//]]>3

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஸ்ரீநாத் பெரேரா குழு அறிக்கை நடுநிலையற்றது




சிறிகொத்தா தாக்குதல் தொடர்பாக ஸ்ரீநாத் பெரேரா குழு வெளியிட்டுள்ள அறிக்கை நடுநிலையற்ற பக்கசார்பான செயற்பாடொன்றின் எழுத்து மூல ஆவணமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அனுமானிக்கப்பட்ட மற்றும் முன்கூட்டியே தயார்படுத்தி வைக்கப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கையாக தயாரித்து சமர்ப்பிப்பதற்கான முயற்சியை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிக்கொத்தா தேர்தலின் போது செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்களை தவிர வெளிநபர்கள் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததை குறித்த குழு திட்டமிட்ட வகையில் கவனத்திற்கொள்ளவில்லை என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் சந்தர்ப்பத்தில் ஒரு குழுவினர் சட்டவிரோதமாக சிறிக்கொத்தவிற்குள் தங்கியிருந்ததை ஸ்ரீநாத் பெரேரா குழு இறுவெட்டுக்கள் ஊடாகவோ, புகைப்படங்கள் மூலமாகவோ காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே அவர்கள் உட்பிரவேசிப்பதற்கான அனுமதியை வழங்கியது யார்? ஆயுதங்களுடன் இருந்த அவர்களை வெளியேற்றுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவில்லை எனவும் கரு ஜயசூரியவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் நிராயுதபாணிகளான நபர்களையும், பெண்களையும் பின்தொடர்ந்து தாக்குதல் நடத்திய விதத்தை தொலைக்காட்சி அலைவரிசைகள் தெளிவாக ஒளிபரப்பிய போதிலும், அந்தக் குழு அது தொடர்பில் மௌனம் சாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேர்தலின் போது, ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பான தரப்பினரைப் போன்றே எதிர்த்தரப்பினரும் அங்கு இருந்தமை வெளிப்படையான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தா மீதான தாக்குதலை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குழுவினரை அரசியல் தூக்குமேடையை நோக்கி இட்டுச் செல்வதற்கு குறித்த குழு முயற்சித்துள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிக்கொத்தாவுக்கு வெளியே இருந்தவர்கள் தூண்டுதல் காரணமாக அங்கு வரவில்லை எனவும், ஒருவரை சுட்டிக்காட்டும் போது தம்மை நோக்கி நான்கு விரல்கள் திரும்பும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் எனவும் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

குழுவினருக்கு கிடைத்த சாட்சியங்களுக்கு அமைய அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் அமைதியற்ற முறையில் செயற்படுவார்கள் என சஜித் பிரேமதாஸ மற்றும் தாம் தெளிவுபடுத்தப்பட்டிருந்ததாகவும் கட்சியின் சிரேஷ்ட பதவிகளை வகிக்கும் நபர்கள் குறித்த குழுவினரை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிகொத்தா மீது கற்கள் எறியப்பட்ட சந்தர்ப்பத்தில் வெளியில் இடம்பெறும் விடயங்கள் குறித்து வினவுவதற்கு தாம் முயற்சித்தபோது பாதுகாப்பு தரப்பினர் போன்றே செயற்குழுவின் அநேகமானவர்கள் அதனை தடுக்கும் வகையில் செயற்பட்டமை இரகசியமல்ல எனவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தாக்குதலை எவர் நடத்தியிருந்தாலும் அந்த சந்தர்ப்பத்திலேயே தாம் உள்ளி்ட்ட குழுவினர் அதனை கண்டித்ததை குழுவினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடையும் கட்சியாக மாற்றுவதற்கான மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தாமாகவே முன்வந்த குழுவினருக்கே, அன்றைய தினம் நன்றி தெரிவித்ததாகவும், அது கற்களை எறிந்தவர்களுக்கு பொருந்தாது எனவும் கரு ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிகொத்தவிற்குள் இனந்தெரியாத குழுவினர் தங்கியிருந்ததை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீநாத் பெரேரா குழு, அந்த நபர்களை முயல்குட்டிகளாக மாற்ற மேற்கொள்ளும் முயற்சி அருவெருக்கத்தக்கது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தலையீடு செய்தவர்கள் மீது தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றமை, வெற்றியீட்டும் கட்சிக்காக கருத்து மோதலில் ஈடுபட்டுள்ள குழுவினரை விரட்டியடித்து, கட்சியை பழைய நிலையிலேயே தக்கவைப்பதற்கு வழி வகுக்கும் என கரு ஜயசூரியவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நபர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு எதிராக செயற்படும் நடைமுறையில் இருந்து தற்போதாவது ஐக்கிய தேசியக் கட்சியை விடுவித்து, ஒரே கருத்தின் கீழ் ஒன்றுதிரட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதித் தருணம் வரை பெரும்பாலான மக்களினதும், ஆதரவாளர்களினதும் நோக்கங்களை நிறைவேற்றுவற்காக முன்னின்று கட்சியின் ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

குடிசைக் கைத்தொழில் கண்காட்சி

மஹிந்த சிந்தனையின் கீழ் திவிநெகும திட்டத்தின் தேசிய நிகழ்வாக குடிசைக் கைத்தொழிலினை ஊக்குவிக்கும் வகையிலான மாபெரும் கண்காட்சி நேற்ரு முந்தினம் (31) நடைபெற்ற போது சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது. 

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இடம்பெற்ற இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். 

கிறிஸ்தவ மக்களின் தவக்காலம்

கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடெங்கிலும் இடம்பெற்றுவருகின்றன


                 . மட்டக்களப்பு நகரின் எல்லை வீதியில், திஸவீரசதுக்கத்தில் உள்ள குழந்தை ஜேசு ஆலயத்தில் நேற்று (31) விசேட பூசைகள் இடம்பெற்றன. அத்துடன் இறை தூதர் சிறையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையிலான திருச்சிலுவை சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். 






தேசத்தின் மகுடம் பகுதி 2





































இவ்வருடம் 3 மாதங்களில் 578 பேர் வீதி விபத்துக்களால் பலி

இவ்வருடம் மார்ச் 28 ஆம் திகதிவரையான 3 மாத காலப்பகுதியில் நாடுமுழுவதும் வீதி விபத்துக்களால் 578 பேர் உயிரிழந்ததுடன் 1270 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று தெரிவித்தது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை காலை 6.00 மணிமுதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிவரையான 24 மணித்தியாலங்களில் வீதி விபத்துகளால் 11 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்தனர். 
கடுவெலயில் நடைபெற்ற விபத்தொன்றில் இருவர் பலியானதுடன் 7 பேர் காயமடைந்தனர். ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் ஒன்றுடன் கார் ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
கேகாலையில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் மோதியதால் இருவர் பலியானதுடன் 6 பேர் காயமடைந்தனர். 

குருநாகல் நாரம்மலவில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் 24 வயதான இளைஞர் ஒருவர் பலியானார். 
நுவரெலியா – பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்தனர்
அம்பலங்கொடையில் வான் ஒன்றும் - ட்ரக் ஒன்றும் மோதிக்கொண்டதால் ஒருவர் பலியானார்.


மியன்மரில் இன்று இடம்பெற்ற தேர்தலில், ஆங் சான் சூகீ


மியன்மரில் இன்று இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயக வாதி ஆங் சான் சூகீ தனது கட்சி சார்பாக முதன் முதலாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
 
மியன்மர் நாடாளுமன்றத்தின் 45 ஆசனங்களுக்காகவே இந்த தேர்தல் இடம்பெற்றுள்ளது.
 
2 தசாப்த காலத்திற்கு பின்னர் ஆங் சான் சூகீயின் தேசிய ஜனநாயக வாதி கட்சி நிர்வாகத்தை கைப்பற்றியள்ளது.
 
தேர்தலின் போது செய்தியாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டிருந்தது..
 
இதன்படி, சுமார் 100 வெளிநாட்டு செய்தியாளர்களும் அங்கு நிலைகொண்டுள்ளனர்.
 
1990 ம் ஆண்டளவிலேயே ஜனநாயக கட்சி தேர்தலின் போட்டியிட்டிருந்தது.
 
இதேவேளை, தேர்தல்கள் சுமூகமாக நிறைவடையும் பட்சத்தில் மியன்மாருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதர தடையினை அகற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் மறைமுகமாக தெரிவித்தது.
 
இதேவேளை, மியன்மாரின் இராணுவ நிர்வாகம் பெரும்பாளான அரசியல் கைதிகளை விடுவித்துள்ளது.
 
ஜனநாயக வாதியான ஆன்சான் சூகி 20 வருடங்களுக்கு மேல், ராணுவ ஜுன்டா ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
 
இன்றைய தேர்தலில் ஆன்சான் சூக்கியின் கட்சியான ஜனநாயகத்திற்காக தேசிய லீக் கட்சி உட்பட 17 எதிர்கட்சிகள் போட்டியிட்டிருந்தன.

தி டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம் தமிழிலும் ரீ-மேக்


ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற தி டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம் தமிழிலும் ரீ-மேக் செய்யப்படவுள்ளது.

சில்க் சுமிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர்ஸ். 
இதில் சில்க் சுமித்தாவாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார்.


ஆரம்பத்தில் இந்தப்படத்தில் நடிப்பதற்கு வித்யாபாலனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, இந்தப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, இருப்பினும் அனைத்து எதிர்ப்புக்களையும் மீறி தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் வெளியாகி வித்தியாபாலனுக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரீ-மேக் செய்யப்படவுள்ளது. இதில் சில்க்சுமித்தா வேடத்தில் நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.விரைவில் இதுபற்றிய அறிவிப்புக்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை ஆடவர் அணி க்யூ பிரிவில் இரண்டாவது இடம்


ஜேர்மனில் நடைபெறும் டேபள் டென்னிஸ் குழுக்களுக்கிடையிலான உலகக் கிண்ண போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை ஆடவர் அணி க்யூ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த இறுதிப் போட்டிகளில் மொங்கோலியா அணி தோல்வியைத் தழுவிக்கொண்டது.


வவுனியாவில் வீசிய கடும் காற்று


வவுனியா - மெனிக்பாம் நலன்புரி நிலையத்தை அண்மித்து ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 1,172 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடும் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.