//]]>3

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

மனிதனின் வித்தியாசமான தோன்றல்



மதங்கள் அனைத்தும் அன்பையே முதன்மைப்படுத்தி போதிக்கின்றன. அன்பே கடவுள் என்கின்றன. ஆனால் மனிதன் நாகரிகம் வளர வளர புற உலக வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னை மறப்பதுடன், பொருளாதார போராட்டத்தின் காரணமாக மனித நேயம் இல்லாமல் காணப்படுகின்றனர்.

மனிதநேயத்தினை எடுத்துரைக்கும் விதமாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேகப் பிரன்ஸ் என்ற இளைஞன் ரோபோ வேடமிட்டு மனித நேயச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது 21 வயதான இந்த இளைஞர் சுமார் 3,000 மைல்கள் பிரயாணம் செய்துள்ளார். மேலும் இதன் போது நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் போன்றோரை சந்தித்து ஆறுதல்கள் அளித்ததோடு மகிழ்விக்கவும் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக