//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

1 மாத கைக்குழந்தையை வீசிய 17 வயது திருமணம் ஆகாத தாய்



17 வயது சிறுமி ஒருவர் தான் ஈன்றெடுத்த 1 மாத கைக்குழந்தையை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீசிய சம்பவமொன்று தொடம்கொட – கந்தனகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் பற்றி எமக்கு மேலும் தெரியவருவதாவது,
தொடம்கொட – கந்தனகொட பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி திருமணம் ஆகாதவர்.
இவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதன் விளைவாக ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை ஒன்றை ஈன்றெடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (03) அதிகாலை 3.30 மணியளவில் தான் ஈன்ற குழந்தையை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீசியுள்ளார்.
இந்த சம்பவத்தை காலை வேளையில் அறிந்து கொண்ட அயலவர்கள் குழந்தையை கிணற்றில் இருந்து மீட்டு நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தபோது குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவம் குறித்து தொடம்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் 17 வயது தாயை (சிறுமியை) கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக