துபாய் நாட்டில் 24 மணிநேரமும் இளைய சமுதாயம் பயன்படுத்தும் பேஸ்புக், டுவிட்டர் இணையத்தளங்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துகளை லட்சக்கணக்கான மக்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்கள் வழியாக பரிமாறிக் கொள்கின்றனர்.
இதனால் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் புரட்சி வெடித்தது. சீனாவிலும் இதுபோன்ற விமர்சனங்கள் இணையத்தளங்கில் பரவலாக வெளியானதால், பல இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையத்தளங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் துபாய் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து துபாய் சைபர் கிரைம் துணை இயக்குனர் சலீம் ஒபய்த் சல்மீன் கூறுகையில், சமூக இணையத்தளங்களில் குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக