//]]>3

சனி, 5 மே, 2012

24h news 5.5.2012 .இரவுச்செய்திகள்(வீடியோ)

ஜனாதிபதியின் சம்மா சம்புத்த வாழ்த்து செய்தி!


ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்து செய்தி…!
புத்த பெருமானின் வாழ்வில் மிக முக்கிய மூன்று நிகழ்வுகளைக் குறித்து நிற்கும் வெசாக் பெருவிழாவை பூரண அரச அனுசரணையுடன் கொண்டாடக் கிடைத்தமையை நான் பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.
கடந்த வெசாக் பண்டிகையின் போது உதயமான ஸ்ரீசம்புத்தத்வ ஜயந்தி வருடத்தில் இலங்கைவாழ் பெளத்த மக்கள் பெளத்த கொள்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்ததைக் கண்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைந்தோம்.
புத்தபெருமானின் மீதான ஆழ்ந்த தியானத்தின் அபரிமிதமான மகிழ்ச்சியுடன் இந்த வெசாக் தினத்தில் சம்புத்தத்வ ஜயந்தி கொண்டாட்டங்கள் நிறைவுபெறுகின்றன என்ற வகையில் இந்த வருடத்தில் இலங்கையெங்கும் பரவிச் சென்ற பாரிய சமய எழுச்சி- ஞானம்- அர்ப்பணம் என்பவற்றை நாம் நினைவுகூருகிறோம்.
புத்த பெருமானின் மீதும் அவரது போதனைக ளின் மீதும் உள்ள இந்த மகிழ்ச்சி எல்லா இலங்கையர்களினதும் உள்ளங்களிலும் நீடித்து நிலைத்துநிற்க வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.
குழப்பமில்லாத ஒரு வாழ்க்கையை முன்னெடுக்க புத்தரின் போதனைகள் சிறந்த வழியாகும்.
இந்தப் போதனைகள் தீமைகள் இல்லாத வாழ்வுக்கும் ஈருலக வெற்றிக் கும் வழிகாட்டுகின்றன.
பிழையான எண்ணங்கள்- சிந்தனைகளைக் கொண்டவர்கள் எமது முன்னேற்றத்தின் வாயில்களை மூடிவிடும் பல்வேறு பிரிவினைகளையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றனர் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
அத்தனாவ கதங் பாபங் – அத்தனா ஸங்கிலிஸ்ஸதி
அத்தனா அகதங் பாபங் – அத்தனாவ விஸ¤ஜ்ஜிதி
ஸ¤த்தி அஸ¤த்தி பச்சத்தங் – நாஞ்ஞோ அஞ்ஞங் விஸோதயே
உன்னாலேயே பாவம் செய்யப்படுகிறது. உன்னையே அது அசுத்தப்படுத்துகிறது. பாவம் செய்யாமலிருப்பவர் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்கிறார். பாவமும் புண்ணியம் உன்னாலேயே செய்யப்படுகின்றன.
ஒருவர் இன்னொருவரைச் சுத்தம் செய்ய முடியாது என தம்மபதம் குறிப்பிடுகின்றது.
எனவே இந்த வெசாக் பண்டிகைக் காலத்தில் எல்லாவகையான பிரிவினைகளையும் ஒதுக்கிவிட்டு தேசிய ஐக்கிய சமய நல்லிணக்கத்திற்காக அர்ப்பணத்துடன் செயற்பட்டு பெளத்த போதனைகளின் ஒளியில் ஈருலக வெற்றிக்கு வழிசெய்வோம்.
உங்கள் எல்லோருக்கும் சம்மா சம்புத்த நல்லாசிகள்!

தொலைக்காட்சி நிகள்வு்களின் ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது பாருங்கள் (வீடியோ)

தொலைக்காட்சி நிகழ்சிக்கு முன் நடைபெறும் சில நிகழ்வுகள் உங்களுக்கு கவனமாக செயற்படுங்கள்