//]]>3

வியாழன், 17 மே, 2012

ஜஸ்வர்யாவின் இன்றைய நிலை



1994 இல் உலக அரங்கில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை சுவீகரித்து கொண்ட இந்திய அழகியின் அழகு, ஒரு குழந்தை பெற்றதும் எங்கு ஓடிப்போனதோ தெரியவில்லை…!
2011 பெப்பிரவரி மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், அப்போது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தார். அப்போது கூட அவரின் அழகில் இழப்பு ஏதும் தோன்றவில்லை.
பின்னர் மூன்று மாதங்கள் கழித்து 2011 மே மாதம் நடைபெற்ற கன்னிஸ் விருது வழங்கும் விழாவில் அவரது முகத்தில் முதுமை இழை ஓடத் தொடங்கியிருந்தது.
தற்போது குழந்தை பிரசவித்து மதங்கள் பல கடந்துவிட்ட நிலையில், தற்போது ஆளே தெரியாத அளவுக்கு முழுமையாக மாறிவிட்டார் ஐஸ்வர்யாராய்…
இதை பார்த்து நம் நடிகைகள் எத்தனை பேர் குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்களோ தெரியவில்லை!

அதிர வைக்கும் வீதி சமிஞைகள்



ஓட்டுனர்களை திக்குமுக்காட வைக்கும் தெரு சமிக்கை விளக்கு சீனாவில் நிறுவப்பட்டுள்ளது.
சீனாவின் Chongqing நகரில் உள்ள பல தெருக்கள் சந்திக்கும் சந்தி ஒன்றிலேயே இத் தெருசமிக்கை விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

தங்கள் முடியை தாங்களே வெட்டும் பெண்கள்



ஆண்களின் சிகை அலங்கரிப்புக்கு செலவாகும் பணத்தை விட, பெண்களுக்கான அழகு நிலையங்களில் அதிகளவிலான பணம் சிகை அலங்கரிப்புக்கு கறக்கப்படுகிறது.
பால் விலை உயர்வு… மின் கட்டண உயர்வு….. என கையில் காசு மிஞ்சாத இந் நிலையில் தலைமுடிக்கும் செலவழித்தால் கட்டுப்படி ஆகுமா…?
அதுக்காக அலங்கோலமாக திரிய முடியுமா…?
வீட்டிலேயே அழகாக தலைமுடி வெட்ட அற்புத வழி இதோ…!

விலை உயர்ந்த கார் நொடியில் சிதைப்பு (video)


லாம்போர்கினி, உலகின் விலையுயர்ந்த கார் வகைகளில் ஒன்று. அத்தகைய கார் ஒன்று எப்படி முட்டாள் தனத்தால் சிதைந்து போகிறது பாருங்கள்…!

ஆதாள பாதாளத்தில் கண்கட்டி குதிக்கின்றனர் (video)


அதள பாதளத்தில் கண் கட்டி பாதுகாப்பு கவசங்களுடன் தில்லாக குதிக்கையில் ஷாக் ஆகிறார் இளைஞன்! ஏன்?
பேச்சுலர் பார்ட்டி ஒன்றில் விளையாட்டின் ஒரு பகுதியாக, ஓர் இளைஞரை கண்ணை கட்டி கூட்டி வந்து, மாலை உச்சியில் இருந்து பாதாளத்தில் குதிக்க வைக்க போவதாக கயிறு எல்லாம் காட்டி தண்ணிக்குள் குதிக்க விட்டு விடுகிறார்கள்…!
அப்புறாம் என்ன… ஒரே காமெடி தான். நீங்க்ளும் பருங்களேன்…!


இனி விமானத்தில் பறந்தபடி செல்போன் பேநலாம்



விமானத்தில் ஏறி சீட் பெல்ட்டை போட்டவுடன், “உங்கள் செல்போன்களை நிறுத்தி வைத்துவிடுங்கள்” என்ற அறிவிப்பை கேட்டு கடுப்பாகும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பறக்கும் விமானத்தில் உங்கள் சொந்த செல்போனை உபயோகிக்க அனுமதியை பிரிட்டிஷ் விமானம் ஒன்று வழங்கப்படுகிறது.
நேற்றையதினம் லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் வர்ஜின் அட்லான்டிக் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணிகள் முதல் தடவையாக தமது சொந்த செல்போன்களை உபயோகித்துக் கொள்ளலாம். வர்ஜின் அட்லான்டிக் இந்த ரூட்டில் பயன்படுத்தும் புதிய ஏர்பஸ் ஏ-330 விமானம், பறக்கும்போது பயணிகள் செல்போன் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே விமானங்களில் செல்போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளதன் காரணம், செல்போன் சிக்னல்கள், விமான காக்பிட்டின் தொடர்பு அலைகளை வெட்டும் என்பதால்தான். விமானம் பறக்கும்போது பயணிகள் செல்போன் உபயோகித்தால், விமானி தரைக் கட்டுப்பாட்டு மையத்துடன் வைத்துள்ள கம்யூனிகேஷன் தொடர்புகள் பஃப் பண்ணும் என்பதால், செல்போன்களுக்கு தடை உள்ளது.
அதனால், விமானத்துக்குள் அவர்களால் பொருத்தப்பட்ட போன்கள் மூலம் பேச அனுமதி வழங்கியுள்ளன விமான நிறுவனங்கள். ஏர்லைன் போனில் கையை வைத்தால், உங்கள் கிரெடிட் கார்ட்டும் ஜெட் வேகத்தில் ஓடத் துவங்கும்!
வர்ஜின் அட்லான்டிக் தமது புதிய ஏர்பஸ் ஏ-330 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்த போது, அதன் கம்யூனிகேஷன் சிஸ்டம் செல்போன் சிக்னல்களால் பாதிக்கப்படாத வகையில் அப்கிரேட் செய்திருந்தது. அந்த விமானங்களில் தற்போது பலவித டெஸ்ட்டுகள் செய்யப்பட்டபின், செல்போன் உபயோகிக்கலாம் என சிவில் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இன்று முதல் வர்ஜின் அட்லான்டிக்கின் பதிய ஏர்பஸ் ஏ-330 விமானங்களில் 35,000 அடி உயரம்வரை செல்போன்கள் பயன்படுத்தப்படலாம், டெக்ஸ் மெசேஸ் அனுப்பலாம், வெப் அக்சஸ் மூலம் இ-மெயில்களை அனுப்பலாம், ரிசீவ் பண்ணலாம். GPRS முலம் இவை சாத்தியமாகின்றன.
அட்லான்டிக் கடலைக் கடக்கும் விமானங்கள் அதிகபட்சம் 35,000 அடிகள் உயரம் வரையே பறப்பது வழக்கம். (பசிபிக் கடலைக் கடக்கையில் மட்டும் சில விமானங்கள், 38,000 அடி உயரம்வரை சிறிது நேரத்துக்கு பறக்க வேண்டியிருக்கும்) லண்டன் – நியூயார்க் ரூட், அல்லான்டிக் கடலின் மேல் பறக்கும் ரூட் என்பதால், வர்ஜினின் விமானத்தின் முழு நேரமும் செல்போன்கள் இயக்கப்படலாம்.
தற்போது வர்ஜின் விமானங்களில் உள்ள GPRS மட்டுப்படுத்தப்பட்ட பேன்ட்-வித்துடன் இயங்குவதால், ஒரே நேரத்தில் 10 பயணிகள் மட்டுமே செல் போனை பயன்படுத்த முடியும். ஆனால், அடுத்த வாரத்தில் இருந்து பேன்ட்-வித் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த விமானங்களிலும் டேக்-ஆஃப், மற்றும் லேன்டிங் நேரங்களில் செல்போன் உபயோகிக்க முடியாது. அத்துடன், அமெரிக்கா தமது வான்பகுதியில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.
இதனால், லண்டன்-நியூயார்க் விமானம் மேற்கே பறக்கும்போது, அமெரிக்காவில் இருந்து 250 மைல் வான் எல்லையை அடைந்துவிட்டால், அதன்பின் செல்போன் பயன்படுத்த முடியாது. அதேபோல, விமானம் கிழக்கே லண்டனை நோக்கிச் செல்லும்போது, அமெரிக்காவை விட்டு வெளியேறி முதல் 250 மைல்களுக்கு, செல்போன் பயன்படுத்த முடியாது.

ஜெயலலிதாவின் விளம்பரத்துக்கு 25 கோடி



செல்வி. ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு நிறைவு விழா விளம்பரங்களுக்காக மட்டும் தமிழக அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெ. தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஓராண்டு நிறைவு விழாவையொட்டி அதிமுக அரசு நாட்டின் அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பெரிய விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் இந்த விளம்பரங்களுக்காக மட்டும் அதிமுக அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
நூற்றாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த விளம்பரத்தின் விவரம் வருமாறு…
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்- இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
இதுதான் என்னுடைய இலட்சியம்!

-செல்வி ஜெ. ஜெயலலிதா-
தமிழக முதல்வர்

மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் துரித நடவடிக்கைகளால் செயலற்றுக்கிடந்த தமிழகம் மீண்டும் புதுப்பொலிவுடன் புத்தெழுச்சி பெற்றுள்ளது.
அதிமுக அரசின் சாதனைப் பட்டியல்
பசியாறி மகிழ விலையில்லா அரிசி,
பெண்களுக்குத் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்,
மகளிர் மனம்குளிர விலையில்லா மிக்சி,
கிரைண்டர், மின்விசிறி, எளியோர் ஏற்றம் பெற விலையில்லா கறவை மாடுகள்/ஆடுகள்,
மாணவ, மாணவியர் கல்வியில் சிறக்க விலையில்லா மடிக்கணினி,
சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள்,
தரமான மருத்துவ சேவைக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை விட பெரிய சாதனை, விளம்பரங்களுக்கு 25 கோடி செலவு செய்ததே…!
இந்த விளம்பர செலவுக்கு பதிலாக ஏழை விவசாயிகளின் கடன் சுமையை குறைத்திருக்கலாமே அம்மா…!
(அமிதாப்பச்சன் விவசாயிகளின் கடனை குறைக்க சொந்த பணமாக 35 இலட்சம் கொடுத்தது இங்கு குறிப்பிடப்படுகிறது)

காப்பியில் ஓவியம் வரையும் பெண் (video)

சூப்பர் ஸ்டாரின் திருமண பரிசு



சினேகாவும் பிரசன்னாவும் கடந்த மே 11-ம் தேதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாக சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தனர். ஆனால் கோச்சடையான் பணிகளில் ரஜினி பிஸியாக இருந்தமையால் இந்த திருமண விழாவில் ரஜினியால் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில் சினேகாவையும் பிரசன்னாவையும் தன் வீட்டுக்கே வரவழைத்து அவர்களுக்கு திருமணப் பரிசு வழங்கி, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சூப்பர்ஸ்டார்.
ஸ்ரீராகவேந்திரர் உருவப்படத்தின் ஆயில் பெயின்டிங்கை இருவருக்கும் அன்புப் பரிசாக அளித்த ரஜினி, இருவருக்கும் திருமண வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், “இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாரின் அன்புப் பரிசோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம்,” என்றார்.

இனி நடக்கவும் தேவையில்லை: Honda நிறுவனத்தின் ரோபோ ஆசனங்கள் (video)

இவ் ஆசனங்கள் தட்டையான மேற்பரப்பில் மட்டுமல்லாது மின் உயர்த்தியின் ஏற்ற இறக்கமான வாயில் என்பவற்றிலும் இயங்கக்கூடியவை.
உடல் அசைவுகள் மூலம் இயக்கக்கூடிய ரோபோ ஆசனத்தை யப்பானின் Honda நிறுவனம் தயாரித்துள்ளது.
UNI-CUB என பெயரிடப்பட்டுள்ள இவ் ரோபோ ஆசனம் 360 பாகைகள் சுற்றி நகரும் சில்லுகளுடன் ஆக்கப்பட்டுள்ளது.
lithium-ion பற்றரி மூலம் இயங்கக்கூடிய இவ் ரோபோ ஆசனம், 74.5 cm உயரமும் 34.5 cm அகாலமும் கொண்டது. அத்துடன் ஒருமுறை பற்றரியை சார்ச் ஏற்றிவிட்டால் 6 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கக்கூடியது. அத்துடன் இதன் உயர் வேகம் 6 Km/h ஆகும்.
இவை அலுவலகங்கள், நூல்நிலையங்கள், ஆராட்சிக்கூடங்கள் போன்றவற்றில் பயன்படுத்த பொருத்தமானவை என Honda நிறுவனத்தினர் கூறுகிறனர் 


2.30 க்கு கொல்லப்பட்ட ராமஜெயம் எப்படி 5.20 க்கு வாக்கிங் போனார் - அதிரடி மர்மங்கள்



முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பில் அவரது மனைவி தனது கணவர் அதிகாலை 5.20 க்கு வெளியில் கிளம்பியதாக வாக்குமூலம் கொடுத்திருக்கும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், ராமஜெயம் அதிகாலை 2.30 க்கு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் அசைக்க முடியாத நபராக வலம் வந்த ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் அருகே வீசப்பட்டிருந்தார். அவரது கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. திமுகவினரோ இதைவைத்து சி.பி.ஐ. விசாரணை கோரி வருகின்றனர்.
ராமஜெயத்தின் மனைவி கைப்பட எழுதிக் கொடுத்த புகாரில் ராமஜெயம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மார்ச் 29ம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு வீட்டை விட்டு வெளியே போனதாக எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் ராமஜெயம் இறந்த நேரம் என்ன என்று குறிப்பிடவில்லை.
இதனால் மீண்டும் பிரேத பரிசோதனை அறிக்கையை கடந்த வாரம் மறு ஆய்வு செய்த போது ராமஜெயம் கொல்லப்பட்ட நேரம் மார்ச் 29ம் தேதி அதிகாலை 2.30 என்று தெரியவந்துள்ளது.
ராமஜெயத்தின் மனைவி ஏன் அப்படி தவறான தகவலைத் தர வேண்டும்? அப்படியானால் அதிகாலை 2.30 மணிக்கு ராமஜெயம் எங்கிருந்தார்? ஏன் பிரேத பரிசோதனை அறிக்கையில் முன்பே நேரம் குறிப்பிடப்படவில்லை? என்று அடுத்தடுத்த சந்தேகங்கள் அதிர வைக்கின்றன.

பூநகரி – யாழ் பேரூந்து சேவை 17 வருடங்களின்பின்


தென்மராட்சி தெற்கு தனங்கிளப்பு, கேரதீவு மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் மீளக் குடியமர்ந்த மக்களும் பூநகரி அரச அலுவலங்களில் பணி புரிவோரும் விடுத்த வேண்டுகோளை அடுத்து சாவகச்சேரி கேரதீவு மார்க்க 810 இலக்க பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த பஸ் தினமும் காலை 5.30, 8.45 ஆகிய நேரங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் காலை 6.00 மணி மு.ப. 9.30 பி.ப. 1.30, பி.ப.3.45 ஆகிய நேரங்களில் சாவகச்சேரியில் இருந்தும் பூநகரி நாலாம் கட்டைவரை சென்று அங்கிருந்து காலை 7.15 மு.ப. 11.30, பி.ப. 2.15 மாலை 5.00மணி ஆகிய நேரங்களில் புறப்படும்.

அனேமாவை தேடிப்போன மகிந்த



சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
நேற்றுமாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய ரிரான் அலஸ் நேற்றுக்காலை அலரிமாளிகையில் சிறிலங்கா அதிபரை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.
இதையடுத்தே ரிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்திய பின்னர் ரிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார்“ என்று கூறியிருந்தார்.
 “சில சிறிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்றுகாலை நான் சிறிலங்கா அதிபரைச் சந்தித்தேன். இந்த விடுதலை தொடர்பாக எந்தவொரு தரப்பும் நிபந்தனை விதிக்கவில்லை“ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ரிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது விடுதலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தானோ தனது குடும்பத்தினரோ மண்டியிடப் போவதில்லை என்று சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அனோமா பொன்சேகாவை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேசும் முயற்சிகள் தோல்வி கண்ட நிலையிலேயே, அவரைத் தேடிச்சென்று மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் இவ்வாறு படியிறங்கிப் போனது ஏன் கேள்வி கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

செவ்வாய் தொசமா இதோ உங்களுக்கு


ஒருவரது ஜாதகத்தில் 7-ம் இடத்தில் களஸ்தர தானத்தில் செவ்வாய் இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பு இருக்கும். இதனால் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் தடை ஏற்படும். இந்த தோஷத்தை நீக்க எளிய முறையில் பரிகாரம் உள்ளது. அரசமரம், வேம்பு சேர்ந்திருக்கும் இடங்களில் விநாயகரும் இருக்க வேண்டும்.
இந்த இடத்திற்கு செவ்வாய்க் கிழமை அன்று காலையில் சென்று செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முதலில் விநாயகருக்கு பால், நாட்டு சர்க்கரை வைத்து வணங்கி 9 முறை வலம் வரவேண்டும். 48 நாட்கள் இவ்வாறு செய்தால் செவ்வாய்தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.

நட்சத்திரமும் அதிஸ்ட தெய்வங்களும்



அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி
அத்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் – ஸ்ரீ லக்மி நாரயணர்
கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்

அமரிக்ககா பிரயை இலங்கையில் தற்கொலை


கொழும்பு கொம்பனிவீதி சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே குதித்து அமெரிக்க பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (16) காலை 9.45 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிற்பகல் 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
ஜோன் எட்வின் கொல்ஸ்டன் ரயன் என்ற 46 வயதுடைய அமெரிக்க பிரஜையே உயிரிழந்தவராவார்.

காறின் இஞ்சினுக்குள் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுளைந்தவர் கைது

பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் முகமாக காரொன்றின் முன்பக்க இயந்திரப் பகுதிக்குள் 20 மணி நேரமாக மறைந்து பயணம் செய்த 18 வயது ஆப்கானிஸ்தான்இளைஞர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி நிஸான் காரானது படகொன்றின் மூலம் பிரித்தானியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கிறீஸிலிருந்து கொண்டு வரப்பட்ட மேற்படி கார் பாரி நகருக்கு பயணித்த போது குடிவரவு அதிகாரிகள் அக்காரை வழிமறித்துள்ளனர்.
காரை பரிசோதித்த பின் அக்காரை மேற்கொண்டு செல்வதற்கு அனுமதிக்க தயாரான அதிகாரிகள், அக்காரின் சாரதியான கலோயனோ இவயலோவும் (24 வயது) பெண் பயணியான ஜோர்ஜிவா சடனி ஸ்லாவாவும் (39 வயது) மிகவும் பதற்ற நிலையில் காணப்படுவதையும் அவதானித்து சந்தேகம் கொண்ட னர்.
இந்நிலையில் அதிகாரிகள் அக்காரை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்திய போது, காரின் முன்பக்கத்தில் வெப்பத்தில் தகிக்கும் இயந்திரப் பகுதியில் விரிக்கப்பட்ட போர்வை மற்றும் மெத்தை என்பவற்றின் மீது தண்ணீர் போத்தல் ஒன்றுடன் மேற்படி ஆப்கானிய சட்ட விரோத குடியேற்ற வாசி மறைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதன்போது அந்த ஆப்கான் இளைஞர் அரை மயக்க நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி சட்டவிரோத குடியேற்ற வாசியை பிரித்தானியாவுக்குள் கடத்த உதவியளித்த காரின் சாரதியும் பயணியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆகக் குறைந்தது 5000 யூரோ தண்டனை பணம் விதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்படி இருவருக்கும் ஆப்கான் இளைஞர் பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு 6000 யூரோ பெறுமதியான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
அந்தப் பணத்தை 8 வருட காலமாக ஆப்கான் தலைநகர் காபூலிலுள்ள செல்வந்த குடும்பத்தில் பணியாளராக பணியாற்றி சேகரித்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கைதுசெய்யப்பட்ட பெண் பயணியின் கணவரும் சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் குழுவில் அங்கம் வகித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.