//]]>3

வெள்ளி, 18 மே, 2012

அச்சுறுத்தல் இருக்கும் வரை இராணுவமுகாம்கள் அகற்றப்படாது


"20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற, யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

யுத்த வெற்றி விளாவில் 15 உயர் விருதுகள்


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது உயிரிழந்த முப்படையினரில் 15பேர் 'பரம வீர விபூஷண' விருது வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று கௌரவிக்கப்பட்டனர்.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள், கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது. 

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் காலி முகத்திடலில்


யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு, காலி முகத்திடலில் ஆரம்பமாகியது.  

இதன்போது முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது. அத்துடன், வெற்றிக்கான 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.  

இந்த அணிவகுப்பில் முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 854 அதிகாரிகள் உட்பட 12 ஆயிரத்து 828பேர் பங்குபற்றினர்.இவர்கள், கிழக்கு, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் என மூன்று முன்னணிகளாக அணிவகுப்பில் ஈடுபட்டனர். 

8 வயதிலேயே செக்ஸ் இணையத்தளத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள் !



8 வயதிலேயே செக்ஸ் இணையத்தளங்களுக்கு அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியச் சிறுவர்கள் அடிமையாகிறார்களாம் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது, பிரித்தானிய முன்னணி நாளேடு ஒன்று. தமது பெற்றோரால் தமக்கு வாங்கித் தரப்பட்டுள்ள ஸ்மாட் போபைல் போனில் இருந்தே, மிக இலகுவாக செக்ஸ் இணையத்தளங்களுக்குச் செல்ல முடிவதாக பல சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். இரகசிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்திய பிரித்தானிய டெய்லி மெயில் பத்திரிகையே இத் தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக 8 வயதுச் சிறுவர்கள் முதல் 17 வயது இளைஞர்கள் வரை மோபைல் போனைப் பாவித்தே கூடுதலாக செக்ஸ் இணையத்தளங்களுக்குச் செல்வதாக அக் கருத்துக்கணிப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இளைய தலைமுறையினரை எடுத்துகொண்டால் ஒவ்வொரு 10 பேரில் சுமார் 7 பேர் இவ்வாறான செக்ஸ் இணையங்களைப் பார்ப்பதாக ஒத்துக்கொண்டுள்ளனர். பிரின்னா செல்வடோர் என்னும் 13 வயதுச் சிறுமியின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது இச் சிறுமி செக்ஸ் இணையத்தளங்களைப் பார்த்து அதற்கு அடிமையாகிவிட்டாராம். ஒரு நாள் கூட அதனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 17 வயதேஆனா நேத்தன் ஹாக் என்னும் இளைஞன் தெரிவிக்கும்போது, தான் நிதமும் விரும்பிப் பார்க்கும் இணையம் அதுதான் என்று கூறியுள்ளார். அதாவது தன்னால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது எனவும், தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு மத்தியில், மதுபானவகைகள் மற்றும் சிகரெட் பாவனை என்பன பரவிவருவதாக பெற்றோர் அச்சம் தெரிவித்துவரும் நிலையில், இப் பழக்கங்களுக்கு எல்லாம் அடிமையாகாத பலர் செக்ஸ் இணையத்தைப் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என, தற்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளமையானது, பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒரு செய்தியாக உள்ளது. பொதுவாக வீட்டில் உள்ள கணணி என்றால் அதில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோருக்குத் தெரிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மோபைல் போன்களை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. தேவையே இல்லாமல் எதை எதையோ கண்டு பிடிக்கும் நொக்கியா, சாம் சுங், அப்பிள் போன்ற மோபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், சிறு பிள்ளைகள் பாவனைக்கு என்று ஒரு லாக் சிஸ்டத்தை போனில் இன்னும் ஏன் அறிமுகப்படுத்தவில்லை ?

பெண்களுக்கும் மாரடைப்பாம் கவனம்


பெண்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண்களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அறிகுறிகள் என்னென்ன?
இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும்.
புகைப்பிடிக்கும் பெண்கள்
இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனை களைச் செய்து கொள்ள வேண்டும்.
புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது.
உடல் எடையை கவனியுங்கள்
மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடையை பராமரிப்பது, சத்தான உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துணவுகள்
ஆரோக்கியமான இருதயத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன.
பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். எனவெ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

பரந்தன் முல்லைத்தீவு வீதி காட்டுப்பகுதியில் வெடிவிபத்து தொடர்ந்து துப்பாக்கிச்சத்தம்


இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்ட வண்ணமாக இருந்தது.
இந்த துப்பாக்கி சத்தம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன.
அதனைத்தொடர்ந்து சம்பவம் நடக்கும் பிரதேசம் நோக்கி படையினர் விரைந்தனர்.
சற்றுநேரத்தின் பின்பு இன்னுமொரு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் A35 நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் கேட்டது.
பின்பு அங்கு தொடர்ந்து கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும். கொஞ்ச நேரத்தின் பின்னர் சூட்டுச் சத்தங்கள் தணிந்ததாக குறித்த பிரதேசத்துக்கு அருகில் வாழும் ஒருவர் தெரிவித்தார்.

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுகள் (video)

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3Mம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்கள் சார்பாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.


நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டன இவ்வஞ்சலி நிகழ்வில், மாணவ மாணவிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு பேராசிரியர் ஒருவரும் உரையாற்றினார்.
இதேவேளை மாணவர் ஒன்றியச் செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் எவையும் தடையின்றி நடைபெற்றன.

கூகுல் angry birds அசதல் பூங்கா!



கூகுலால் அறிமுகப்படுத்தப்பட்ட angry birds இணைய விளையாட்டு, சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவர் மத்தியிலும் சக்கைபோடு போடுகிறது.
இவ் angry birds ஐ மையமாக வைத்து சிறுவர் பூங்கா ஒன்று பின்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28 இல் இப் பூங்கா திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆடையை கிழித்து உடுத்து வரும் ஹெலிவூட் நட்சத்திரங்கள்


நாகரீகம் என்ற பெயரில் நல்ல ஆடைகளை கிழித்துப்போடும் பழக்கம் மாலைத்தேய கவர்ச்சி மாடல்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
அண்மையில், பிரபல கவர்ச்சி மாடல் ஆன கிம் கடார்சியனின் தங்கை கிழிந்த ஆடையுடன் வலம்வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக…

பாம்பை மனிதன் கடித்ததால் பாம்புக்கு என்னவாயிற்று -இந்தியா


குடிபோதையில் தன்னைக் கடித்த பாம்பை கடித்தவர் பலியாகினார். அவர் கடித்ததில் அந்த பாம்பும் இறந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளரடை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன். சுமை தூக்கும் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இவரது கொடுமை தாங்க முடியாமல் அவரது மனைவி பிரித்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பாகரன் பணியை முடித்து விட்டு வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் கிடந்த ஒரு நல்ல பாம்பை பார்க்காமல் அதை மிதித்துவிட்டார். இதையடுத்து அந்த பாம்பு அவரை கடித்தது. வலியால் துடித்த புஷ்பாகரன் அந்த பாம்பை பழி வாங்க தீர்மானித்தார். பாம்பை விரட்டிச் சென்று பிடித்து அதை கடித்து குதறினார்.
இதில் அந்த பாம்பு இறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் உடலில் விஷம் ஏறி அவர் மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்கள் புஷ்பாகரனை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

குருபெயர்ச்சி: வியாழ வழிபாடு செய்வது எப்படி: விரிவான பரிகாரங்கள்!


ஒரு ஜாதகம் மேன்மையடைய அவரது ஜாகத்தில் குருபகவான் சிறப்பாக இருக்க வேண்டும்.
அவரின் அருட்பார்வை பெற்றால் தான் கிரக தோஷங்கள் அகலும். குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருடமாகிறது. அதுவே குரு பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட குரு இன்று (17ம் தேதி) மாலை 5.18 மணிக்கு மேஷ ராசியில் இருந்து கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதம் ரிஷப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
குரு பெயர்ச்சியாகும் காலத்தில் இம்முறை சுக்ரன் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். குருவும், சுக்ரனும் முரண்பட்ட கிரகங்களாக கருதப்படுபவை என்பதால் சிலருக்கு தீவிர திருப்பங்கள் வெற்றிகள் வந்து சேரும்.
குரு பார்வைப்படப் போகும் கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், தொழில் வளம் சிறக்கும்.
மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வையில்லாததால் குரு பெயர்ச்சியன்று சிவாலயங்களுக்கு சென்று குருவை வழிபடலாம். குருவை வணங்கும் போது குருவின் பார்வை நம்மீது நேரடியாக பட்டால் குருபார்க்க கோடி நன்மை விளையும் என்பதால் குருவுக்கு நேராக நின்று வணங்க வேண்டும்.
குரு பகவானுக்கு உகந்த நாளாம் வியாழன்று விரதம் இருந்தால் எல்லா நலன்களும் கிட்டும். இதனைக் குரு வாரம் என்று கூறுவர்.
ஜாதகத்தில் குரு நீசமடைந்தவர்கள் இவ்விரதம் இருக்க வேண்டும். ஏழ்மையில் இருப்பவர்களும் திருமணமாகாதவர்களும், குடும்பத்தை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை இல்லாதவர்களும் இவ்விரதம் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் அவர்களின் குறைகள் நீங்கும். வியாழக்கிழமை ஸ்ரீராகவேந்திரர் குருவாயூரப்பன், குருபகவான் போன்ற கடவுளை எண்ணி பூஜை செய்யலாம். அந்நாளில் புதனுக்குரிய பொன்னிற ஆடை அணிய வேண்டும். நவக்கிரகத்தை சுற்றி வந்து வியாழ பகவான் முன்னின்று,
மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்காசான் மந்திரி
நறை செரி கற்பகம் பொன்
நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதானம் சிவகை மண்ணின் வீடு
போகத்தை நல்கும்
இறைவன் குரு வியாயன்.
இருமலர்ப்பாதம் போற்றி

என்னும் தோத்திரம் கூறி வணங்க வேண்டும்.
புஷ்பராகக்கல்லை மோதிரமாக அணிவது நலம். குருவை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குதூகலம் அதிகரிக்கும், செல்வ நிலை உயரும், செல்வாக்கு மேலோங்கும், திருமணம் கைகூடும், புத்திரபேறு வாய்க்கும், பூமியோகம் கிடைக்கும், வெற்றிப்படிக்கட்டுகளின் விளிம்பில் ஏறலாம்.
குறிப்பாக இதுவரை கசந்த காலங்கள் இனி வசந்தகாலங்களாக மாற்றும் ஆற்றல் குருவின் பார்வைக்கு மட்டுமே உண்டு. கஜகேசரி யோகம், குருசந்திர யோகம், குருமங்கல யோகம், ஹம்ச யோகம், சகட யோகம் என 5 விதமான யோகங்களை குரு அருட் பாலிப்பதால் குருவை வழிபடுங்கள். கோடி நன்மைகள் பெறுங்கள்.

மே 18 கிழிநெச்சியில் எப்டி


வன்னியின் இறுதிப்போரில் இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும், காணாமல் போனவர்களை விடுதலையை வேண்டியும் கிளிநொச்சி முருகன் ஆலயம் மற்றும் கிளிநொச்சி தேவாலயங்களில் மக்களால் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இன்று முற்பகல் கிளிநொச்சியில் இந்நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றின் புகைப்படப் பதிவுகள்.

பொன்சேகாவிற்கு விடுதலையாம்


முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.


2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, இராணுவத்திலிருந்து தப்பி சென்ற வீரர்களை தங்கவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.



இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. அத்துடன், பொன்சேகாவின் கடவுச்சீட்டினைப் பறிமுதல் செய்யவும் தேவைப்படுமிடத்து அதனை மீளவும் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பல்கலை மாணவன் தாக்கப்பட்டதை எதிர்த்து ஆர்பாட்டம்



யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலளார் இனந்தெரியாத நபர்களினால் இன்று வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டமையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தினால் பல்கலைக்கழக உப வேந்தரின் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டதுடன் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.


மாவை அழுத கண்ணீர்


எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உஇராயாற்றும் போதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். 

25 வீடுகளும் இரு காணிகளும் உரிமையாளர்களிடம் இராணுவம் ஒப்படைப்பு



யாழ், அரியாலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 25 வீடுகளும் இரு காணிகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு 512ஆவது படைப்பிரிவின் தளபதி விக்கிரமரட்ண தலைமையில் அரியாலையில் நடைபெற்றது. 

அரியாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக திகழ்ந்த மேற்படி வீடுகள். கடந்த 17 வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையிலேயே இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.