//]]>3

புதன், 16 மே, 2012

யாழ் குருநகர் வீடமைப்புத்திட்டம் புணரமைப்புக்கு 70 மில்லியனில்


வீடமைப்பு நிர்மானத் துறை அமைச்சு யாழ் குருநகர் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை புனரமைப்பதற்கு 70 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
160 வீடுகளை உள்ளடக்கிய 8 வீடமைப்புத் தொகுதிகளாக உள்ள குருநகர் தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் 1994ம் ஆண்டு திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 4 மாதங்களுக்கு முன் அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்நகருக்கு சென்று இவ் வீடமைப்புத் திட்டத்தினை அமைச்சின் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
அமைச்சின் நிதியில் இருந்து 70 மில்லியன் ரூபா ஒதுக்கிக் கொடுத்துள்ளார். முதல் கட்ட புனர்நிர்மாண வேலைகள் அடுத்த மாத முற்பகுதியில் அமைச்சர் விமல் வீரவன்சவினால் ஆரம் பித்து வைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது அதனை எங்கள் இணையத்தளத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக