//]]>3

சனி, 26 மே, 2012

தங்கத்தை மலசல கூடத்தினுள் ஒழித்துவைத்த மன்னார் பெண்



யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வீட்டு வேலைக்காக வந்த மன்னாரைச் சேந்த இரு பெண்கள் வீட்டிலுள்ள தங்க நகைகளை எடுத்து மலசலக்குழியில் மறைத்து வைத்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றத்திற்காக ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனையை நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராச வழங்கித் தீர்பழித்துள்ளார்.
இந்த இரு பெண்களும் 3,62,500 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிக் கொண்டு மலக்குழியில் ஒழித்து மறைத்து வைத்துள்ளனர்.
குறித்த இரு பெண்களும் சந்தேகத்தின் பேரில் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது தங்க ஆபரணங்களை மலக்குழியில் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டனர்.
மலக்குழியிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களுடன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இரு பெண்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் ஜந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனையை யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாரா வழங்கியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக