//]]>3

வெள்ளி, 8 ஜூன், 2012

பகல் கனவு எப்படி



விஞ்ஞான நீதியில் நிறைவேறாத ஆசைகள், ஆழ்மனம் என்பவை உணர்வற்ற நிலையில் இருந்து வெளிப்படுவது கனவுகள் எனப்படுகிறது.
பகல் நேரங்களில் வரும் கனவு, படுத்து சிறு நேரத்திலேயே வரும் கனவு போன்றவற்றிற்கெல்லாம் பலன் இல்லை என்று ஜோதிடத்தில் குறப்பட்டுள்ளது.
ஆனால் நள்ளிரவு 12.30 மணிக்குப் பிறகு வரக்கூடிய கனவுகளைத்தான் காலங்களாக பிரித்து ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவு 12.30 மணி முதல் 2 மணிக்குள் வரும் கனவு 3 மாதங்களில் நிறைவேறும்.
2 மணியிலிருந்து 3 மணிக்குள் காணும் கனவு ஒரு மாதத்தில் நிறைவேறும்.
3 மணியிலிருந்து 5.30 மணிக்குள் காணக்கூடிய கனவு உடனடியாக நிறைவேறும்
என்று பட்டியலிட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விடியற்காலை கனவுகள், அதாவது 3 மணி முதல் 5.30 மணி வரை வரும் கனவுகள் உடனடியாக நல்ல பலன்களைக் கொடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

நடிகைகளின் அம்மாக்கள் சினிமா



தமிழ் நடிகள் முன்னரெல்லாம் தமது மனேஜர்ஸ், மெய் பாதுகாவலர்களுடன் விழக்களுக்கு வலம் வருவார்கள். ஆனால் இப்பொழுது தமது அம்மாக்களையே தமது பாடிகார்ட்ஸ் ஆக்கியுள்ளனர்.
தாய்க்குலமும் நடிகைகளுக்கு நிகராக ஒப்பனைகளில் சக்கை போடு போடுகிறார்கள்.








த்ரிஷாவின் ஒரு கோடியை நூதனமாக ஆட்டை



தமிழ் நடிகை த்ரிஷாவின் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றில் சுமார் ஒரு கோடி ரூபாய் மாயமானது தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் த்ரிஷாவின் கணக்கில் இருந்து கடந்த வாரம் ஒருகோடி ரூபாய் காணாமல் போய் இருந்தது.
வங்கி அதிகாரிகளின் விசாரணை மூலம், குறித்த வங்கிக் கிளையில் பணி புரிந்த பணம் வரவு வைக்கும் ஊழியர் ஒருவரால் நூதன முறையில் குறித்த ஒருகோடி ரூபாய் களவாடப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வங்கி அதிகாரிகளின் விண்ணப்பத்தின் பெயரில் இதுவரை த்ரிஷாவால் பொலிசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
குறித்த களவாடப்பட்ட பணம் த்ரிஷாவிடம் மீள ஒப்ப்டைக்கப்பட்டதா என்பது தொடர்பில் இன்னும் தகவல் வெளிவரவில்லை.
பிரபல நட்சத்திரங்களிடமே ஆட்டைய போடுகிறார்களே… பொதுமக்கள் ரொம்போ உசாரா இருக்கனும்…!

புதிய பள்சரின் விசேடங்கள்



இந்தியாவின் முன்னனி மோட்டார் நிறுவனமான பஜாஜ், தனது தயாரிப்பான ”பள்சர் 200NS” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பள்சர் 220 இல் சிறு சிறு தவறுகள் தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இப் புதிய பள்சர் வெளியிடப்பட்டுள்ளது.
இப் புதிய பள்சர் 200NS, பிரபல BMW நிறுவன மோட்டார் சைக்கிள்களான BMW S1000RR மற்றும் BMW R1200GS ஆகியவற்றை வடிவமைத்த Mr. Edgar Heinrich என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
பிரபல ஸ்போர்ட்ஸ் பக் ஆன KTM Duke 200 இன் எஞ்சின் வடிவமைப்பை மையப்படுத்தி பள்சர் 200 இன் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஞ்சினை குளிர்மைப்படுத்துவதற்காக திராவக குளிர்மை நுட்பம் ( liquid cooled Teck) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந் நுட்பம், அதி வேகத்திலும், பைக்கின் எஞ்சின் சீராக இயங்க உதவும்.
இதுவரை பஜாஜ் பள்சர்களில் Twin Spark தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய பள்சரில் Triple Spark தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

23.17 bhp வலு இயந்திரம் அதி சிறந்த ஸ்போர்ட்ஸ் அனுபவத்தை அளிக்கக்கூடியது.
அத்துடன் ஒரு லீற்றர் பெற்றோலில் 58 கிலோமீற்றர்கள் ஓடக்கூடியது.
ஆறு கியர் காணப்படுகிறது, முன், பின் சக்கரங்கள் இரண்டிற்கும் டிஷ் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப் புதிய பள்சரின் விலை 85000 இந்திய ரூபாய்கள் என்பது மகிழ்ச்சியான விடயம்.
இப் புதிய பஜாஜ் பள்சர் 200NS சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கமலின் விஸ்பரூபம் – என்ன கதை? (ட்ரெய்லர் இணைப்பு)


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் கமலின் திரைப்படம் ”விஸ்பரூபம்”. அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதை குறித்து கமல்ஹாஸன் கூறுகையில்…
“விஸ்வரூபம் என்மனதிலும் என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக உட்கார்ந்திருந்த கதை. என் மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
கதை என்ன?
அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை மனைவியின் தொந்தரவின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத்.
ஆனால் நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறாள். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள்.
அதன் பின்னர் ஏற்படும் வில்லங்கங்களின் தொகுப்பு தான் இந்த விஸ்பரூபம்!
ம்ம்…. விஸ்பரூபத்தை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு காத்திருப்போம்…!


தவமிருக்கும் வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகை சமந்தா



புகழ் பூத்த இயக்குனர்களில் மணிரத்தினமும் ஒருவர். இன்றைய பல நடிகைகளின் கனவே, மணிரத்தினத்தின் படம் ஒன்றில் நடித்துவிடவேண்டும் என்பதுதான்.
அப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்தும், அதை தூக்கி எறிந்துள்ளார் நடிகை சமந்தா.
பலத்த எதிர்பார்ப்ப எற்படுத்தியுள்ள மணிரத்தினத்தின் ”கடல்” திரைப்படத்தில் சமந்தா ஒப்பந்தமாகியிருந்தார்.
கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று பேட்டி அளித்திருந்தார்.
ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார்.
மணிரத்தினம் விலக்காத நிலையில் தானாகவே சமந்தா இவ் அரிய வாய்ப்பை தூக்கி எறிந்தது தொடர்பில் கோடம்பாக்கத்தில் மர்மம் நிலவுகிறது…!
தானாக விலகினாரா, இல்லை வற்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

பாகிஸ்தானின் வயிற்றில் புளியை கரைக்கும் ஹிஸ்புல்



காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் யுத்தத்துக்காகவே நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இந்தப் போரில் பாகிஸ்தான் விலக நேர்ந்தால் எங்களது போரானது பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சலாலுதீன்…
காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் யுத்தத்துக்காகவே நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இந்தப் போரில் பாகிஸ்தான் விலக நேர்ந்தால் எங்களது போரானது பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக நடத்தப்படும்.
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் பல சுற்று அமைதிப் பேச்சுகளை நடத்தி வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்துக்கு ஆயுதவழிப்பட்ட தீர்வுதான் சரியானதாக இருக்கும். இதனால் பாகிஸ்தானும் இந்தியாவும் நடத்துகின்ற அமைதிப் பேச்சுகளை நாங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸாதான் இதுவரை மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். பாகிஸ்தானின் இந்த புதிய நிலைப்பாடு காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை காயப்படுத்துவதாக உள்ளது.
ஈராக்கிலும் ஆப்கானிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தியா படைகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன? இந்த வகையில் காஷ்மீரில் இருந்து இந்தியப் படைகள் தானாகவே விலக வேண்டிய நிலைமை ஏற்படும்.என தெரிவித்துள்ளார்.
இது போன்ற தீவிரவாத அமைப்புக்களின் எச்சரிக்கைகளுக்கு அடிபணியாது சமாதான போக்கை கடைப்பிடித்தால் தான் நாட்டுக்கு நன்மை விளையும் என்பதை பாகிஸ்தான் அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலியானாவின் கவர்ச்சி படம்

இலியானாவின் ஒளி ஊடுபுகவிடும் சூடான புடவை கவர்ச்சி படம் உங்களுக்காக

பெப்சியின் புத்தம் புதிய சோடா!



உலகின் முன்னனி மென்பான நிறுவனங்களில் கொகா கோலாவுக்கு அடுத்ததாக பல் தேசிய கம்பெனியான பெப்சி காணப்படுகிறது.
இப் பெப்சி நிறுவனம் வரும் ஜூலை 24 இல், யப்பானில் தனது புதிய வகை சோடா ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
”Salty Watermelon” என பெயரிடப்பட்டுள்ள இப் புதிய சோடா, ஜப்பானில் வழக்கத்தில் உள்ள தர்பூஸ் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட பானத்தை அடையாளப்படுத்துவதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இப் புதிய சோடாவை உலகமெங்கும் சந்தைப்படுத்த பெப்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.