//]]>3

புதன், 16 மே, 2012

ஜோடி போதை பொருளுடன் கைது!


கொழும்பு – நாராஹென்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாராஹென்பிட்டி – உத்யான வீதியில் நேற்று 15ம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆணிடம் 5 கிராம் 29 மில்லி கிராம் ஹெரோயினும் பெண்ணிடம் 10 கிராம் 44 மில்லி கிராம் ஹெரோயினும் இருந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (16) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நாராஹென்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டு, யாழ் அரசஅதிபர்கள் பதவியேற்பு


யாழ். மாவட்ட புதிய அரச அதிபராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகமும் வவுனியா மாவட்ட முன்னாள் அரச அதிபராக இருந்த திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ல்ஸ் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராகவும் இன்று 16ம் திகதி காலை அந்தந்த மாவட்ட செயலகங்களில் பதவியேற்றுக் கொண்டனர். 

புதிய வகை ஒயில் போகும் இடம் ( பாத்துறும்) பார்தால் பொக வராது


உலகில் புதுமை விரும்பிகளால் நாளாந்தம் பற்பல புதுமைகள் புணையப்படுகின்றன.அந்த வகையில் புதுமை விரும்பிகள் ஆய் போவதையும் விட்டு வைக்கவில்லை…!


மாணவன் துஷ்பிரயோகம்: ஆசிரியை கைது


காருக்குள் வைத்து மாணவன் ஒருவனை உடலியல் துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியை வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஷிடெர் ரபிட்ஸ் வாஷிங்டன் உயர்தர பாடசாலையை சேர்ந்த 41 வாயதாகும் ஹீடெர் ஆடாம்ஸ் என்ற ஆசிரியையே காருக்குள் வைத்து மாணவனை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார்.
கடாந்த வியாழன், மாலை 6.20ஆளவில் தனது காரினுள் வைத்து 18 வயதான மாணவனை துஸ்பிரயோகித்த போது ரோந்து பொலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த ஆசிரியைக்கு 10 வருடத்துக்கு குறையாத சிறைத்தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

”எனது உலகு” எப்டி




யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள், பயிற்சி மையத்தில் ”எனது உலகு” எனும் தொனிப்பொருளில் ஒழிப்படக்கண்காட்சி இன்று(16.05.2012) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுகிறது 

இந்த கண்காட்சியின் ஆரம்பவைபவத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்,யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைத்துறைப் பேராசிரியர் ஞானகுமரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளத்தின் இயக்குனர் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர் 

இந்த கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெற உள்ளது 

அம்மா செய்யாத கடமையை செய்த கேப்டன் படை…!



ஆளும் அ.தி.மு.க புதுக்கோட்டை இடைத் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 24 ந் தேதி முதல்கட்ட பிரச்சாரத்தை பிரகதம்பாள் கோயிலில் இருந்து தொடங்கினார்கள்.
ஆனால் அ.தி.மு.க வேட்பாளர் கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர், மற்றும் கட்சியின் பெயரை முன்னதாக கொண்டுள்ள அண்ணவையும் மறந்து விட்டார். அ.தி.மு.க கட்சி தொடர்பாக எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எம்.ஜி.ஆர் சிலைக்கும், அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகே அடுத்த பணியை செய்வார்கள். ஆனால இந்த முறை இது வரை இவர்களுக்கு மாலையும் இல்லை மரியாதையும் செய்யவில்லை.
ஆளும் அ.தி.மு.க எம்.ஜி.ஆர், அண்ணாவை மறந்தது.ஆனால் தே.மு.தி.க எம்.ஜி.ஆர், அண்ணாவை மறக்கவில்லை.
அதனால் தான் ஒவ்வொரு முறையும் சிலைகளுக்கு மாலை போடுவது வழக்கம். அதே போல இன்று தே.மு.தி.க வேட்பாளராக மா.செ ஜாகிர் உசேன் அறிவிக்கப்பட்டதும் மா.செ தலைமையில் கட்சியினர் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை போட்டு மரியாதை செய்தனர்.

கற்பளிப்பு ஆனது விஞ்ஞான ரீதியில் தவறாகுமா? சுவாரஸ்யமான அலசல்!



கற்பளிப்பு என்பது என்ன…? பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ அவர்களின் விருப்பமின்றி உடல் ரீதியாக புணர்தலை குறிக்கிறது.
உலகில் மனிதன் தொடங்கி அனைத்து உயிரினங்களும் பாலியல் உணர்வுகள் உள்ளவையாகவே காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் பால் உணர்வே அவ் உயிரினத்தின் இனத்தை பெருக்கி, பூமியில் அவ் உயிரினம் நிலைத்திருக்க வழி செய்வதாகும்.
அனைத்து விலங்குகளும் பிறக்கையில் அவற்றின் ஜீன்களில் இனப்பெருக்கமானது ஓர் கடமையாகவே இயற்கையால் பொறிக்கப்படுகிறது என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை.
கரப்பான் பூச்சியினம், உலகின் பண்டைய ஓர் இனமாகும், மனிதன் தோன்றுவதற்கு பல கோடி வருடங்களுக்கு முன்பிருந்தே அவை பூமியில் வசித்து வருகின்றன.
காரணம் அவற்றின் சிறப்பான இனப்பெருக்க முறையே ஆகும்.
புவியில் பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் தட்ப வெப்ப மாற்றங்களில் இருந்து தப்பித்து இன்னமும் கரப்பான் பூச்சிகள் இப் பூமியில் வாழ்ந்து வருவதற்கு அவை அவற்றின் ஜீன்களில் பொறிக்கப்பட்ட இனப்பெருக்க கடமையை சரிவர நிறைவேற்றியதாலேயே ஆகும்.
மனிதனும் ஏனையவை போல் ஓர் விலங்கே. அவனது ஜீன்களிலும் இனப்பெருக்கம் என்பது கடமையாக பொறிக்கப்பட்டுள்ளது.
அக் கடமை மீது அதீத கடமைஉணர்ச்சியோடு செயற்படுபவர்களையே சமூகம் காமுகர்கள் என்கிறது. அத்துடன் அவர்களின் இக் கடமை உணர்ச்சியே கற்பளிப்பு என்ற செயன்முறைக்கும் தூண்டுகிறது.
எனவே விஞ்ஞான ரீதியில் கற்பளிப்பு தவறில்லை என்று கருதலாம். கடமையை செய்வது தவறாகுமா???
ஆனால் மனிதன் விலங்கு என்ற பதத்தை கடந்து ”சமுதாய விலங்கு” என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறான். காரணம் மனிதன் சமூகம் சார்ந்து, அனைத்து மனிதர்களுக்கும் சம பலம் கிடைக்குமாறு சட்ட திட்டங்கள் வகுத்து வாழ்கிறான்.

சமூக கட்டமைப்பு காணப்படாவிடின், பூமியில் ஏனைய விலங்கினங்களுக்கு எழுதப்படாத சட்டமாக உள்ள ” பலமானவை வாழும், பலமற்றவை அழிந்து போகும்” என்பதற்கிணங்க, உடல் வலிமையற்ற மனிதர்கள் அழிவை நாடவேண்டி இருந்திருக்கும்.
எனவே சமூக நோக்கில் பார்த்தால், மனிதன் இயற்கை கடமைகளை கட்டுப்படுத்தி, ஒழுக்க விதிமுறைகளுக்கு அமைய வாழ்தல் இன்றியமையாதது ஆகிறது…!

கர்ப்பிணிகள், பூப்பெய்தவர்களுக்கு ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்!



குழந்தை பெறும் நேரத்தில் உடல் இளகி தெம்பில்லாமல் இருக்கும் அதற்கு இந்த சூப்பை செய்து தினமும் மதிய உணவிற்கு முன் குடிக்கலாம்.
இந்த சூப்பை ஒரு நாள் ஆட்டு எலும்பிலும், ஒரு நாள் சிக்கன் எலும்பிலும் செய்து குடிக்கவும்.
தெம்பிழந்து இருக்கும் நோயாளிகளுக்கும் தினசரி இந்த சூப் கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.
பூப்பெய்திய பெண்களுக்கும் தினசரி உணவில் கொடுத்து வந்தால் இடுப்பெலும்பு பலம் பெறும்.
இதை குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால் முட்டி பலம் பெற சிக்கனில், ஆட்டுக்காலில் அல்லது மட்டனில் கொடுக்கலாம்.
சளி அதிகமாக இருந்தாலும் உடனே சரியாகும். தேவைக்கு சிறிது மிளகு கூட்டிகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில் வேக வைக்க வேண்டியது
· கறி உடைய ஆட்டு எலும்பு – ஆறு துண்டு
· வெங்காயம் – ஒன்று
· தக்காளி – ஒன்று
· இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
· உப்பு – தேவைக்கு
· மிளகு தூள் – அரை தேக்கரண்டி
· தனியாதூள் – ஒரு மேசை கரண்டி
· தேங்காய் பால் – கால் டம்ளர்

தாளிக்க
· நெய் (அ) நல்லெண்ணை – இரண்டு தேக்கரண்டி
· கரம் மாசாலா தூல் – கால் தேக்கரண்டி
· வெங்காயம் – கால்
· இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் தேக்கரண்டி
· கொத்து மல்லி தழை – கொஞ்சம்

செய்முறை
· எலும்பை கழுவி சுத்தம் செய்து முன்று கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வேகவைக்கவும்.
· வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
· நெய்யில் தளிக்க வேண்டியவைகளை போடு தாளித்து சூப்பில் கலக்கவும்.

61 வயது கவர்ச்சி அழகி



சீனாவை சேர்ந்த இந்த கவர்ச்சி அழகி
இவர் சீன மொடல் Liu Xiaoqing. இவர் பிறந்தது 30 October 1955. இப்போ வயசை கணக்கிட்டு பாருங்களேன்…
இவர் 1980 களில் சீனாவின் புகழ் பூத்த நடிகையாக இருந்தவர். தற்போது தொழிலதிபராக இருக்கிறார்.

திருமணத்திற்கு நடிதை தயார் - யாருக்கு அதிஸ்டம்


திருடா திருடி மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை சாயாசிங். அந்த படத்தில் வந்த மன்மத ராசா பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டத்தால் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் சரியாக ஓடவில்லை.
இந்நிலையில் அவர் திருமணத்திற்கு சம்மதம் கொடுத்துவிட்டாராம். பல நாட்களாகவே அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் கூறி வந்துள்ளனர்.
இந்தா அந்தா என்று தள்ளிப் போட்டவர் ஒரு வழியாக சரி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளாராம்.
மகள் ஓ.கே. சொன்ன கையோடு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை அவர பெற்றோர் துவங்குகிறார்கள். எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்று சாயா தெரிவித்துள்ளார்.
வழமை போல் தொழிலதிபர்களையே மணமகனாக தேடி வருகின்றனராம் பெற்றோர்கள்…!
உங்களுக்கு தெரியுமா???
நடிகைகள் தொழில் அதிபர்களை திருமணம் செய்வதன் காரணம் என்ன தெரியுமா?
அப்போது தான் நடிகைகள் தமது ஆடம்பர தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியும்.
அத்தோடு தொழிலதிபர்கள் தம்மையும் தமது தொழிலையும் பிரபலப்படுத்த நடிகையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதாலேயே…!
மற்றப்படி சந்தோசமாக வாழ்வதற்கு ஒன்றுமில்லை…!

ஆலயத்தில் பிரசன்னா-சினேகா



திரையுலக நட்சத்திரங்களான நடிகர் பிரசன்னா- சினேகா ஆகியோரது திருமணம் கடந்த 11-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பிரசன்னாவுக்கு கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே உள்ள பொய்யாமணி கிராமம் பூர்வீகமாகும். இவரது தாய் வழி குலதெய்வ கோவிலான செல்லாண்டி அம்மன் கோவில் மாயனூரில் மதுக்கரை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் நடிகர் பிரசன்னா குலதெய்வ கோவிலுக்கு வந்து செல் வதை வழக்கமாக கொண்டி ருந்தார்.

தற்போது திருமணம் முடிந்த கையோடு இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரசன்னா, தனது பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவி சினேகாவுடன் கோவிலுக்கு வந்தார்.

மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலிலும் அவர்கள் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து தாந்தோணி மலையில் உள்ள தனது நண்பர் வெங்கடகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் அவர்கள் காரில் சென்னை புறப்பட்டு சென்றனர்.

தன் மகளை ஒழுங்காக வளர்ப்பதாக சென்ன நடிகை -மகளின் நிலையை நீங்களே பாருங்கள்



தன் மகளை ஒழுக்கமாக வளர்த்துள்ளாராம், கல்வியும் ஒழுக்கமும் தான் மகளுக்கு முக்கியமாம், நடிக்க வரவே மாட்டாராம் என பல சூடான தகவல்களை விளாசியுள்ளார் ஸ்ரீ தேவி…!
தமிழில் 1980களில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையானார். போனி கபூரை மணந்தபிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். 15 வருட இடைவெளிக்கு பிறகு ‘இங்லிஷ் விங்லிஷ்’ படம் மூலம் சினிமாவில் ரீ என்டரி ஆகிறார்.
ஶ்ரீதேவி பேட்டி ஒன்றின் போது…
4 வயது முதலே நடிப்புக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தேன். மற்ற பெண்களைப் போல் திருமணத்துக்கு பிறகு குழந்தைகளுடன் வாழ்க்கையில் செட்டில் ஆக எண்ணினேன். அது நடந்தது. இல்லற வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான அனுபவம். அதை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க விரும்பினேன்.
கடவுள் பக்தி,பிரார்த்தனைகளைதான் என் மகள்களுக்கு கற்பித்திருக்கிறேன். அந்த வழியில்தான் நான் வளர்க்கப்பட்டேன். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். அவர்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறேன்.
ஜானவியை நடிகையாக்க விரும்புகிறீர்களா? என்கிறார்கள். ஒருபோதும் அப்படி எண்ணியதில்லை. நடிகையின் மகள் என்பதால் அவரும் நடிகையாவார் என்று எண்ணுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று பிரபல நடிகர்களுடன் அவரது பெயரை இணைத்துபோட்டு ஜோடியாக நடிப்பதாக எழுதுகிறார்கள். அதையெல்லாம் பார்த்து சிரிப்பேன். சிறுவயது முதல் நடித்ததால் என்னால் படிப்பை தொடர முடியாமல் போனது. அந்த கல்வியை மகள்களுக்கு அளிக்க விரும்புகிறேன். ஜானவி நிச்சயம் நடிக்க வரமாட்டார்.
என்றார் ஸ்ரீ தேவி…!


பறக்கும் சோளன்


முதன் முறையாக இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு சோளம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் முதற்கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் எதிர்வரும் 22ம் திகதி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இதனை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உத்தியோகபூர்வ நிகழ்வினை தலைமைதாங்கி 22ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைப்பார்.
இதன் போது விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றசாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்றுமதியின் முதற்கட்டமாக கனடா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு 1000 மெற்றிக் தொன் சோளம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. அத்துடன் ஒரு வருடத்திற்கு 10 ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தினை ஏற்றுமதி செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவரகின்றது.

3800 கோடிக்கு இலங்கை ஆயுதக் கொன்வனவு


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து, சிறிலங்கா அரசாங்கம் மிகப்பெரிய ஆயுத தளபாடக் கொள்வனவுகளை மேற்கொள்ளவுள்ளது.

சுமார் 3800 கோடி ரூபா பெறுமதியான ஆயுத தளபாடங்கள் சிறிலங்காப் படையினருக்காக ரஸ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்த ஆயுததளபாடக் கொள்வனவில் பெரும்பகுதி சிறிலங்கா விமானப்படைக்கே மேற்கொள்ளப்படவுள்ளது.

சிறிலங்கா விமானப்படைக்கு புத்தம்புதிய 14 போக்குவரத்து உலங்குவானூர்திகளை ரஸ்யாவிடம் இருந்து வாங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 4ம் நாள் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்காவின் பாதுகாப்புச் அமைச்சரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதற்கான பரிந்துரையை முன்வைத்திருந்தார்.

இந்த உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்வதன் மூலம் சிறிலங்கா விமானப்படை, 30 பேரை ஏற்றிச் செல்லக் கூடிய – இரட்டை இயந்திர – பலநோக்கு உலங்குவானூர்திகளையுடைய பெரியதொரு அணியைக் கொண்டதாக மாறவுள்ளது.

சிறிலங்காவுக்கு ரஸ்யா வழங்க இணங்கியுள்ள 300 மில்லியன் டொலர் (சுமார் 3800 கோடி ரூபா) கடனுதவியிலேயே இந்தக் கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் இந்தக் கடனுதவியில் சிறிலங்கா இராணுவத்துக்கு நேரடியாக வாங்கப்பட்ட துருப்புக்காவி கவசவாகனங்கள் மற்றும் ஏ.என்-32 போக்குவரத்து விமானங்களின் பழுதுபார்த்தல் அல்லது புதியவற்றை மாற்றிக் கொடுக்கவும் ரஸ்யா முன்வந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆயுத தளபாடகக் கொள்வனவு இதுவாகும்.

யாழ் குருநகர் வீடமைப்புத்திட்டம் புணரமைப்புக்கு 70 மில்லியனில்


வீடமைப்பு நிர்மானத் துறை அமைச்சு யாழ் குருநகர் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை புனரமைப்பதற்கு 70 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
160 வீடுகளை உள்ளடக்கிய 8 வீடமைப்புத் தொகுதிகளாக உள்ள குருநகர் தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் 1994ம் ஆண்டு திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 4 மாதங்களுக்கு முன் அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்நகருக்கு சென்று இவ் வீடமைப்புத் திட்டத்தினை அமைச்சின் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
அமைச்சின் நிதியில் இருந்து 70 மில்லியன் ரூபா ஒதுக்கிக் கொடுத்துள்ளார். முதல் கட்ட புனர்நிர்மாண வேலைகள் அடுத்த மாத முற்பகுதியில் அமைச்சர் விமல் வீரவன்சவினால் ஆரம் பித்து வைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது அதனை எங்கள் இணையத்தளத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை

15 வயது சிறுமி காதலனால் கற்பளிப்பு


தெனியாய, ஹிங்குராபனாகல பிரதேசத்தில் 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தச் சிறுமியை அவருடன் காதல் கொண்ட இளைஞனே பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது.
தற்போது இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

நந்திக்கடல் நிலம் ஆக்கிரமிப்பால் பதற்றம்


முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அண்மித்த பகுதியில் பறவைகள் சரணாலயத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் நாலு ஏக்கர் நிலத்தினை கரைதுறைபற்று பிரதேச செயலர் செ.தயானந்தாவின் துணையுடன் அபகரித்த அமைச்சர் றிசாட் பதியுதீனின் வேட்பாளர் சசிரேகன் என்பவர் மக்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவில் அத்துமீறிய சிங்கள் குடியேற்றத்திற்கு உதவி புரிதல், சட்டவிரோத மணல்அகழ்வு, மரக்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்ற பிரதேச செயலர் செ.தயானந்தா பறவைகள் சரணாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் நான்கு ஏக்கரை சசிரேகன் என்பவருக்கு வழங்கியிருக்கின்றார்.
ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற குறித்த பகுதியினை ஆக்கிரமித்த குறித்த நபர்கள் கனரக வாகனங்களின் துணையுடன் அந்தப்பகுதியியைச் சுற்றி அணைக்கட்டி அங்கு மீன்வளர்க்க றிசாட்டின் கையாட்கள் முற்பட்டிருக்கின்றனர்.
சம்பவத்தினை அடுத்து அங்கு திரண்ட இருநூறுக்கு மேற்பட்ட மக்கள் அந்த நடவடிக்கையினைக் கைவிடுமாறு வாதாடியிருக்கின்றனர்,
உடனடியாக மக்களை எதிர்த்த சசிரேகன், நாங்கள் யார் தெரியுமா? அமைச்சர் றிசாட் பதியுதீனின் கையாட்கள்? எங்களுக்கு இந்தக் காணியினை பிரதேச செயலர் தயானந்தாவின் அனுமதியுடன் தான் இந்த நிலத்தினைப் பெற்றிருக்கிறேன். நீங்கள் இதனுள் தலையிட முடியாது என்று மக்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள் குறித்த நபரை கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். தாக்குதலில் காயமடைந்த அவர் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், அந்தப் பகுதியைச் சுற்றி அரண் அமைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.
இதேவேளைஅந்தப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் மக்களில் ஒருவரை கைது செய்து முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்தில் தடுத்துவைத்திருக்கின்றனர். பொலிஸாரால் கைதானவரை விடுதலை செய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு மக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்பாகத் திரண்டிருப்பதாகவும் இதனால் அந்தப்பகுதியில் பதட்டம் நிலவுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோண்டாவில் சந்தியில் லாறி – ஓட்டோ விபத்து!


யாழ்ப்பாணம் கோண்டாவில் சந்தியில் இன்று(16) மாலை 3.10 அளவில் லாறி – ஓட்டோ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஓட்டோவின் முன்பக்க கண்ணாடி முற்றாக சிதைவடைந்துள்ளதுடன், பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
முன்னால் சென்ற லாறியின் பின்பகுதியில் ஓட்டோ மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.