.அந்தவகையில் கரீபியன் கடற்கரையோரத்தில் ஒன்று திரண்டிருந்தனர் ஒரு தொகுதி உல்லாச பயணிகள். 

வழமையாக இக்கடற்கரையில் நீராடும் பெண்கள் தமது தலைமுடியை உலர்ந்துவதற்காக அங்கு வீசும் காற்றினை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

கரீபியன் கடற்கரையோரத்தில் சர்வதேச விமான நலையம் ஒன்று அமைந்துள்ளது.
அங்கு ஒரு ஜெட் விமானம் புறப்படுவதற்கு தயாராகின்றது. இதனை வேடிக்கை பார்க்க பல உல்லாச பயணிகள் ஆர்வத்துடன் ஓட்டம் எடுக்கின்றனர். அதில் ஒரு பெண் தனது தலைமுடியை உலர வைக்கும் நோக்கில் ஜெட் விமானத்தில் இருந்து வரும் அதிவேக காற்றினை எதிர் கொள்கின்றாள்.
என்ன நடக்கிறது என்பதை காணொளியில் பாருங்கள்... இப்படியான ஆபத்தான ஆசைகள் தேவைதானா? கொஞ்சம் யோசித்து செயற்படுங்கள்....


நடிப்புக் கண்ணீருடன் விடைபெற்ற த்ரிஷா



ஜுனியர் என்.டி.ஆர், த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள தெலுங்கு திரைப்படம் 'தம்மு'. இந்தத் திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கள் தற்போது நிறைவடைந்துள்ளன.


தம்முவின் இறுதி நாள் படப்பிடிப்பை அடுத்து அத்திரைப்படத்தின் இயக்குனர் காலில் விழுந்து கண்ணீருடன் ஆசி பெற்றுக்கொண்டாராம் நடிகை த்ரிஷா.
எதற்காக இவர் கண்ணீருடன் ஆசி பெற்றுக்கொண்டார் என்று பார்க்கிறீர்களா? 'இனி திரைப்படம் நடிக்கப்போவதில்லை.
 இன்றுடன் விடைபெறுகிறேன்' என்று கூறிவிட்டு கண்ணீருடனேயே அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார் த்ரிஷா... என்று தெலுங்கு தேச ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக எங்கு பார்த்தாலும் த்ரிஷா அழுதார்... கண்ணீர் விட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக்கொண்டுள்ளன.
த்ரிஷாவும் அவர் அம்மாவும் போடும் கல்யாண நாடகத்தினால் வந்த கண்ணீரோ என்று அனைவரும் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் த்ரிஷா ரசிகர்களை கதிகளங்க வைத்துள்ளது.
த்ரிஷா தற்போது தமிழில் 'சமரன்' திரைப்படத்தில் மட்டும்தான் நடித்துக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கில் தான் நடித்துக்கொண்டிருந்த தம்மு திரைப்படத்தை அடுத்தே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சமரனுக்கு பிறகும் இவ்வாறான அறிவிப்பு வருகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...