//]]>3

வியாழன், 10 மே, 2012

பள்ளிக்கூட மாணவிகளோடு செக்ஸ் லீலை: பாக்கிஸ்தானியர்களுக்கு 77 வருட சிறை !



9 பேர் கொண்ட பாக்கிஸ்தான் முஸ்லீம் குழு ஒன்று லண்டனில் திட்டமிட்ட வகையில் 13 வயது தொடக்கம் 15 வயதுடைய பள்ளிக்கூட மாணவிகளுடன் பாலுறவில் ஈடுபட்டுள்ளனர். இச் செய்தியை அதிர்வு இணையம் கடந்த வருடம் வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. லண்டனுக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றில் பாக்கிஸ்தான் உணவு விடுதி ஒன்றை நடத்திவந்த இந் நபர்கள், அருகில் உள்ள தமது பலசரக்கு கடை நண்பர்களுடன் இணைந்து சிறுமிகளுக்கு மது விற்பனை செய்துள்ளனர். இந் நபர்கள் சுமார் 5 சிறுமிகளை மதுபோதைக்கு அடிமையாக்கி பின்னர் போதைவஸ்துகளையும் கொடுத்து அவர்களுடன் பாலுறவில் ஈடுபட்டுள்ளனர். தாம் அனுபவித்த சிறுமியை தனது நண்பர்களுக்கு கொடுப்பதும், அவர்கள் அதை தனது நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம்.

இவ்வாறு ஒரு சிறுமியை பலர் பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளனர். இவர்கள் வலையில் இதுவரை 5 பள்ளிக்கூடச் சிறுமிகள் வீழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் 15 க்கும் மேற்பட்ட சிறுமிகளை தம் வலையில் சிக்கவைத்து அவர்களுக்கு மதுபோதை ஏற்றி இறுதியில் தமது இச்சையை தீர்த்துக்கொண்டுள்ளனர். இவர்களில் ஒரு சிறுமி பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். நேற்றைய தினம் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது. அதற்கு முன்னதாக நீதிபதி குற்றவாளிகளைப் பார்த்து சில விடையங்களைத் தெரிவித்தார்.

நீங்கள் இச் சிறுமிகளை, உங்கள் சமூகத்தவர் இல்லாத காரணத்தால் தான் கற்பழித்துள்ளீர்கள் ! அவர்கள் உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இப்படி நீங்கள் செய்திருப்பீர்களா ? என்று கேள்வி எழுப்பினார். இந்த பாக்கிஸ்தான் முஸ்லீம்களில் ஒருவர் உடனே எழுந்து, நீதிபதியை நீ ஒரு இனவாதம் பிடித்தே வேசி எனத் தகாத வார்த்தைகளினால் திட்டினார். இதனால் அவர் நீதிமன்றில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இவர்கள் அனைவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக