//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

சச்சின் டெண்டுல்கரின் பெயர் விருதுக்கு பரிந்துரை


இந்தியாவின் மிக உயரிய கெளரவமாக கருதப்படும் பாரத ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரை மகாராஷ்டிர அரசு பரிந்துரை செய்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் சட்டப்பேரவையில் இதை அறிவித்தார்.




உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பின்பு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை கெளரவித்தோம். அப்போதே மண்ணின் மைந்தனான சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது என சவாண் தெரிவித்தார்.


முன்னாள் முதல்வர் யஷ்வந்தராவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு பரிந்துரை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக