//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

இலங்கை அகதிக்கு மில்லியன் டொலர் நஷ்டஈடு!


பாலியல் குற்றவாளியாக காணப்பட்டுள்ள இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய அரசு மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கவுள்ளது. 

சட்டத்துக்கு புறம்பான வகையில் குடிவரவு தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார் என்பதற்காகவே இவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட உள்ளது. 

இவரின் பெயர் பெர்னாண்டோ. வயது 50. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வந்தவர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய 1203 நாட்கள் குடிவரவு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். 

இவரின் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் செவிமடுக்க தவறி இருந்தது. 2003 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நாட்களில் இச்சிறை வைப்பு இடம்பெற்று இருந்தது. 

வெளியில் வந்த இவர் சட்டத்துக்கு புறம்பாகவும், தவறாகவும் சிறை வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இவர் சட்டத்துக்கு புறம்பாகவும், தவறாகவும் தடுத்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஒரு நாள் சிறை வாழ்க்கைக்கு 3000 டொலர் என்கிற கணக்குப்படி இவருக்கு அரசு நட்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக