//]]>3

புதன், 16 மே, 2012

தன் மகளை ஒழுங்காக வளர்ப்பதாக சென்ன நடிகை -மகளின் நிலையை நீங்களே பாருங்கள்



தன் மகளை ஒழுக்கமாக வளர்த்துள்ளாராம், கல்வியும் ஒழுக்கமும் தான் மகளுக்கு முக்கியமாம், நடிக்க வரவே மாட்டாராம் என பல சூடான தகவல்களை விளாசியுள்ளார் ஸ்ரீ தேவி…!
தமிழில் 1980களில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையானார். போனி கபூரை மணந்தபிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். 15 வருட இடைவெளிக்கு பிறகு ‘இங்லிஷ் விங்லிஷ்’ படம் மூலம் சினிமாவில் ரீ என்டரி ஆகிறார்.
ஶ்ரீதேவி பேட்டி ஒன்றின் போது…
4 வயது முதலே நடிப்புக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தேன். மற்ற பெண்களைப் போல் திருமணத்துக்கு பிறகு குழந்தைகளுடன் வாழ்க்கையில் செட்டில் ஆக எண்ணினேன். அது நடந்தது. இல்லற வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான அனுபவம். அதை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க விரும்பினேன்.
கடவுள் பக்தி,பிரார்த்தனைகளைதான் என் மகள்களுக்கு கற்பித்திருக்கிறேன். அந்த வழியில்தான் நான் வளர்க்கப்பட்டேன். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். அவர்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறேன்.
ஜானவியை நடிகையாக்க விரும்புகிறீர்களா? என்கிறார்கள். ஒருபோதும் அப்படி எண்ணியதில்லை. நடிகையின் மகள் என்பதால் அவரும் நடிகையாவார் என்று எண்ணுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று பிரபல நடிகர்களுடன் அவரது பெயரை இணைத்துபோட்டு ஜோடியாக நடிப்பதாக எழுதுகிறார்கள். அதையெல்லாம் பார்த்து சிரிப்பேன். சிறுவயது முதல் நடித்ததால் என்னால் படிப்பை தொடர முடியாமல் போனது. அந்த கல்வியை மகள்களுக்கு அளிக்க விரும்புகிறேன். ஜானவி நிச்சயம் நடிக்க வரமாட்டார்.
என்றார் ஸ்ரீ தேவி…!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக