//]]>3

சனி, 26 மே, 2012

13ஆவது திருத்தம் உங்களுக்கு எபபடி



- குமாரவடிவேல் குருபரன்


இலங்கையின் 1978 அரசியல் அமைப்பானது ஒற்றையாட்சி  முறைக்குரியது. ஒற்றையாட்சி முறையொன்றின் கீழ் மத்திய சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை அதிகாரங்கள் பாரதீனப்படுத்தப்பட முடியாதவை பகிர்ந்தளிக்கப்பட முடியாதவை.

ஓற்றையாட்சி முறையை மாற்றுவதற்கு மக்களிடம் தேர்தல் (ஒப்பங்கோடல்) மூலம் சம்மதம் வாங்கவேண்டும். அரசியல் அமைப்புக்குச் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தி;னூடாக மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டது. இலங்கையின் உயர் நீதிமன்றம் மாகாண சபை முறைமை ஒற்றையாட்சியை மீறவில்லை எனவும், எனவே 13ஆவது திருத்தத்திற்கு மக்கள் சம்மதம் தேவையில்லை எனவும் தீர்மானித்தது.

மாகாண சபையின் சட்டவாக்க அதிகாரம்
மாகாண சபை சட்டமியற்றக்கூடிய விடயங்கள் மாகாண சபை நிரலில் உள்ளன.
மத்திய பாராளுமன்றம் சட்டமியற்றக்கூடிய விடயங்கள் மத்திய நிரலில் உள்ளன.
மாகாண சபையும் பாராளுமன்றமும் இணைந்து சட்டமியற்றக்கூடிய விடயங்கள் ஒருங்கிய நிரலில் உள்ளன.
ஆனால் ஒருங்கிய நிரல் தொடர்பில் மத்திய பாராளுமன்றம் இயற்றும் சட்டம் மாகாண சபை சட்டத்திலும் மீயுயர்வானது.(இதன் காரணமாக நடைமுறையில் ஒருங்கிய நிரலும் மத்திய அரசாங்கத்திற்குரியதே).
இந்நிரல்களுள் ஏதேனும் விடயம் ஒதுக்கப்படாதவிடத்து அவ்விடயமும் மத்திய அரசின் நிரலுக்குட்பட்ட விடயமாகவே கருத வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மாகாண சபையின் சட்டவாக்க அதிகாரத்திற்குள்ளான தலையீடுகள். 


1. தேசிய கொள்கை உருவாக்கம் என்ற பெயரில் எவ்விடயம் தொடர்பிலும் (மாகாண சபை நிரல் விடயங்கள் உட்பட) மத்திய பாராளுமன்றம் சட்டமியற்றலாம். வெறுமனே ஓர் அமைச்சுச் சுற்றுநிருபம் மூலம் கூட
தேசிய கொள்கையை உருவாக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளது.

2. மாகாண சபை நிரலில் உள்ள எவ்விடயம் தொடர்பிலும் பாராளுமன்றம்   2/3 பெரும்பான்மையுடன் சட்டமியற்றலாம்.

3. அவசர கால சட்டமொன்றின் மூலமாக மாகாண சபை நிரலில் உள்ள எவ்விடயம் தொடர்பிலும் சட்டமியற்றலாம் மாகாணசபைக் சட்டமொன்றை வலிதற்றதாக்கலாம்.

4. மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்கள் கூட அரைகுறையாகவே வழங்கப்பட்டுள்ளனஉதாரணமாக சுகாதாரம் மாகாணசபை நிரலிற்குள் உள்ளடக்கப்பட்டாலும் போதனா வைத்தியசாலைகள் மத்தியின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இயங்கும். மருந்துகளை வாங்கும் அதிகாரமும் மத்திக்கே உரியதாகும். பாடசாலைகள் மாகாணசபை நிரலிற்குள்  உள்ளடக்கப்பட்டாலும் தேசிய பாடசாலகள் தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்தினாலேயே பரிபாலிக்கப்படும்.

5. மாகாணசபைக்கு குறித்தொதுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாகாணசபை ‘பாராளுமன்றத்தினால் சட்டமொன்றின் மூலமாக வழங்கப்படும் கட்;டுப்பாடுகளிற்கு உட்பட்டு’ சட்டமியற்றலாம்என்ற வாசகம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக கடன் வாங்குதல் சூழல் பராமரிப்பு கனியவள விருத்தி (பெரும்பாலான முக்கியமான) வரிவிதிப்பு. ஆகவே இவை ‘மாகாண விடயங்களாக இருந்தாலும் இவை தொடர்பில் பாராளுமன்றம் சட்டவாக்கம் செய்யலாம்;.

மாகாண நிறைவேற்றுத்துறை - ஆளுநரின் அதிகாரங்கள்
ஆளுநர் தனது அதிகாரங்களை நேரடியாகவோ மாகாண அமைச்சரவையின் மூலமாகவோ தனக்கு கீழ்வரும் அதிகாரிகள் மூலமாகவோ செயற்படுத்தலாம்

ஆளுநரானவர் அரசியலமைப்பினால் தனது தற்றுணிவின் பிரகாரம் செயலாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் முதலமைச்சர்ஃ மாகாண அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் நடந்து கொள்ளவேண்டும்.

தனது தற்றுணிவின் கீழ் உள்ள அதிகாரங்கள் எவை எனத் தீர்மானிக்கும் தற்றுணிவு அதிகாரம் ஆளுநருக்குண்டு.

மாகாண சபையின் பொது உத்தியோகஸ்தர்கள் அனைவரையும் நியமிக்கும் இடம்மாற்றும் பதவி விலக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆளுநரிடத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் விரும்பினால் இவ்வதிகாரங்களை மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு கையளிக்கலாம். ஆளுநரே மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை (மூவர்) நியமிப்பார்

மாகாண சபையில் நிதி சம்பந்தமான எந்த மசோதாவையும் ஆளுநரின் பரிந்துரையின்றி அறிமுகப்படுத்த முடியாது.

மாகாண நிதியத்திலிருந்து செலவீனத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு மசோதாவும் ஆளுநரின் பரிந்துரையின்றி அறிமுகப்படுத்த முடியாது.

மாகாண சபையால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரத்தை ஆளுநர் (மத்தியில் அரசாங்கத்தின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலும் இயங்கும்) பிரதேச செயலாளர்களிடம் வழங்கலாம்.

அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறியமைக்காக, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டொன்றின் பெயரில் அல்லது ஒழுக்கக் குறைவான நடத்தைக்காக மாகாண சபை 2/3 பெரும்பான்மையுடன் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநரை நீக்குமாறு பரிந்துரைக்கலாம். ஆனால் இவ்விடயத்தில சனாதிபதியின் முடிவே இறுதியானதாகும்.



காணி அதிகாரங்கள்
ஒரு மாகாணத்திற்குட்பட்ட அரச காணியை குடிமகன் ஒருவருக்கு பாரதீனப்படுத்தும் அதிகாரம் சனாதிபதியிடத்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தை அவர் மாகாண சபைகளோடு கலந்தாலோசித்ததன் பின்னர் (சம்மதத்துடன் அல்ல) இயற்றப்பட்ட (மத்திய பாராளுமன்றத்தினுடைய) சட்டங்களின் பிரகாரம் நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

மாகாணங்களுக்கிடையிலான நீர்பாசன காணி அபிவிருத்தி திட்டங்கள் மத்திய அரசாங்கத்தினுடைய பொறுப்பாகும். யாருக்கு அத்திட்டங்களின் கீழ் காணியை வழங்கலாம் என்பது இலங்கை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும்.

இவ்வாறாகக் காணி பகிர்ந்தளிக்கப்படும் போது தேசிய இன விகிதாசாரத்திற்கேற்ப வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அ)
இவ்வாறாக வழங்கப்படுகின்ற காணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாவனைக்குட்படுத்த வேண்டும். அவ்வாறாக அவர்கள் பாவனைக்குட்படுத்தத் தவறும் போது வேறோர் திட்டத்தின் கீழ் அச்சமூகத்திற்குக் பங்கு ஒதுக்கப்படுவது கருதப்படும்.

மேற்கண்டவாறு இயன்றவரை ஒரு மாகாணத்தின் (இனக்) குடிப்பரம்பலைப் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளப்படவேண்டும்.
(ஆ) ------ (அ) விற்கும் (ஆ) விற்கும் உள்ள முரண்பாட்டை அவதானிக்கவும்.

இவ்வாறான திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை வகுப்பது மத்திய அரசாங்கம் என்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது மாகாண அரசாங்கம் என்றும் வழங்கப்பட்டுள்ளது. வேறோர் இடத்தில் இத்திட்டங்களின் நிர்வாகமும் முகாமையும் இலங்கை அரசாங்கத்திடம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதன் விளைவாகத் தோன்றும் முரண்பாட்டையும் அவதானிக்குக.

காணிப்பாவனை தொடர்பான தேசிய கொள்கை உருவாக்கத்திற்காக தேசிய காணி ஆணைக்குழு பற்றி 13ஆவது திருத்தம் பேசுகின்றது. எல்லா மாகாணங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இவ்வாணைக்குழுவில் இடம்பெறுவர். (வடக்கு கிழக்கு மாகாணத்திலுருந்து இரண்டு பிரதிநிதிகள் இவ்வாணைக்குழுவில் இடம்பெறுவர் - சிறுபான்மையராகவே இருப்பர் - என்பதனை அவதானிக்குக)

பொலிஸ் அதிகாரங்கள்


5 - 10 மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவால் நியமிக்கப்படுவர். மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் DIGயின் பிரதிநிதி ஒருவர், சனாதிபதியின் ஆலோசனையின் பெயரில் நியமிக்கப்படும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் பிரதிநிதி ஒருவர், முதலமைச்சரின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் இடம்பெறுவர். 

மாகாணத்தின் DIG மாகாண முதலமைச்சரின் சம்மதத்தோடு IGPயால் நியமிக்கப்படுவார்

 IGPக்கும் முதலமைச்சருக்கும் கருத்தொற்றுமை இல்லாவிடில் சனாதிபதி இந்நியமனத்தை மாகாண முதலமைச்சரோடு கலந்தாலோசித்ததன் பின்னர் தான் விரும்பும் ஒருவரை DIGயாக நியமிப்பார்.

தேசிய பொலிஸால் மட்டும் விசாரிக்கப்படக்கூடிய குற்றங்கள் சிறப்பாகக் குறித்தொதுக்கப்பட்டுள்ளன. இவை முக்கியமான குற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்குகின்றன.



ஐ,நா இலங்கையை ஆராய புதிய குழு!



ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் காரியாலயத்தின் ஊடாக இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக 3 நாடுகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மனிதவுரிமைகள் ஆணையகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், எதிர்வரும் ஒக்டோபர் 22 ம் திகதியிலிருந்து நவம்பர் 5 ம் திகதி வரை இடம்பெறுவுள்ள ஆய்வு குழு கூட்டங்களின் போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியா, ஆபிரிக்காவின் பெனின் ராஜ்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளே நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த மூன்று நாடுகளும் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க அறிக்கைக்கு ஆதரவளித்து வாக்களித்திருந்தன.

இதனிடையே, மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் பதவிகாலம் மேலும் 2 வருடங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர் இஸ்ரேலை விமர்சித்ததால் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட எதிர்ப்பையும் கவனத்தில் கொள்ளாது அவரது பதவிகாலம் நீடிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நடிகை கருக்கலைப்பு அமச்சருக்கு கவலை


பிரபல நடிகை ஒருவர் தனது மூன்று மாத கர்ப்பத்தைக் கலைத்ததால் அமைச்சர் ஒருவர் மிகுந்த கவலையில் இருப்பதாக தெரியவருகிறது.
கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து நேற்று (25) இந்த நடிகை கருவைக் கலைத்துள்ளார்.
இரத்தப் போக்கு அதிகமாக இருப்பதால் கருவைக் கலைப்பதாக நடிகை காரணம் கூறியுள்ளார்.
கடந்த வெசாக் தினத்தன்று தனியார் வைத்தியசாலைக்குச் சென்று கருக்க லைக்க நடிகை முயற்சித்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அதனை செய்ய முடியாமல் போயுள்ளது.
கிடைத்துள்ள தகவல்களின்படி, பிரபல அமைச்சர் ஒருவரால் இந்த நடிகை கர்ப்பமானதாகவும் இந்த விடயத்தை நடிகையின் கணவர் அறிந்திருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
குழந்தை மீது தீராத ஆசைக்கொண்ட இந்த அமைச்சர் கடந்த ஞாயிறன்று, நடிகையின் கணவரை சந்தித்து குழந்தையின் அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், கருவை கலைக்க வேண்டாம் எனவும் கோரியுள்ளார். அதற்கு நடிகையின் கணவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், குழந்தை பிறக்கும்வரை நடிகையை வெளிநாட்டில் இருக்க வழிசெய்யுமாறு கோரியுள்ளார். இதற்கு அமைச்சரும் சம்மதம் வெளியிட்டுள்ளார்.
எனினும், அமைச்சருக்கும், கணவருக்குமிடையிலான இணக்கப்பாட்டை மறுத்த நடிகை தனித் தீர்மானத்தின்படி கருவை கலைத்ததால் பிரபல அமைச்சர் தற்போது மிகுந்த கவலையில் இருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நந்திக்கடல் ஆக்கிரமிப்புத் தோல்வி



முல்லைத்தீவு மாவட்டம், நந்திக்கடல் பகுதியில் சுதந்திரக் கட்சி சார்ந்த நபரொருவர் அனுமதியின்றி இறால் வளர்ப்புக்கென சுமார் 4ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமிக்க மேற்கொண்டிருந்த முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால்,தோல்வியில் முடிந்திருக்கின்றது.
இந்தவிடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 14ம் திகதி குறித்த பகுதியில் முகாமிட்ட குறித்த நபரொருவர், கரைதுறைப்பற்று பிரதேச செயலரினால் வழங்கப்பட்ட கடிதமொன்றை வைத்துக் கொண்டு குறித்த பகுதியை ஆக்கிரமித்துள்ளார்.
மேலும் தன்னையொரு சுதந்திரக்கட்சி உறுப்பினர் எனவும். அதற்கான அனுமதி தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தே, அப்பகுதியை கனரக வாகனங்களைக் கொண்டு தோண்டி அணைகளையும் அமைத்துள்ளார்.
இதனையடுத்து பிரதேச மக்களும், நந்திக்கடலை அடிப்படை வாழ்வாதாரத் தொழிலாக கொண்டுள்ள மக்களும் ஒன்று திரண்டு தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
எனினும், அதற்கு குறித்த நபர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர்கள் சிலரையும் அந்த இடத்திற்கு வரவழைத்து, பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விடயமறிந்து அங்குவந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன், குறித்த திட்டத்திற்கு உடனடித் தடையினையும் விதித்திருக்கின்றனர்.எனினும் அமைக்கப்பட்ட அணைக்கட்டு இன்னமும் அகற்றப்படவில்லை என பிரதேச மக்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மீண்டும் தலைவராக சம்மந்தன்




கடுமையான எதிர்ப்பு மற்றும் கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு நாளை நடைபெறுவதற்கு முன்னோடியாக இன்று காலை 9.45 மணியளவில், பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் இராசம்பந்தன் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமானது.

நேற்று மாலை பழைய செயற்குழுவுக்கான கூட்டம் மட்டக்களப்பு ஊறணியில் உள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில், நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில், தமிழரசுக்கட்சியின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கிளைகளின் தலைவர்கள் செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுச் சபைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, நிருவாகச் செயலாளர் குகநாதன், பொருளாளர் எஸ்ரி.ஆர்.தியாகராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, சிவஞானம் ஸ்ரீதரன், சரவணபவான், பா.அரியநேத்திரன், சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கனகசபை, திருகோணமலை துரைரெட்ணசிங்கம், துரைராஜசிங்கம், ஜனாப் கே.எம்.இமாம், கொழும்புக்கிளை தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா, செயலாளர் சு.வித்தியாதரன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


இன்றைய பொதுச் சபைக் கூட்டத்தில், புதிய தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேசிய மாநாட்டத் தீர்மானங்கள் தொடர்பிலும் இறுதித் தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளன.

முதலிடத்தில் கூகுலின் குறோம்!



உலகம் முழுதும் எடுக்கப்பட்ட கணக்கின்படி கூகுள் குரோம் பயனாளர்கள் விகிதம் 32.5% ஆகவும் இன்டெர்னெட் எக்ஸ்புளோரர் பயனாளர்கள் விகிதம் 32.1%ஆகவும் இருந்தது.
டிசம்பர் 2011-இல் கூகுள் குரோம், ஃபயர்ஃபாக்ஸை முந்தியது ஆனால் எக்ஸ்புளோரரைவிட குறைவாகவே இருந்தது.
வார இறுதிகளில் கூகுள் குரோம் பயனாளர்கள் அதிகரித்தனர் என்பது தெரியவந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் கூகுள் குரோம் பயனாளர்கள் எண்ணிக்கை எக்ஸ்புளொரரை மிஞ்சியுள்ளது.
புகழ் பெற்ற வெப் ஆய்வு நிறுவனமான ஸ்டேட்கவுண்டர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆனாலும் நாடு ரீதியாகப் பார்க்கும்போது முடிவுகள் மாறியுள்ளன. உதாரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் பயனாளர்கள் பெரிதும் எக்ஸ்புளோரர் பிரவுசர்களையே விரும்புகின்றனர்.
குரோமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் அதிகம் என்று கூறியுள்ளது இந்தப் புள்ளிவிவரம். ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் குரோம் முன்னிலை வகிக்கிறது. அதாவது மோசில்லா ஃபயர்ஃபாக்ஸைக் காட்டிலும் குரோம் பயன்பாடு அதிகம்.
மற்றபடி ஜப்பான், சீனா, தென் கொரியா, ஆகிய நாடுகளில் இன்டெர்னெட் எக்ஸ்புளோரரே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பொன்சேகாவால் துஷ்பிரயோகம் : ஊடக அமைச்சர்



ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை யாகிய சரத் பொன்சேகா வடபகுதி யின் சிவில் நிர்வாகத்தில் இராணு வத்தினர் தலையிடுவதாக தமிழ் பத்திரிகையொன்றுக்கு கூறியிருக்கும் கருத்து வெளிநாடுகளின் தலையீடு களை அவர் வலியுறுத்துவதை காட்டு வதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒரு விபத்தினால் காயம் அடைந்த பின்னர் அங்கு 4 மாத காலம் சிகிச்சை பெற்று இப்போது குணமாகி இருக்கும் ன ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வியாழக்கிழமை இரவு நாடு திரும்பினார். கொழும்பில் உள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் செய்தி நிருபர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.
சரத் பொன்சேகா பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல- ஜனாதிபதி அளித்த மன்னிப்பின் மூலம் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கும் சரத் பொன்சேகா தன்னுடைய உண்மை நிலைப்பாட்டை மறந்து விட்டு- ஜனாதிபதி அவர்கள் அளித்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு சரத் பொன்சேகா வெளிநாட்டில் உள்ளவர்களை தலையிடுமாறு அழைத்தது தவறான செயல் என்றும் இப்போது அவர் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் கைப்பாவையாக மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது என்றும் கூறினார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு ஒரு தோல்வி அல்ல என்றும்- ராஜதந்திர மட்டத்தில் இவ்விதம் தோல்விகள்- வெற்றிகள் மாறி மாறி வரும் என்றும் சொன்னார்.
தகவல்-அரசாங்க தகவல் திணைக்களம்

இலங்கையின் முதலாவது செய்மதி கம்பனி!



இலங்கை முதலீட்டுச் சபை சுப்ரீம் சற் பிறைவற் லிமிட்டட் (Supreme Sat .PVT. LTD)    யுடன் செய்மதி தொழில் நுட்பம் சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்றை நேற்று முன்தினம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்படவுள்ள செய்மதி நிறுவனம் இலங்கையின் முதலாவது செய்மதி கம்பனியாக அமையும். 20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரத்தில் கோடீஸ்வருக்கு ஆதரவு பொலிஸ் பணிணீக்கம்


அநுராதபுரத்தில் உள்ள கோடீஸ்வரர் ஒருவரின் மகன் கடந்த ஜனவரி 12;,13ம் திகதிக்குள் 13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை தனது கெப் வாகனத்தில் பலாத்காரமாக கடத்திச் சென்று அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு அநுராதபுரம் பொலிஸ் தலைமையத்தைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பள்ளிவாசல்மீது கல்வீச்சு


தெஹிவளை, கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருல் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து நேற்று ஆப்பாட்டம் ஒன்று இடமபெற்றுள்ளது. இந்த ஆப்பாட்டத்தில் பெரும்பாலான பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும் கலந்து கொண்டனர்.ஜாமியுஷ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா, பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா என முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றன.



கடந்த சில வாரங்களாக குறித்த கட்டடம் புனரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த பள்ளிவாயலின் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறைப்பாடு ஒன்று கல்விஹார பிக்குகளால் தெஹிவளை – கல்கிசை மேயரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்று (25) மாலை முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத கோஷ்டி ஒன்று மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்தது.
பின்னர் பிற்பகல் 4:00 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது. அதில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோஷமிட்டதுடன் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.

வடமாகானத்தில் கருத்தடை ஊசி போட்டு பிளைக்கும் வைத்தியர்



கிளிநொச்சி தருமபுரம் மருத்துமனையின் மருத்துவர் விஜிதரன் மருத்துவமனை மருந்துகளை கையப்படுத்தி தனது தனிப்பட்ட மருத்துவமனையில் கருத்தடை ஊசிமருந்தினை ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
வடமாகாண ஆளுனர் சந்திர சிறீயினால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனைக்கு நியமிக்கப்பட்ட மருத்து அதிகாரியான கார்த்திகேயன் என்வரின் சிபாரசில் தர்மபுரம் மருத்துவமனைக்கு தெரிவு செய்யப்பட்டவர்தான் விஜிதரன்,இவர்கள் இருவரும் ரஷ்யாவில் மருத்து கல்வியினை கற்றுவிட்டு சந்திரசிறியின் சிபார்சிற்கமைய தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக தருமபுரம் மருத்து மனையில் நாள்தோறும் மக்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மருத்துவமனைக்குஉரிய மருந்து பொருட்களை மருத்துவர் விஜிதரன் தனது சொந்த மருத்துவமனைகளான விசுவமடு,தர்மபுரம் பகுதிகளில் இயங்கும் தனது மருந்து கடைக்கு எடுத்துசெல்வதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் இவரிற்கு உடந்தையாக இவரின் உதவியாட்களான ஜெக்குமார், வனிதா,சுதர்சன் நாகலோஜினி,(செல்வி)இவர்கள் இருந்துவருகின்றார்கள்,அரச மருத்துவமனையில் கருத்தடை மருந்து ஏற்ற தடைவிதிக்கப்பட்ட போதும் இவர் தனது தனியான மருத்துவமனையில் 450 ரூபாவிற்கு கருத்தடை ஊசியினை ஏற்றிவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன் தருமபுரம் மருத்துவமனையில் தொண்டராக பணியாற்றிய ரவீந்திரன் ரஞ்சினி என்பவர் மீது மருத்துவர்; பாலியல்  தொல்லையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் மருத்துவருடன் முரண்பட்ட ரஞ்சினி நிர்வாக நடவடிக்கை எடுப்பதற்காக எதிர்த்து கதைத்தவேளை தொண்டர் பணியில் இருந்து நீக்கியுள்ளார் இவ்வாறு  தர்மபுரம் மருத்துவமனைக்கு சொந்தமான நோயாளர்; காவுவண்டியினை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்துவதும்,மருத்துவமனை செல்லும் நோயாளா;களை மருந்து இல்லை என்று சொல்லி தனது தனிப்பட்ட மருத்துவமனைக்கு சொல்லுமாறு துண்டு எழுதிக்கொடுப்பதுமாக மக்கள் சேவையில் இருந்து  முற்றாக மாறுபட்ட செயற்பாட்டில் மருத்துவர் விஜிதரன் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களுக்கு அவரின் உதவியாட்கள் இருவரும் தொலைபேசியூடாக மருத்துவரை தொடர்புகொண்டு மருந்து வழங்கும் நிகழ்வும் நடந்துள்ளதாகவும்,ஜக்குமார், வனிதா,சுதா;சன் நாகலோஜினி,(செல்வி)ஆகிய உதவியாளர்கள் இருவரின் சொல்லினை கேட்ட மருத்துவர் தனது மருத்துவ பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பாக தனது விசுவமடு மற்றும் தர்மபுரத்தில் இயங்கும் பாமசியில் தனிப்பட்ட ரீதியில் இளம்பெண்களுக்கு கருத்தடை ஊசிமருந்தேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதால் மக்கள் விசனம்அடைந்துள்ளார்கள்.
இதேவேளை தர்மபுரம் மருத்துவர் விஜி தரனின் இந்த செயற்பாட்டினை தட்டிக்கேட்ட மக்கள் தலைவர்களை நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும் நாங்கள்எடுப்பதுதான் முடிவு என்று சந்திரசிறியின் செல்வாக்கில் எங்களால் என்னவும் செய்யமுடியும் என்று விரட்டியுள்ளார்கள்.
தர்மபுரம் மருத்துவரின் செயற்பாட்டினால் நாள்தோறும் விபத்திற்கு உள்ளாகும் மற்றும் காயத்திற்கு உள்ளாகிவருபவர்கள் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத காரணத்தால் கிளிநொச்சிமருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலைதெரிவித்துள்ளார்கள்.
மக்களுக்கு சேவையாற்றுவதாக உறுதிஎடுத்து கொண்டு வடபகுதிக்கு புதிதாக நியமனம் பெற்ற இந்த மருத்துவர்கள் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் தங்கள் தனிப்பட்டரீதியிலான வருமானம் தேடிக்கொள்ளும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை மலசல கூடத்தினுள் ஒழித்துவைத்த மன்னார் பெண்



யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வீட்டு வேலைக்காக வந்த மன்னாரைச் சேந்த இரு பெண்கள் வீட்டிலுள்ள தங்க நகைகளை எடுத்து மலசலக்குழியில் மறைத்து வைத்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றத்திற்காக ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனையை நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராச வழங்கித் தீர்பழித்துள்ளார்.
இந்த இரு பெண்களும் 3,62,500 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிக் கொண்டு மலக்குழியில் ஒழித்து மறைத்து வைத்துள்ளனர்.
குறித்த இரு பெண்களும் சந்தேகத்தின் பேரில் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது தங்க ஆபரணங்களை மலக்குழியில் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டனர்.
மலக்குழியிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களுடன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இரு பெண்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் ஜந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனையை யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாரா வழங்கியுள்ளார்

ஏழரை சனியுடன் வீடு, காணி வாங்கலாமா?


வாங்கலாம் 
2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்.
என்ன, சில நேரங்களில் சனி கண்ணை மறைப்பார். பிளாட் அப்ரூவல், மற்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், ஏழரைச் சனி, சில நேரத்தில் போன ஜென்மத்தில் யாரையாவது நாம் ஏமாற்றி இருந்தால் அவன் ஏதாவது போலி டாக்குமெண்டை காண்பித்து காசு வாங்கிக் கொண்டு ஓடிவிடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனால், முன் பணம் கொடுக்கும் போதும், பத்திரப் பதிவு செய்யும் போதும் வாரிசுதாரர்கள் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டார்களா என்பதையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் சட்ட ரீதியாக தெளிவுபடுத்திக் கொண்டு வாங்கினால் ஒரு பிரச்சனையும் கிடையாது.

5.1 பில்லியன் ரூபாவை இலாபம் பெற்ற சிகரட் நிறுவனங்கள்



2010 ஆண்டு வடகிழக்கில் 5.1 பில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ளதாக புகையிலை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் புகைத்தல் மற்றும் மது விற்பனை பெரிதும் அதிகரித்துள்ளதாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு துண்டு பிரசுரங்களையும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் செய்து வருகின்றது.
புகைத்தலால் பல்வேறு நோய்த்தாக்கங்கள் ஏற்படுமென பிரசாரங்கள் செய்யப்ட்டு வருகின்ற போதிலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளதாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு புள்ளி விபரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கில் நிலவும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தம் புகையிலை விற்பனை நிறுவனங்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி இளைஞர்களையும் சிறுவர்களையும் புகைத்தலுக்கு அடிமையாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு இம்மாதம் 31 திகதி தொடக்கம் ஜீன் மாதம் 16 திகதி வரை புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினங்களாக அனுஸ்ட்டிக்கவுள்ளது