//]]>3

திங்கள், 14 மே, 2012

நீரழிவு நோய்க்கு சிறந்த மருந்து அவரை



கொடிவகைகாய்களில் சிறந்தது அவரைக்காயாகும். சிக்கனமானவிலையில் நிறைந்த ஊட்டச்சத்தை இந்தஅவரைக்காய் தருகிறது.இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்துமற்றும் சில விட்டமின் சத்துகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் காய் அவரைக்காயாகும்
.
இதில் பிஞ்சுக்காயே சிறந்ததாகும். மிகஎளிதில் செமிக்கக்கூடிய காய்களில் அவரையும் ஒன்று. அதனால் பலவீனமான குடல் உள்ளவர்களும்மத்தியான நேரத்திலும் இரவு நேரத்திலும் இதை உண்ணலாம்.

வெண்மையான அவரைகாய் வாயுவையும் பித்தத்தையும் கண்டிக்கவல்லது. இது உள்ளுறுப்புகளின் அளர்ச்சியையும் எரிச்சலையும் போக்கும் தன்மை உள்ளது.இதை உணவில் சேர்த்து உண்பதால் நீரழிவு நோய், பேதியாகும்தொல்லை, அடிக்கடி தலைநோய் வருதல், ஜீரணம் சம்பந்தப்பட்ட கோளாறு முதலியவற்றைக்கட்டுப்படுத்தும் என்று வைத்தியநூல்கள் கூறுகின்றன.அண்மைய ஆராச்சிகளின்படி இரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி அவரைக்காய்க்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »