//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

6000 பேர் மீள்குடியேற்றம் முல்லைத்தீவில்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்படாதிருந்த 6000 பேர் எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்..எஸ்.சால்ஸ் தெரிவித்துள்ளார். 


கண்ணிவெடி அகற்றும் பணியில் ஏற்பட்ட தாமதமே மீள்குடியேற்றம் செய்யப்படாமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 



சர்வதே கண்ணிவெடி தினத்தை முன்னிட்டு நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். 



வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் 12 குழுக்கள் இடம்பெற்று வருவதாகவும் கண்ணிவெடியில் அகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2009ம் ஆண்டே அதிகமாக காணப்பட்டதாகவும் அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக