//]]>3

செவ்வாய், 29 மே, 2012

யாழில் விடுதி உரிமையாளருக்கு நீதிமன்றம் பிடியாணை!


யாழ் மாநகர சபையிலுள்ள விடுதி உரிமையாளர் ஒருவரைக் கைதுசெய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது.

யாழ் நகரில் விருந்தினர் விடுதி என்ற பேரில் காதல் ஜோடிகளை தங்கவைத்து கலாச்சார சீரழிவுக்கு விடுதியை கொடுத்து விபச்சாரத்திற்கு உதவியதாக இந்த விடுதி உரிமையாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விடுதி இயங்குவதை தடை செய்யுமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் கலாச்சர சீரழிவு நடைபெறுகிறது. திருமணமாகாத பெண்கள், ஆண்கள் ஜோடியாக தங்குகின்றனர். அத்துடன் விடுதியில் தங்குபவர்களின் அடையாள பதிவினை மேற்கொள்வதில்லை. மது விற்பனை, புகைத்தல் என்பன நடைபெறுகிறது என இந்த வழக்கின் குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா எதிர்வரும் ஜுன் 16ம் திகதிக்கு முன்பாக இந்த விடுதியின் உரிமையாளரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.பி.எல்.வெற்றி…பிறந்த மேனியை காட்டிய பிரபல நடிகை



ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதால், நடிகை பூனம் பாண்டே இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.
21 வயது பூனம் பாண்டே
21 வயதான நடிகையும், பிரபல மாடல் அழகியுமான பூனம் பாண்டே கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்ற பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
ஆனால், இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றும், பூனம் நிர்வாணமாக தோன்றி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மீண்டும் அறிவிப்பு
இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடிகர் ஷாருக்கானின் `கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி வெற்றி பெற்றால் `நிர்வாண போஸ்’ கொடுப்பதாக மீண்டும் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை தோற்கடித்த `கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி `சாம்பியன்’ பட்டம் வென்றது.
நிர்வாண போஸ்
அதைத்தொடர்ந்து, இந்த முறை தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் 

பாலியல் சேட்டை 61 வயதுப்பிக்கு கைது


10 வயது சிறுமியை சிறுமியை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய காவி போர்த்திய பிக்கு ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.மஹியங்கனை, 51ஆம் கட்டை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சிறுமியை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய 61 வயதான காவி போர்த்திய பிக்கு இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

TNA முன்நாள் MP யயிலில்


கடந்த வருடம் திருக்கோயில் நடந்த கலவரம் தொடர்பாக பொத்துவில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்றைய தினம்மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்று மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் திருக்கோவில் பகுதியில் (12.8.2011) மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் பொலிஸார் இவ் மர்ம மனிதர்களை (கிறீஸ் மனிதன்) விடுவிக்க முயற்சியெடுப்பதாக அறிந்த பொதுமக்கள் மிகவும் கோபமுற்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்களைச் சுற்றி பொல்லுகள், தடிகள் சகிதம் திரண்ட பொது மக்கள் மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோசங்களை எழுப்பினர்.
பின்னர் பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.
இவ் வேளையில் அங்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு இப்பிரச்சினையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பொதுமக்கள் சார்பில் பொலிஸாருடன் பேசினார்.
மக்களின் எதிர்ப்பு அதிகமானதால் படையினர் ஸ்தலத்துக்கு வந்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர். பொது மக்கள் படையினரை கற்களால் திருப்பி தாக்கினர். பின்னர் மீண்டும் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்தே மக்களை விரட்டியடித்தனர் படையினர்.
இச்சம்பவத்தில் மக்களைத்திரட்டி கலகத்தில் ஈடுபட்டதாக திருக்கோயில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்திரநேருவை அழைத்திருந்தும் கூட அவர் லண்டன் சென்றிருந்ததால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை. இதனால் இவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் நீதிமன்றிற்கு ஆஜராகியிருந்தார். இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று மணித்தியாலங்கள் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பின்னர் சாட்சிகள் வரவழைக்கப்பட்டு சந்திரகாந்தனை பிணையில் செல்ல அனுமதியளித்தார். மீண்டும் அடுத்த மாதம் 30அம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

4 பேர் கோப்பாயில் கைது


யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் எந்த ஆவணங்களையும்வைத்திருக்காமையினாலும் இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நான்கு பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் யாழ். நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இவர்கள் யாழில் நடைபெறும் கொள்ளைச் சந்தேக நபர்களாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கோப்பாய் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சந்தேகத்திற்கிடாக முறையில் நடமாடிய நான்கு பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணையை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளே தமிழர்களின் பாதுகாவலர் ஏற்றுக் கொள்ளும் புத்த பிக்கு



தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா.வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடைமையை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமில தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
போரின் பின்னரும் வடக்கு கிழக்கில் தமிழர்களினதோ தெற்கில் சிங்களவர்களினதோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி வருவதுடன் சர்வதேச ரீதியிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது.
மனித உரிமை பிரச்சினைகள் நாட்டில் தற்போது வெளிப்படையாகவே இடம் பெறுகின்றன. குறிப்பாக நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி சூழல் திரும்பவில்லை. மாறாக கடத்தல், காணாமல் போதல், தாக்கப்படுதல் என பல்வேறு மனித உரிமை மீறல்களே நாட்டில் இடம்பெற்றன.
இதனை காரணம் காட்டி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளன.
முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இக்குற்றச்செயல்கள் குறைவாகவே காணப்பட்டன. தற்போது அது பல மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன், எந்தவொரு நாடுமே செய்யாத விடயமொன்றை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளது.
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமெழுதி, அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை திட்ட வரைவு அமைத்து அமெரிக்காவிற்கு கொண்டுச் சென்று காண்பித்தது.
உள்நாட்டில் யாருக்குமே மேற்படி செயற்திட்ட வரைவு காண்பிக்கப்படவில்லை.