//]]>3

புதன், 30 மே, 2012

காலி கோட்டையின் கண்காணிப்பு பீரங்கிகள் 100 மாயம்


காலி கோட்டையின் கண்காணிப்பு நிலைகளில் பொருத்தப்பட்டிருந்த 100 பீரங்கிகள் காணாமற் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒல்லாந்தரின் ஆட்சியில் இலங்கை இருந்த போது, பயன்படுத்தப்பட்ட பீரங்களே காணாமற் போயுள்ளதாக காலி மரபுரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது.
காலி கோட்டையில் இந்த பீரங்கிகளை கண்காணிப்பு நிலைகளில் பொருத்தி வைத்து ஒல்லாந்தர் பயன்படுத்தி வந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கையின் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தப் பீரங்கிகளை உலோகத்துக்காக களவாடிச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விஜையின் அரிய சிறிய வயதுப்படங்கள்

DOB : 22-June1974
Height : 5'11''
Father : S.A.Chandrasekharan (film director)
Mother : Shobha Chandrasekharan
Wife : Sangeetha
Son : Jason Sanjay
Daughter: Divya Saasha












பேஸ்புக் நன்பர் நேரில் வந்து பாராட்டினார் மாணவி தற்கொலைக்கு முயற்சி!


பிளஸ்டூவில் 1148 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை அவரது பேஸ்புக் நண்பர் நேரில் வந்து பாராட்டினார். இதை மாணவியின்தாயார் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். தற்போது படுகாயத்துடன் அந்த மாணவி உயிருக்குப் போராடி வருகிறார். தான் பாராட்டியதால் இவ்வளவு பெரிய விபரீதமா என்ற மன உளைச்சலில் அந்த பேஸ்புக் நண்பர் மாணவியைக் காப்பாற்ற கடவுளிடம் வேண்டி வருகிறார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் மிஸ்ரா பிரியதர்ஷினி. 17 வயதாகும் இவர் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தார். பிரமாதமாக படிக்கும் பிரியதர்ஷினி தேர்வில் 1148 மதிப்பெண்களை அள்ளியிருந்தார். எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர ஆர்வமாக இருந்து வந்தார்.
பிரியதர்ஷினிக்கு பேஸ்புக் மூலம் பிரதீஷ் என்பவர் நண்பராக இருந்தார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். நேற்று பிரியதர்ஷினியை நேரில் சந்தித்து அதிக மார்க் வாங்கியதற்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக வீட்டுக்கு வந்தார் பிரதீஷ். அப்போது வீட்டில் பிரியதர்ஷினி மட்டுமே இருந்துள்ளார். மற்றவர்கள் வெளியே போயிருந்தனர்.
இதையடுத்து பிரதீஷை வரவேற்று வீட்டுக்குள் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார் பிரியதர்ஷினி. இந்த நிலையில், பிரியதர்ஷினியின் தாயார் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது யாரோ ஒருவருடன் தனது மகள் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் யார் அது என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரியதர்ஷினி இவர் எனது பேஸ்புக் நண்பர் என்று கூறி பிரதீஷை அறிமுகப்படுத்தினார். ஆனால்அதைப் பொருட்படுத்தாத அவரது தாயார், ஏன் இப்படி வீட்டுக்குள் அனுமதித்தாய் என்று கூறி கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி வேகமாக தனது வீட்டின் 2வது மாடிக்குப் போய் அங்கு அமர்ந்து நீண்ட நேரம் அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.
கீழே விழுந்க வேகத்தில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு விட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் மிதந்தார். அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினியின் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், பிரதீஷை அழைத்து விசாரித்தனர். அவர் அப்போது பெரும் அதிர்ச்சியுடன் இருந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்புதான் பிரியதர்ஷினி பிரதீஷுக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளாராம். நல்ல மதிப்பெண் பெற்ற அவரை நேரில் பாராட்டுவதற்காக வந்த நேரத்தில் இப்படி ஒரு விபரீதம் நடந்து விட்டதால் அதிர்ச்சியுடன் உள்ளார் பிரதீஷ்.
பிரியதர்ஷினி பத்திரமாக திரும்ப வேண்டும், உயிர் பிழைக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திப்பதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக விவசாயி அறிவிப்பு



தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கொளாநல்லி குட்டப்பாளையத்தில் தங்கவேல்(வயது 53) என்ற விவசாயி வசிக்கின்றார்.
இவர் இதுவரை 3 முறை மொடக்குறிச்சி சட்டசபை தேர்தலிலும் மற்றும் ஈரோடு-சேலம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டு உள்ளார்.
இந்த தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது கோவணம் கட்டியபடி மாட்டு வண்டியில் வந்த காரணத்தினால் “கோவணம் தங்கவேல்” என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார்.
இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடபோவதாக கோவணம் தங்க வேல் கூறியுள்ளார்.
இதுபற்றி கோவணம் தங்கவேல் கூறியதாவது: 2001ம் ஆண்டு நடந்த மொடக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டேன். பிறகு 2006, 2011-ம் ஆண்டுகளில் நடந்த மொடக்குறிச்சி தேர்தலிலும் இதுபோல சென்று மனு தாக்கல் செய்தேன்.
மேலும் 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தொகுதிகளில் ஈரோடு-சேலம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். விரைவில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் முடிவு செய்து உள்ளேன். இதற்காக வேட்பு மனு தாக்கல் தொடங்கும் முதல் நாளே நான் வேட்பு மனு தாக்கல் செய்வேன்.
உயர்ந்த எண்ணம் கொண்ட குடிமகன்: இந்திய நாடு விவசாயத்தில் தன்னிறைவு பெற வேண்டும், இந்திய விவசாயி இந்தியாவில் உயர் பதவியில் அமரவேண்டும்.
பள்ளி-கல்லூரிகளில் விவசாயம் கட்டாய பாடமாக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு நீர் வளமும், நில வளமும் தூய்மை குன்றாமல் கிடைக்க வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டுள்ளார் கோவணம் தங்கவேல்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எனக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

44,000 அகதிகள் யாழ்ப்பாணத்தில் மட்டும்


புலம் பெயர்ந்தோர் சேவை அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி யாழ்ப்பாணம் வளைகுடாப்பகுதியில் மட்டும் 44,559 பேர் அகதிகளாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் போரின் காரணமாக குடும்பத்தினரை இழந்து 53 முகாம்களிலும் வேறு சில நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இவற்றில் பலர் போரால் பாதிக்கபட்ட சேதமடைந்த ரெயில் நிலையங்களில் தஞ்சமடைந்திருந்தனர்.
 ஆனால் தற்போது மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது என்று கூறி அங்கிருந்தும் அகதிகள் விரட்டியடிக்கப்படுவதாக ஆதாரபூர்வ தகவல்கள் தெரிக்கின்றன. இது தவிர உயர்பாதுகாப்பு வளையம் வடக்கு வலிகாமம் பகுதியில் மீண்டும் குடியேறுவதற்காக சுமார் 32,000 பேர் காத்திருக்கின்றனர்.
 45 கிராமப் பகுதிகளில் வலிகாமம் வடக்குப் பகுதியில் சுமார் 20 கிராமங்களில் மட்டுமே இதுவரை மீண்டும் குடியமர்த்தப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 25 கிராமங்களில் 9 கிராமங்களில் ஒரு பகுதியில் மட்டும் குடியேற்றப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.
 யாழ்ப்பாணத்தில் மட்டும் சுமார் 44,000 பேர் அகதிகளாக உள்ளது அங்குள்ள மோசமான நிலையை உணர்த்துகையில் இந்தியாவிலிருந்து சென்ற எம்.பி.க்கள் குழுவிற்கு இவையெல்லாம் கண்ணில் தென் படாமல் போனது ஆச்சரியமா? அயோக்கியத்தனமா என்பது புரியவில்லை.

சிங்களம் தமிழருக்கு உரிமை இல்லை என கருதினால் தனி ஈழத்திற்காக பிரிந்து நிற்கத் தயார் (video)




தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளுடன் இலங்கையில் வாழ இடமில்லை என தெற்கும் சிங்கள அரசியல்வாதிகளும் கருதினால் தனி ஈழம் அமைக்க தனித்து நிற்கத் தயார் என மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்று (29) வெலிக்கடை சிறைக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியவற்றை மேலுள்ள காணொளியில் காண்க…

கிரிக்கெட்டுக்காக ஆடை இழக்கும் நடிகைகள்



நடிப்பொ அல்லது திறமையோ எதுவுமே தெவை இல்லை பெண்களுக்கு. வெறும் கவர்ச்சி மட்டும் போது பிரபலமாகிவிடலாம் சினிமாவில்.அதை மனதில் வைத்துத்தான் சில மாடல்கள் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில்.
பூனம் பாண்டேதான் இந்த அவிழ்ப்பு புரட்சிக்கு திலகமிட்டு தொடங்கி வைத்தவர். இப்போது அவரது பாணியில் ஏகப்பட்ட பேர் கவர்ச்சியில் கரைபுரண்டோடத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா உலகக் கோப்பையை வென்றால் ஒட்டுத் துணியில்லாமல் ஓடுவேனாக்கும் என்று கூறி உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் பூனம். ஆனால் பப்ளிக்காக அதைச் செய்ய முடியாமல் போனதால் உடனடியாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியும், பேஸ்புக் மூலமும், டிவிட்டர் மூலமும் தனது கவர்ச்சியை களேபரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார் பூனம்.
அதேபோல பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவை தனது கவர்ச்சியால் தள்ளாட வைத்துக் கொண்டிருக்கும் வீணா மாலிக், ஒரு பத்திரிகைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து பயமுறுத்தினார்.
இந்த நிலையில் தற்போது ரோஸ்லின் கான் தன் பங்குக்கு கவர்ச்சியைக் கொட்ட ஆரம்பித்துள்ளார். ஐபிஎல்லுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரோஸ்லின் சமீபத்தில் படு கவர்ச்சிகரமான செயல்களில் ஈடுபட்டு வியர்க்க வைத்தார். இப்போது அவரது ஹாட்டான புகைப்படங்கள் உலா வர ஆரம்பித்துள்ளன – வழக்கம் போல நெட்டில்தான்.
அதில் ஒரு புகைப்படத்தில், கிரிக்கெட் வீரர்களைப் போல கையில் பேட், கிளவுஸ், ஷூ, பேடுடன் காட்சி தருகிறார் ரோஸ்லின். வலது கையில் பேட்டைப் பிடித்தபடி நிற்கும் அவர், இடது கையால் தனது மினி ஸ்கர்ட்டை விலக்கி தனது பின்பக்கத்தைக் காட்டுகிறார்.
அவரது இடுப்பில் ஐபிஎல் லோகோவை பொறித்துள்ளார். பின்பக்கத்தில் பை டிக்கெட் நவ் என்ற வாசகத்தையும் கூடவே போட்டு வைத்துள்ளார்.
ஏங்க இப்படி என்று ரோஸ்லினிடம் கேட்டால், ஜான் ஆப்ரகாமும், துஷார் கபூரும் இப்படி போஸ் கொடுத்தால் மக்கள் என்ன நினைப்பார்களோ அதே போலத்தான் என்னுடைய போஸையும் பார்ப்பார்கள் என்று சூப்பர் பதில் கொடுக்கிறார் ரோஸ்லின்.

நடிகை பீபாஷாவின் விலை 60 மில்லியன் ரூபா


கால்டன் சுப்பர் செவன் றகர் போட்டிகளின் இறுதிப் போட்டி (ஜூன் 03) நடைபெறும் தினத்தில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்காக இந்திய பொலிவூட் நடிகர், நடிகைகளை அழைத்துவர 150 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிக்காக பொலிவூட் திரையுலகின் பிரபல நடிகையான பிபாஷா பாசு, சமீரா ரெட்டி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிபாஷாவை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக அவருருக்கு 60 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
அவருடன் 15 பேர் அடங்கிய பரிவாரங்களும் இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 26, 7ஆம் திகதிகளில் கண்டி போகம்பரை விளையாட்டடரங்கில் நடைபெற்ற கால்இறுதிப் போட்டிகளின் போது வட இந்திய திரையுலக நட்சத்திரங்களான விவேக் ஒப்ராய், பிரீதி சின்டா ஆகியோர் அழைத்துவரப்பட்டிருந்தனர். இதற்காக 70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், எழுவர் கொண்ட ரக்பி போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களில் அதிக கொடுப்பனவு வடக்கு றக்பி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுதர்ஷன முதுதன்திரிக்கே வழங்கப்படுகிறது. அவருக்கு நாளொன்றுக்கு 74,000 ரூபா வழங்கப்படுகிறது.
இதனைத்தவிர சஜித் சாரங்க என்ற வீரருக்கு 65,000 ரூபாவும், திலிப் செலவத்திற்கு நாளொன்றுக்கு 59,000 ரூபாவும் வழங்கப்படுகிறது.
இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படுகிற கொடுப்பனவில் 10 மடங்கு அதிகமாக செலுத்தி இந்தப் போட்டிகளுக்கு வெளிநாட்டு வீரர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை வீரர்களுக்கு செலவிடப்படும் நிதியில் பன்மடங்கு நிதி வட இந்திய சினிமா நடிகை, நகர்களுக்கு வழங்கப்படுகிறது.

உல்லாசப் பயணிகளை கவர்ந்த கீரிமலை



யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தரிசனம் செய்கின்றமைக்கு மிக விரும்புகின்ற ஆலயங்களில் ஒன்றாக கீரிமலை உள்ளது.

88 இலங்கை தமிழர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம்.


இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலரைக் கொண்ட மற்றுமொரு அகதிகள் படகொன்று ஆட்கடத்தல்காரர்கள் பிடியில் சிக்காதுஅவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 88 இலங்கைத் தமிழ் அகதிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த படகு விரைவில் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை வந்தடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா, அதிகளவான இளைஞர்கள் படகில் இருப்பதாகக் கூறியுள்ளது.
இவர்கள் மீன்பிடி படகில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 211 புகலிடக் கோரிக்கையாளர்களே அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
ஆயினும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 586 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மதச்சுதந்திரத்திற்கு தடை மாணவிகள் பெற்றோர் விசனம்


நுவரெலியா நல்லாயன் மகளீர் கல்லூரியில் அண்மைக் காலமாக தமிழ் மாணவிகள் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது.. 
இவர் குறித்த தமிழ் மாணவிகளை நெற்றிப் பொட்டு வைக்கவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாடசாலையின் அதிபரும் ஒரு சிங்களராவார். அங்கு தமிழ், சிங்கள, மொழிகள் இரண்டிலுமே
பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்து இஸ்லாம், கிறிஸ்தவ, கத்தோலிக்க, பௌத்த மதங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் இங்கு கல்விபயின்று வருகின்றனர். எனினும் இந்து மதம் மற்றும் நெற்றிப் பொட்டு வைக்கும் மாணவிகள் அவற்றை வைக்கக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
அப்படியும் அவர்கள் வைத்துக் கொண்டு வந்தால் பலவந்தமாக பொட்டுகள் அழிக்கப்பட்டு குறித்த ஆசிரியை காலால் அவற்றை மிதிப்பதாகவும் பெற்றோர் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். 
இவ்விடயமாக கல்வித்துறை சார்ந்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். அன்பு நட்பு, ஒற்றுமை கண்ணியம் மதங்களையும் இனங்களையும் மதிக்கும் பண்புகளை கற்பிக்கும் பாடசாலையிலேயே இவ்வாறான இனவாத போக்கு கடைபிடிக்கப்படுவது வருந்தத்தக்க விடயமாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மீனவர் கடலுக்குச் செல்ல பாஸ் நடைமுறை


யாழ்ப்பாணம் மாதகல் கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல பாஸ் அனுமதியைப் பெற வேண்டும் என கடற்படையினர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பால் தொழிலுக்குச் செல்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாஸ் அனுமதியைப் பெறுவதற்கு மீனவரின் புகைப்படங்கள், அவர்களின் விவரங்கள், கடற்றொழில் உபகரணங்களின் விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென கடற்படையினர் கட்டளையிட்டுள்ளனர்.
இதனால் கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையிலுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழ ராணுவத்தினர்



யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தினர் யாழ். கட்டளைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது:
“பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், கற்றலுக்கான அச்சமற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒரு போதும் ராணுவத்தினரைப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துமாறு நாம் கோரவில்லை” எனத் தெரிவித்தனர்.
இதேவேளை மாணவர்கள் மீதான தாக்குதலை படைத்தரப்பே மேற்கொண்டிருந்ததாக மாணவர்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன் கடந்த காலங்களிலும் இத்தகைய ராணுவப்பிரசன்னம் பல்கலைக்கழக சூழலில் நிலவியோது மாணவர்கள் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டனர். மாணவர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டதுடன் அவர்கள் மீதான சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்திருந்தன.
தற்போது மீண்டும் ராணுவப் பிரசன்னம் யாழ். பல்கலைக்கழக சூழலில் ஏற்படுமானால் மீண்டும் மாணவர்கள் தற்போது உள்ளதைவிட அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இரா.சம்பந்தன் தான் தனி ஈழம் கோரவில்லை


தனி ஈழம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டின் போது 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இதன் போது இலங்கையில் தமிழர்களுக்கான தனி ராஜயம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து வானொலியொன்று கருத்து கேட்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

படையினரின் அத்துமீறல்களால் கிளி மக்கள் அவதி.


கிளிநொச்சி கிருஷ்ணபுர மக்கள் சிறஙீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரின் தொடரும் கெடுபிடிகள் கரணமாக அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி  கிருஷ்ணபுர மக்கள் தெரிவிக்கின்றார்.
கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் அலுவலகத்துக்கு அண்மையாக உள்ள படையினரின் பயிற்சி முகாம் ஒன்றினுள் நிலைகொண்டுள்ள படையினரே தொடர்ந்து கிருஷ்ணபுரம் மற்றும் அதை அடுத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் மாற்று வலுவுள்ள (அங்கவீனர்கள்) போராளிகளின் புனர்வாழ்வு நிலையமாக இருந்த நவம் அறிவுகூடம் காணப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படையினரே இவ்வாறு இடையூறை ஏற்படுத்துவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இரவு நேரங்களின் வீடுகளுக்குள் அத்துமீறி பிரவேசிப்பதாகவும், காணிகளுக்குள் வந்து மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள், இது சம்பந்தமாக கேள்வி எழுப்பியபோது அது தமது பயிற்சியின் ஒரு பகுதி என படையினர் அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் கூறினர்.
படையினர் தமது வீடுகள் மற்றும் காணிகளுக்குள் தங்கியிருப்பதால், தாம் அச்சத்துடன் இரவைக் கழிக்க வேண்டியுள்ளதாக, அந்தப் பிரதேச மக்கள்   செய்தியாளரிடம் மேலும் கூறினர்.
இது மட்டுமன்றி ஆயுதம் தரித்த படையினர் இவ்வாறு இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பிரவேசிப்பதால், குழந்தைகள் பெண்கள் அச்சத்துடன் இரவைக் கழிக்கதாக தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத கிராம அமைப்பொன்று, இதற்கு முன்னரும் கிறிஸ் பூதம் என்னும் பீதியை மக்கள் மத்தியில் படையினர் கட்டவிழ்த்து விட்டிருந்தனர் எனச் சுட்டிக்காட்டினர்.
ஆனைத்துலக ரீதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் படைப் பயிற்சி முகாம்களை நடாத்திக் கொண்டிருக்கும் ஒரேயொரு படையினர், சிறீலங்கா படையினராகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், கிளிநொச்சியில் மட்டுமன்றி தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் தமது ஆக்கிரமிப்பை பலப்படுத்த படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் அதிகம் ஈடுபட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சிக்கு எளிய பரிகாரம் இதோ!


பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பின்வரும் பரிகாரங்களை செய்வதால் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம்.
ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம்.
எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும்.
ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும்.
அகதிகளுக்கு உதவலாம். வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.
மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம்.
நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.

ஐபோனிற்க்கு போட்டியாக LG இன் HD LCD!



ஸ்மார்ட் போன் களில் அப்பிளின் ஐ போனுக்கு தனிச்சிறப்புக்கள் உண்டு. அதிலும் அதன் அதி துல்லியமான ரெட்டீனா திரைக்கு தனி ரசிகர்களே உண்டு.
அத்தகைய அப்பிள் ரெட்டீனா திரைக்கு சவால்விடும் வகையில் அதி துல்லிய எச்.டி எல்.சி.டி திரையை தனது ஸ்மார்ட் போன்களுக்காக தென்கொரியாவின் எல்.ஜி (LG) நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த எல்சிடி பேனல் மூலம் 1920 X 1080 பிக்ஸல் துல்லியத்தில் காட்சிகளை துல்லியமாக பார்க்க முடியும்.
இத் திரை இவ் ஆண்டின் நடுப்பகுதியில் சந்தைக்கு வெளிவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

facebook இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் 3 லட்சம் பேர்ள்


எதிர்வரும் ஜூலை மாதம் உலக அளவில் குறைந்தது 3 லட்சம் பேர் இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை (FBI) எச்சரித்துள்ளது. தாங்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை dcwg.org என்ற முகவரியில் ஓர் இணையத்தளத்தினை அமைத்துள்ளது.
இத்தளத்திற்கு சென்று உங்களது கணணி மால்வேர் வைரஸ் புரோகிராமினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெறலாம். டி.என்.எஸ் சேஞ்சர் (DNS Changer) மால்வேர் என அழைக்கப்படும் இந்த வைரஸைப் பரப்பியவர்கள், பல லட்சம் டொலர் பணத்தை இதன் மூலம் ஏமாற்றி சம்பாதித்துள்ளனர்.
இந்த வைரஸ் பாதித்த கணணி மூலம் இணைய இணைப்பில் செல்கையில், இந்த வைரஸ் நாம் காண விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும். அங்கு நம் ஆசையையும், ஆர்வத்தினையும் தூண்டும் வகையில் வாசகங்கள் தரப்பட்டு மேலும் சில லிங்க்குகள் தரப்படும். இதில் கிளிக் செய்து மாற்றிக் கொள்பவர்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் திருடப்பட்டு, அதன் மூலம் பண மோசடியும் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் டொலர் என எப்.பி.ஐ மதிப்பிட்டுள்ளது.
இந்த மால்வேர் பாதிப்பினை நீக்கும் கிளீன் சேவையை எப்.பி.ஐ இதற்கென அமைத்த இணையத்தளம் தருகிறது. அப்படியும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் 3 லட்சம் பேர் இதனால், பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள். ஜூலை மாதம் இவர்களால் தாங்கள் விரும்பும் இணையத்தளங்களுக்குச் செல்ல முடியாது என எப்.பி.ஐ செய்தியாளர் ஜென்னி தெரிவித்துள்ளார்.