//]]>3

புதன், 16 மே, 2012

ஜோடி போதை பொருளுடன் கைது!


கொழும்பு – நாராஹென்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாராஹென்பிட்டி – உத்யான வீதியில் நேற்று 15ம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆணிடம் 5 கிராம் 29 மில்லி கிராம் ஹெரோயினும் பெண்ணிடம் 10 கிராம் 44 மில்லி கிராம் ஹெரோயினும் இருந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (16) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நாராஹென்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக