//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

இலங்கையின் இரட்டை அழகு..!



2012ம் ஆண்டுக்கான தெரண வீற் மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை இம்முறை இரண்டு பேர் தட்டிச்சென்றுள்ளனர். முதலாவது இடத்தை வீனு உதானி சிறிவர்தன மற்றும் சுமுது பிரசாதினி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

மூன்றாவது இடத்தை ரமாஷா கலப்பத்தி பெற்றுக்கொண்டார். வரலாற்றில் முதற் தடைவையாக இருவர் மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை 


சுவீகரித்துக்கொண்டாலும் 2012ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் சுமுது பிரசாதினி கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் பிறந்தநாள் துபாயில்


நடிகை சிம்ரன் தனது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாயில் கேக் வெட்டி கொண்டாடினார்.

வெள்ளித்திரையில் கொடிகட்டி பிறந்த நடிகை சிம்ரன், கல்யாணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டார்.

இப்போது சின்னத்திரையில் அசத்தி கொண்டிருக்கும் சிம்ரன், ஜெயா டி.வி.யின் ஜாக்பாட் நிகழ்ச்சி‌யை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார்.


இந்த நிகழ்ச்சியின் 500வது எபிசோட்டை துபாயில் நடத்தி வருகின்றனர் ஜெயா டி.வி. குழுவினர். இதற்காக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாய் சென்றிருந்தார் சிம்ரன்.

சிம்ரனுக்கு நேற்று 04.04.12ம் திகதி பிறந்தநாள். தனது பிறந்தநாளை துபாயில் உள்ள இந்திய‌ உய‌ர்நிலைப்ப‌ள்ளியின் ஷேக் ராஷித் அர‌ங்கில் த‌ன‌து க‌ண‌வ‌ர், குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் ர‌சிக‌ர்க‌ளுட‌ன் எளிய‌ முறையில் கொண்டாடினார்.

ப‌ல்வேறு த‌மிழ் அமைப்புக‌ளின் பிர‌முக‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து வாழ்த்துக்க‌ளை ந‌டிகை சிம்ர‌னுக்கு தெரிவித்துக் கொண்ட‌ன‌ர்.

1 மாத கைக்குழந்தையை வீசிய 17 வயது திருமணம் ஆகாத தாய்



17 வயது சிறுமி ஒருவர் தான் ஈன்றெடுத்த 1 மாத கைக்குழந்தையை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீசிய சம்பவமொன்று தொடம்கொட – கந்தனகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் பற்றி எமக்கு மேலும் தெரியவருவதாவது,
தொடம்கொட – கந்தனகொட பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி திருமணம் ஆகாதவர்.
இவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதன் விளைவாக ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை ஒன்றை ஈன்றெடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (03) அதிகாலை 3.30 மணியளவில் தான் ஈன்ற குழந்தையை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீசியுள்ளார்.
இந்த சம்பவத்தை காலை வேளையில் அறிந்து கொண்ட அயலவர்கள் குழந்தையை கிணற்றில் இருந்து மீட்டு நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தபோது குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவம் குறித்து தொடம்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் 17 வயது தாயை (சிறுமியை) கைது செய்துள்ளனர்.

டைட்டானிக் மாண்டது ஆணிகளே

கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி டைட்டானிக் கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.


இக்கப்பலில் பயணிகள், ஊழியர்கள் என 2,200க்கும் அதிகமானோர் பயணிகள் இருந்தனர். டைட்டானிக் கப்பலில் அவசர கால படகுகள் குறைவாக இருந்ததால், 710 பேர் மட்டுமே மீட்க முடிந்தது. மீதி 1500 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி பலியாயினர்.

உலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த இந்த துயர சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி டைட்டானிக் விபத்து தொடர்பான பல தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
தரம் குறைந்த ஆணியால் வந்த வினை: 
அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் அறிவியல் கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கார்பீல்டு டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கான முக்கியமான காரணங்களை கூறியுள்ளார்.

உலோகவியல் (மெட்டாலர்ஜி) துறையில் அதிக அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் டிம் போக், ஜெனிபர் ஹூப்பர் மெக்கர்ட்டி ஆகியோர் உடைந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை ஆராய்ச்சி செய்தனர்.
அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லண்ட் உல்ஃப் தளத்தில்தான் டைட்டானிக் கப்பல் 1909-11ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அங்கு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கப்பலின் அடிப்பகுதியை கோர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ‘ரிவிட்’ (ஆணி) தரமானதாக இல்லை என்று தெரியவந்திருக்கிறது.

அந்த ரிவிட்கள் சரியாக வார்க்கப்படவில்லை என்றும் அவற்றை ஒழுங்கின்றி அடித்து கப்பலை கோர்த்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
இதனால், கப்பலின் ஒரு பகுதி மற்ற பகுதிகளை விட உறுதித் தன்மை குறைவாக இருந்திருக்கிறது. அந்த பகுதி பனிப் பாறையில் இடித்ததும் உடைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது.

செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற ஆணிகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தியதே படுபயங்கர விபத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிட்டது.

அடுத்ததாக, வெப்ப மாற்றம். 1912-ல் கரீபியன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக வெப்பம் காணப்பட்டது. இதனால், கடலுக்குள் நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருந்திருக்கிறது.

இந்த நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட பனிப் பாறைகள் திரண்டு கப்பல் செல்லாதவாறு தடையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆக, கடலில் ஏற்பட்டிருந்த இயற்பியல் மாற்றங்களும் துரதிர்ஷ்டவசமாக கப்பல் விபத்துக்கு காரணமாகிவிட்டது என்று ரிச்சர்ட் கூறியுள்ளார்.

3D யில் மாறிய டைட்டானிக்: 
உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ல் வெளியான படம் டைட்டானிக்.

கப்பல் விபத்தை சித்தரித்து பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை குவித்து சாதனை படைத்தது.

இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டைட்டானிக் (1997) படம் வெளிவந்த பிறகு, நீல் டிகிராஸ் டைசன் என்ற வானியல் நிபுணர் ஒருவர் கேமரூனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

படத்தின் நாயகி கேத் வின்ஸ்லெட் வானில் இருக்கும் நட்சத்திரங்களை ரசிப்பது போல ஒரு காட்சி அமைத்திருக்கிறீர்கள். ஆனால், 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி இரவு (கப்பல் மூழ்கிய இரவு) நட்சத்திரங்கள் அந்த நிலையில் இருக்கவில்லை.

எல்லாவற்றையும் மிக துல்லியமாக கவனித்து செய்யும் கேமரூன் இந்த சாதாரண தவறைக் கூட செய்திருக்க கூடாது என அதில் கூறியிருந்தார்.

இதை கருத்தில் கொண்டு, சம்பவம் நடந்த போது நட்சத்திரங்கள் எப்படி இருந்ததோ, அச்சு அசலாக அதே போலவே 3டி படத்தில் மாற்றம் செய்திருப்பதாக கேமரூன் கூறியுள்ளார்.

ஜெனிவால் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்



சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த, இரண்டு நாள் சிறப்பு விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. 

இந்த விவாதத்தில் உரையாற்றிய ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், சிறிலங்கா அரசுக்கு எதிராக மேற்குலகம் சதி செய்வதாகக் குற்றம்சாட்டினர்.
அதேவேளை, எதிர்க்கட்சியினர், சிறிலங்கா ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் – நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாக எச்சரித்தனர்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கருத்துகள்-
சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெரும-
“மனிதஉரிமைகள் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, அபிவிருத்தி அடைந்த நாடுகளை சக்திவாய்ந்த நாடுகள் மிரட்டுவதை ஐ.நா அனுமதிக்கக் கூடாது.
ஜெனிவா தீர்மானம் நாட்டில் மீண்டும் சிங்கள- தமிழ் இனங்களுக்கிடையிலான பிரச்சினைக்கே கொண்டு செல்லும்.
சிறிலங்கா மீதான இந்தத் தீர்மானம் மனிதஉரிமைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.
இராஜதந்திர ரீதியாக நாம் உண்மையை உலகிற்கு சொல்வோம்.
சிங்கள மக்கள் அனுபவிக்கும் எல்லா சுதந்திரத்தையும் உரிமைகளையும் தமிழ்மக்கள் அனுபவிப்பதை உறுதிப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.“
சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச-
“ஜெனிவா தீர்மானத்தின் பின்னர், ஏற்பட்ட சவால்களை முறியடிப்பதில் சிறிலங்கா அதிபர் மிகவும் தைரியத்துடன் செயற்பட்டுள்ளார்.
எனினும் எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இரகசியச் சதி செய்கின்றன.
வேலுப்பிள்ளை பிரபாகரனை வைத்து அவர்களால் செய்ய முடியாது போனதை, பராக் ஒபாமாவை வைத்து செய்ய முனைகிறார்கள்.
வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டுடன் ஆட்சிக்கு வரலாம் என்று கனவு காண்கிறார்கள்.“
ஐதேக. நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன்-
“ஜெனிவா தீர்மானம் குறித்து சிறிலங்கா அமைச்சர்கள் கொள்கைத் தீர்மானத்தின் அடிப்படையிலன்றி கண்டபடி கருத்துகளை வெளியிடுகிறார்கள்.
எந்தவொரு நாடும் சிறிலங்கா விவகாரத்தில் தலையிட முடியாது என்கிறது சிறிலங்கா அரசின் கொள்கை அறிக்கை.
இதுதான் சிறிலங்கா அரசின் நிலைப்பாடு என்றால், ஐ.நாவின் உறுப்புரிமையில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.“
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க–
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் குழப்பமான அறிக்கைகளை வெளியிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கக் கூடாது- அது முழுமையற்றது.
அதில், இந்தியாவும் அமெரிக்காகவும், விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சியையும், ஆயுதங்களையும் கொடுத்த – போரின் முன்னைய காலகட்டங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.“
ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல-
“சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு நிலைமை எந்தளவுக்கு மோசம் என்பது நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவர் வேறு விதமாகச் சொல்கிறார்.
ஜெனிவா தீர்மானம் சட்டரீதியாக சிறிலங்காவைக் கட்டுப்படுத்தாது என்றும், அது நாட்டின் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறுகிறார்.
இந்தத் தீர்மானத்தை வைத்து சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்குநாடுகள் கொண்டு வரக் கூடும்.
சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஐ.நா ஊடாக விதிக்கத் தேவையில்லை. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அதனைச் சுயமாகவே செய்யலாம்.
சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்த தவறிவிட்டது. அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கு 13வது திருத்தம் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியையும் இல்லை என்று கூறியது.
இந்தத் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் சரிவரக் கையாளாது போனால், சூடானில் ஏற்பட்டது போன்று நாட்டை பிளவுபடுத்தும் நிலைக்குக் கொண்டு செல்லும்.“

செல்சி, ரியல் மாட்ரிட் அரையிறுதிக்கு தகுதி



சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டியில் பார்சிலோனா- செல்சி, ரியல் மாட்ரிட்- பேயர்ன் மியூனிச் அணிகள் மோதுகின்றன.

நேற்று லண்டன் ஸ்டிராம் போர்டு பிரிட்ஜ் மைதானத்தில் செல்சி, பென்பிகா அணியை சந்தித்தது. ஏற்கனவே நடந்த முதல் லெக் காலிறுதி ஆட்டத்தில் செல்சி 1-0 என்று வெற்றி பெற்றிருந்தது.

நேற்று நடந்த ஆட்டத்தில் 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை செல்சி வீரர் பிராங்க் லேம்பர்டு கோலாக மாற்றினார். இதற்கு 85வது நிமிடத்தில் பென்பிகா அணியின் சேவி கார்சியா பதில் கோல் அடித்தார்.
ஆனாலும் கடைசியில் 92வது நிமிடத்தில் செல்சி அணியின் ரால் மெர்சிலஸ் 2வது கோலை அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் செல்சி வெற்றி பெற்று 3-1 என்ற சராசரி கோல் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது.

யாழ்.மாவட்டத்தில் வர்ணத்திலான சீருடை



யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் பணியாற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு ஒரே வர்ணத்திலான சீருடை வழங்ப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இதற்காக பெண்களுக்கான சேலைகள் அடங்கிய ஒரு தொகுதி சீருடைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


எதிர்வரும் புதுவருடத்திலிருந்து இவர்கள் கடமையின் போது கட்டாயம் இதனையே அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகிருந்த நிலையிலேயே இந்நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் நீல நிலத்திலான சீருடையே வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே ஒரு பகுதி உத்தியோகஸ்தர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lumia 900 கைப்பேசிகள்


நொக்கியா கோப்பரேசனின் புதிய அறிமுகமாக Nokia Lumia 900 கைப்பேசிகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஸ்மார்ட் கைப்பேசிகளின் வடிவமைப்பை ஒத்ததாக உருவாக்கப்பட்டுள்ளன.


4.3 அங்குல தொடுதிரையையும், 8 மெகாபிக்சல் கமெராவையும் கொண்டுள்ளன. மேலும் இந்த காமெரா மூலம் 720பிக்சல் முதல் 1080பிக்சல் வரையான மாறுபட்ட பிரிதிறன் கொண்ட வீடியோப்பதிவை மேற்கொள்ள முடியும்.
எனினும் இந்த போன்கள் மூலம் ஏற்படுத்தப்படும் அழைப்புக்கள் ஏனைவற்றுடன் ஒப்பிடும்போது சற்று தரம் குறைந்ததாக காணப்படுகின்றதுடன், அதன் அமைப்பு இலகுவான பாவனைக்கு உகந்ததாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போனின் பெறுமதி 100 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

நகரில் இரவு புலி

ஜேர்மனி நாட்டில் உள்ள பார்யுன்சிவிக் நகரில் இரவு நேரத்தில் சாலை வழியாக ஒரு இளம்பெண் நடந்து சென்றார். தற்செயலாக அவர் திரும்பி பார்த்த போது நடைபாதையில் புலி ஒன்று நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


உடனே அவசர பொலிசிற்கு தொடர்பு கொண்டு, வீதியில் புலி ஒன்று சுற்றித்திரிகிறது என்று கூறினார். இதனையடுத்து பொலிஸ் படை துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வனவிலங்கு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

விமானத்தை தரையிறக்கிய மனைவி


அமெரிக்க நாட்டின் விஸ்கான்சின் நகருக்கு அருகில் மனைவியுடன் சிறு விமானத்தில் சென்ற பைலட் கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார்.


அதுவரை விமானத்தை ஓட்டியே பழக்கம் இல்லாத மனைவி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தந்து அவர்களுடைய உதவியுடன் விமானத்தைப் பத்திரமாக தரை இறக்கினார். ஆனால் அதற்குள் கணவர் இறந்துவிட்டார்.
கணவருக்கு வயது 81, மனைவிக்கு வயது 80. இருவருடைய பெயர்களையும் இதர விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
செஸ்னா ரக விமானத்தைக் கணவன் ஓட்டினார். திடீர் மாரடைப்பால் அவர் அப்படியே இருக்கையில் மயங்கிச் சாய்ந்தார்.
மனைவி உடனே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தந்தார். அவர்கள் பயிற்சி பெற்ற விமானி ஒருவரை விமானத்தில் அனுப்பினர். அவர் இந்த விமானத்துடன் பறந்து வெளியில் இருந்தபடியே விமானத்தை இயக்க அவருக்குக் கற்றுத்தந்தார்.
விமானத்தின் வலதுபுற இன்ஜினில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. விமான நிலையத்தை 10 முறை வட்டமடித்த பிறகு தரை இறக்கினார் அந்தப் பெண்.
2 அல்லது 3 முறை குலுங்கிய விமானம் மூக்கு மண்ணில் புதைய நின்றது. ஆனால் அதற்குள் அவருடைய கணவர் இறந்து விட்டார். அந்தப் பெண்ணின் உறுதியையும் பொறுமையையும் அனைவரும் பாராட்டினர்.

சச்சின் டெண்டுல்கரின் பெயர் விருதுக்கு பரிந்துரை


இந்தியாவின் மிக உயரிய கெளரவமாக கருதப்படும் பாரத ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரை மகாராஷ்டிர அரசு பரிந்துரை செய்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் சட்டப்பேரவையில் இதை அறிவித்தார்.




உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பின்பு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை கெளரவித்தோம். அப்போதே மண்ணின் மைந்தனான சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது என சவாண் தெரிவித்தார்.


முன்னாள் முதல்வர் யஷ்வந்தராவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு பரிந்துரை செய்துள்ளது.

பாம்பால் தரையிறங்கிய விமானம்

அவுஸ்திரேலியாவில் விமானத்தில் பாம்பு நுழைந்ததால் பயந்த விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.பிராடன் பீலீனர்ஹாசத் என்ற விமானி விமானத்தை இயக்கி உள்ளார். விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விமானியின் அறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்ததால் பயந்த விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.

நானும் ஒரு பெண் தான்


நானும் ஒரு பெண் தான், எனவே என்னை மிஸ் கனடாப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கனடாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கூறியுள்ளார்.
அந்த அழகியின் பெயர் ஜென்னா தலக்கோவா. இவர் மிஸ் கனடா போட்டியின் இறுதிச் சுற்று வரை வந்தார்.
ஆனால் அதற்கு மேல் இவரை அனுமதிக்க முடியாது என்று போட்டியை நடத்தும் டொனால்ட் டிரம்ப் அமைப்பு கூறி விட்டது.
அவர் ஆணாக இருந்து அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர். இயற்கையான பெண் இல்லை, எனவே அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் கூறி விட்டது.
இதனால் கோபமடைந்த ஜென்னா இதுகுறித்து கூறுகையில், எனது  கடவுச்சீட்டைப் பாருங்கள். என்ன போட்டுள்ளது, பெண் என்றுதானே போட்டிருக்கிறார்கள். பிறகு எப்படி நான் ஆணாக முடியும்.
என்னை தொடர்ந்து போட்டியில் அனுமதிக்க முடியுமா, முடியாதா என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த வேண்டும். இதில் நான் வெற்றி பெற்றால் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க முடியும் என்றார்.
வான்கூவரைச் சேர்ந்த 23 வயதான ஜென்னா, 19 வயதாக இருக்கும்போது பாலின அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் ஆவார். ஆனால் தான் ஒரு பெண்ணாக பல பிரச்சினைகளை இந்த சமுதாயத்தில் அனுபவித்து விட்டதாக வேதனையுடன் கூறினார்.
ஜென்னாவின் வ்ககீல் குளோரியா அல்லர்ட் கூறுகையில், ஜென்னா ஒரு அற்புதமான, அழகான பெண். அவரை போட்டியில் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
அவரது பாலினம் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி இருக்கையில் எப்படி டிரம்ப் இப்படி நடந்து கொள்ளலாம்?
ஜென்னாவை போட்டியில் பங்கேற்க அனுமதிப்பதோடு, இயற்கையாகவே பெண்ணாக பிறந்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறையையும் கூட டிரம்ப் நீக்க வேண்டும் என்றார்.

24 மணிநேரமும் இணையத்தள கண்காணிப்பு


துபாய் நாட்டில் 24 மணிநேரமும் இளைய சமுதாயம் பயன்படுத்தும் பேஸ்புக், டுவிட்டர் இணையத்தளங்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.



உலகம் முழுவதும் பல நாடுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துகளை லட்சக்கணக்கான மக்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்கள் வழியாக பரிமாறிக் கொள்கின்றனர்.

இதனால் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் புரட்சி வெடித்தது. சீனாவிலும் இதுபோன்ற விமர்சனங்கள் இணையத்தளங்கில் பரவலாக வெளியானதால், பல இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையத்தளங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் துபாய் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து துபாய் சைபர் கிரைம் துணை இயக்குனர் சலீம் ஒபய்த் சல்மீன் கூறுகையில், சமூக இணையத்தளங்களில் குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கவர்ச்சி காட்ட துவங்கியுள்ள ஸ்ரேயா!


புதுமுக நடிகைகளின் படையெடுப்பால் பழைய நடிகைகளான த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்களுக்கு வாய்ப்பு குறைந்து வருகிறது. 

இதனால் புதுமுக நடிகைகளுக்கு இணையாக ஈடுகொடுக்க கடுமையாக போராடி வருகிறார்கள். 

சிலர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளனர். சிலர் கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளனர். 

இந்நிலையில் பீல்டு அவுட்டான நடிகைகளின் பட்டியலில் இருக்கும் நடிகை ஸ்ரேயா, அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

இப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர் விலைமாது கேரக்டர். விலைமாதுவாக நடிப்பது குறித்து நடிகை ஸ்ரேயாக கூறியுள்ளதாவது, படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது. அதனால் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார். 

6000 பேர் மீள்குடியேற்றம் முல்லைத்தீவில்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்படாதிருந்த 6000 பேர் எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்..எஸ்.சால்ஸ் தெரிவித்துள்ளார். 


கண்ணிவெடி அகற்றும் பணியில் ஏற்பட்ட தாமதமே மீள்குடியேற்றம் செய்யப்படாமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 



சர்வதே கண்ணிவெடி தினத்தை முன்னிட்டு நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். 



வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் 12 குழுக்கள் இடம்பெற்று வருவதாகவும் கண்ணிவெடியில் அகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2009ம் ஆண்டே அதிகமாக காணப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இலங்கை அகதிக்கு மில்லியன் டொலர் நஷ்டஈடு!


பாலியல் குற்றவாளியாக காணப்பட்டுள்ள இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய அரசு மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கவுள்ளது. 

சட்டத்துக்கு புறம்பான வகையில் குடிவரவு தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார் என்பதற்காகவே இவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட உள்ளது. 

இவரின் பெயர் பெர்னாண்டோ. வயது 50. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வந்தவர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய 1203 நாட்கள் குடிவரவு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். 

இவரின் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் செவிமடுக்க தவறி இருந்தது. 2003 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நாட்களில் இச்சிறை வைப்பு இடம்பெற்று இருந்தது. 

வெளியில் வந்த இவர் சட்டத்துக்கு புறம்பாகவும், தவறாகவும் சிறை வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இவர் சட்டத்துக்கு புறம்பாகவும், தவறாகவும் தடுத்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஒரு நாள் சிறை வாழ்க்கைக்கு 3000 டொலர் என்கிற கணக்குப்படி இவருக்கு அரசு நட்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

இந்து-சிங்களம், இந்து-இஸ்லாம் காதல் ஜோடிகளுக்கு மெகசின் சிறையில் இன்று திருமணம்! (படங்கள்)


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் ஒருவர் உள்ளிட்ட இருவர் இன்று (05) திருணம பந்தத்தில் இணைந்து கொண்டனர். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 35 வருடகால சிறை தண்டனை பெற்றுள்ள வவுனியா பாவற்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் இளங்கேஸ்வரன் (34 வயது), வவுனியா நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குணசேன சுதர்ஷினி (32 வயது) என்ற பெண்ணை இன்று திருமணம் செய்து கொண்டார். 

இளங்கேஸ்வரனுக்கும் சுதர்ஷினி என்ற சிங்கள பெண்ணுக்கும் இடையில் 15 வருட கால காதல் தொடர்பு இருந்து வந்த நிலையில் இன்று இவர்கள் வெலிக்கடை புதிய மெகசின் சிறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களுடை திருமணத்தை அடுத்து இளங்கேஸ்வரனுக்கு தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை கிடைக்கும் என உறவினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 

இதேவேளை, போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டு கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ள கொழும்பு ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் புஸ்பராஜா (34 வயது) இன்று தனது காதலியான மொஹமட் ராசிக் பாதிமாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். 

இந்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவ்விருவருக்கும் இடையில் 10 வருட காதல் தொடர்பு இருந்து வந்துள்ள நிலையில் இன்று திருமணம் செய்து காண்டுள்ளனர். 

இந்த திருமண வைபவமும் வெலிக்கடை புதிய மெகசின் சிறையில் இடம்பெற்றது. 

இன்றைய இரு திருமண நிகழ்வுகளையும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். 
(http://adaderana.lk)

பந்துல வெளியிட்ட கருத்திற்கு பதில்லடி


எமது சகோதர தொலைக்காட்சியான ரீவி தெரணவில் கடந்த செவ்வாய் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிய வாத பிட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்ட கருத்துக்கு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பதில் அளித்துள்ளனர். 


பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைகளில் குறைந்த அளவில் உணவுப் பொதிகள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார். 



2500 ரூபாவை கொண்டு தனி மனிதன் மாதமொன்றிற்கு உணவு உண்டு நீர் அருந்தி வாழ முடியும் என தான் தெரிவித்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு கூறியிருந்தார். 



இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் சில வளங்கள் இலவசமாகக் கிடைப்பதால் உணவுப் பொதியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 



மின்சாரம், நீர், கேஸ் என்பவை பல்கலைக்கழகத்தில் இருந்து இலவசமாகக் கிடைப்பதால் உணவுப் பொதியை 25-30 ரூபா வரை குறைத்து விற்பனை செய்ய முடிவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 



எனினும் மின்சாரத்திற்கு சிறிய கட்டணம் செலுத்தப்படுவதாகவும் நீர், கேஸிற்கு பல்கலைக்கழகத்தால் கட்டணம் செலுத்தப்படுவதில்லை எனவும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் க்சனிகா கிரும்புரேகம தெரிவித்துள்ளார். 



இந்த நிலையில் அமைச்சர் சொல்லும் விலைக்கு ஏற்கத்தக்க தரமான உணவை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் அசேல சம்பம் குறிப்பிட்டுள்ளார். 

யாழ் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளையும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு


யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதுடன், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளையும் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், கடந்த சில நாட்களாக, இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதனால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் முறையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அவ்வாறு அத்துமீறலில் ஈடுபடும் இந்தியக் கடற்றொழிலாளர்கள், தடைசெய்யப்பட்ட டைனமற் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், இரவு வேளைகளில் இழுவைப்படகில் வரும் அவர்கள், படகில் விளக்குகளை அணைத்துவிட்டு வெளிச்சம் இல்லாமல் பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 



இதனால் அவர்கள் வந்து செல்வது தெரியாதிருப்பதாகவும் குறித்த பகுதி கடற்றொழிலாளர்களின் சிறு படகுகள், இந்திய இழுவைப் படகுகளில் மோதுவதாகவும் கூறப்படுகிறது. 

இங்கிலாந்து அணி 460 ஓட்டங்கள்


தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 460 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பாக பீட்டசன் 151 ஓட்டங்களை பெற்றார். 


பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை சிறப்பம்சமாகும். ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடினர். 



ஸ்ரோர்ஸ் 61 ஓட்டங்களையும், அலெஸ்டயர் குக் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 



இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்களையும் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது. மஹேல ஜெயவர்தன 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

மொபைலில் தமிழ் பேஸ்புக்

மொபைல் போனில் தமிழில் பேஸ்புக் பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம்செய்யப்பட உள்ளதாக பேஸ்புக் இணையதளம் தெரிவித்துள்ளதுஇந்தியாவில்பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்தமிழ், மலையாளம் உள்ளிட்ட 8இந்திய மொழிகளில் பேஸ்புக் அறிமுகம்செய்யப்பட உள்ளதுஇந்தியாவில் நான்கரை கோடி பேர்பேஸ்புக் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண நிலப்பரப்பில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்







யாழ்ப்பாண நிலப்பரப்பில் கடல்நீர் கலப்பதால் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார்.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க "உலகத்தை அணிதிரட்டுவோம்" என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (04.04.2012) புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே இவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அழகான கடற்கரைகள் இருக்கின்றன என்றும், இந்த கடற்கரைகளில் கழிவுப் பொருட்களை அகற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் கூறிய அவர், யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு எமக்கு ஏற்படக் கூடிய  பொருளாதாரப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்றார்.

இலங்கையில் காடுகள் அழித்தல் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாது தொடர்ந்து நீடித்து வருகிறது.  இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் ஊடாக உல்லாசத் துறையை மேம்படுத்த முடியும் எனவும் அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்தார்.

சூழலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எதிர்காலத்தில் இயற்கையால் எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படவாய்பு இல்லை எனக் குறிப்பிட்டதுடன், தற்போது கடல் நீர் ஒவ்வொரு வருடமும் ஒரு கிலோ மீற்றர் தூரம் தரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் இதனால் வயல் நிலங்களில் உவர்நீர் கலக்கின்றமையால் நெற்பயிர்ச்செய்கை பாதிப்படையும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு தேரோட்டம் ஒரே நாளில்



நாயன்மார்க்கட்டு வெயிலுகந்த விநாயகர் ஆலயத்திலும், நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திலும் இன்று(04.04.2012) புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
இந்து சமுத்திரத்தின் முத்து எனப் போற்றப்படும் ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாணம் நல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சிங்கையாரியச் சக்கரவர்த்தியால் தனது அரண்மனைக்கு கிழக்கே தான் தரிசித்துச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஆலயமே இந்த வெயிலுகந்த விநாயகர் ஆலயம்.
இங்கு ஆதியிலிருந்தே சைவக்குருக்களினால் பரிபாலிக்கப்பட்டு, நித்திய, நைமித்திய வழிபாடுகள் ஆற்றப்பட்டு வருகின்றது.
இந்த ஆலயத்தின் 2012ஆம் ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவம் மார்ச் 27ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய, இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது. காலை 9.00 மணியளிவில் வசந்தமண்ட சையினைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்குத் தேர் வீதியுலா வந்தது.
இந்த தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், காவடி, பாற்செம்;பு, அங்கப் பிரதட்சணம் என தமது நேர்த்திக் கடன்களை நிறுவேற்றினர். நாளை வியாழக்கிழமை தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதேவேளை, சட்டநாதர் சிவன் (நல்லைநாயகி சமேத நல்லைநாத சுவாமி) ஆலயத்திலும் இன்று இன்று (04.04.2012) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆலயபிரதம குரு சபரிமலை குருசுவாமி சபரீ கான விநோதன் பிரம்மஸ்ரீ தானு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் ரதோற்சவம் நடைபெற்றது.
கணபதி, முருகன், வீரலட்சுமி அம்மன், சண்டேஸ்வரர் ஆகிய சுவாமிகள் கட்டுத்தேரிலும், சட்டநாததர் சுவாமி இரதத்திலுமாக 5 இரதங்களில் பவணிவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தனர்.