//]]>3

வெள்ளி, 18 மே, 2012

பாம்பை மனிதன் கடித்ததால் பாம்புக்கு என்னவாயிற்று -இந்தியா


குடிபோதையில் தன்னைக் கடித்த பாம்பை கடித்தவர் பலியாகினார். அவர் கடித்ததில் அந்த பாம்பும் இறந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளரடை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன். சுமை தூக்கும் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இவரது கொடுமை தாங்க முடியாமல் அவரது மனைவி பிரித்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பாகரன் பணியை முடித்து விட்டு வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் கிடந்த ஒரு நல்ல பாம்பை பார்க்காமல் அதை மிதித்துவிட்டார். இதையடுத்து அந்த பாம்பு அவரை கடித்தது. வலியால் துடித்த புஷ்பாகரன் அந்த பாம்பை பழி வாங்க தீர்மானித்தார். பாம்பை விரட்டிச் சென்று பிடித்து அதை கடித்து குதறினார்.
இதில் அந்த பாம்பு இறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் உடலில் விஷம் ஏறி அவர் மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்கள் புஷ்பாகரனை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக