//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

நடிகைகள் இலியானா,பிரியங்கா நேரடி மோதல். பாலிவுட்டில் பரபரப்பு




தமிழில் நண்பன்  படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியில் பர்பி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இருவருக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒருவரையொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவினர் சமரசப்படுத்தியதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளது. இது குறித்து இலியானாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பிரியங்கா சோப்ராவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம். பிரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன். ஒரு நடிகை என்ற ரீதியிலேயே எங்களுக்குள் அறிமுகம் உள்ளது. வேறு எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்குள் மோதல் நடந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை.
சினிமாவில் யார் தயவும் இன்றி தனி ஆளாக நின்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். கடவுள் தயவால்தான் இதை சாதிக்க முடிந்தது. சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது முதல் தெலுங்கு படம் ஹிட்டானது. அதன் பிறகு எனக்கு தைரியம் வந்து விட்டது. இவ்வாறு இலியானா கூறினார்.

வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன் -விஞ்ஞான விளக்கம்



வெள
வால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது.
அதனால், வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது.
அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும், அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது.
ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது.

கரண்டே வேண்டாம்! குளு குளு தண்ணீர் குடிக்க நீங்க ரெடியா? புதிய வழி



கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரம், மனசு கூலா குடிப்பதற்கு ஏங்கும்…… அப்போது கைகள் அணைத்து கொள்வது குளிர்சாதன பெட்டியில் உள்ள குளிர் தண்ணீரை தான்… காரணம், வெளியில் அலுமினிய, பிளாஸ்ரிக் பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சூழல் வெப்பநிலைக்கு ஏற்ப சூடாக இருக்கும்.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள தண்ணீர் உடல் நலத்துக்கு நல்லதல்ல, அது சமிபாடு செயற்திறனை குறைப்பதோடு, வயிறு பருமன் ஆவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
அதிலும் உணர்ச்சி மிக்க பற்களை கொண்டவர்களால் குளிராக குடிக்கவே முடியாது…
இதற்கு எல்லாம் தீர்வு என்ன…? கோடை காலங்கலில் எம்மால் கூலாக இருக்க என்ன வழி?
அதை நமது தமிழ் முன்னோர்களே சொல்லி தந்து இருக்கிறார்கள்.
அது தான் மண்பாணை குடிநீர்…!
என்ன சிரிப்பாக இருக்கிறதா…! இது முற்றிலும் உண்மை.
மண் பானையில் உள்ள குடிநீர் குளிர்ச்சியாக இருப்பதற்கான விஞ்னான விளக்கத்தை பார்ப்போம்…
மண் பானைகளில் பார்வைக்கு புலப்படாத மிக நுண்ணிய துளைகள் இருக்கும். இத் துளைகள் மூலம் நீர் வெளியே சிந்தாது, காரணம், அந்த அளவுக்கு அவை நுண்ணிதாய் இருக்கும்.
மண் பானையில் தண்ணீரை ஊற்றி வைத்ததும், அதில் உள்ள நுண் துளைகள் மூலம் தண்ணீர் கசிந்து பானையின் வெளி மேற்பரப்பில் படலம் போல் படர்ந்து காணப்படும்.
சுழலின் வெப்பம் அவ் வெளி மேற்பரப்பில் உள்ள தண்ணீர் படலத்தை ஆவியாக்குவதிலேயே இழக்கப்பட்டுவிடுவதால், பானையின் உள்ளே வெப்பம் செல்லாது தண்ணீர் குளு குளு என இருக்கும். அத்துடன் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீரின் வெப்ப நிலையும் மேற்படி நீர்படலத்தை ஆவியாக்குவதற்கு செலவாவதால் அத் தண்ணீர் வெளி வெப்ப நிலையை வெட மிகவும் குறைவான வெப்பநிலையில் இருக்கும்.
அத் தண்ணீரின் குளுமை, பற்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்தாது, உடலுக்கு தீங்களிக்காது அற்புதமான குளிர்மையை உங்களுக்கு தரும்.
அத்துடன் குளிர்சாதனப் பெட்டி வெளியேற்றும் வெப்பம் காரணமாக சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் கதாநாயகர்களாகவும் நீங்கள் விளங்கலாம்.

அமெரிக்காவை அடிபணிய வைக்க எமது ஆயுதங்கள் போதுமானவை: வடகொரியா



எங்களது நாட்டில் அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு ஆயுதங்கள் உள்ளன என்று வட கொரியாவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று ஹவுஸ் ஆஃப் கல்ச்சர் என்ற கூட்டம் நடைபெற்றது. அதில் பங்குபெற்ற துணை மார்ஷல் ரி யோங் ஹோ கூறுகையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிடமிருந்து வட கொரியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
மேலும் ஒரே அடியில் அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு எங்களிடம் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என்று அவர் இராணுவ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதே போன்று தென் கொரியாவின் தலைநகர் சியோலை மூன்றே நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என வட கொரியா எச்சரித்திருந்ததும் குறிப்பிட.த்தக்கது

இனிப்பு குளிர் பானங்களால் குடிப்பதால் மாரடைப்பு அபாயம்!



இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.
ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சர்குலேஷன் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதமும் அதிகரிக்கிறது.
அதேசமயம் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை.
குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இல்லை. தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் நிலை வருகிறது.
குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் உடலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்த பெண்ணுக்கு 14 மாத சிறை!



கிறிஸ்ரி சோடென், 21 வயதாகும் பிருத்தானியாவை சேர்ந்த பெண். தான் ஆண் ஒருவரால் உடலியல் நீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலீசில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவரின் முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபரை கைது செய்து பொலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதன் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. குறித்த பெண் தன்னை விலைமாதுவாக, வயதுவந்தோருக்கான இணையதளம் ஒன்றில் விளம்பரப்படுத்தியிருந்தாராம்.
அதை பார்த்து குறித்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்த இளைஞன் மீது கற்பளிப்பு புகார் கொடுத்துள்ளாள் குறித்த பெண்.
இணையதள சட் பதிவுகள் மூலம் இளைஞனனின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்திய பொலீசார், பொய் குற்றச்சாட்டு அளித்த குற்றத்துக்காக அப் பெண்ணை கைது செய்தனர்.
குறித்த இளைஞனின் பணத்துக்கு ஆசைப்பட்டு இவ்வாறான புகாரை கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பொலீசாரின் 376 மணிநேரத்தை வீணாக்கி, பொலீஸ் திணைக்களத்துக்கு 14000 பவுன்ஸ் இழப்பு ஏற்படுத்தியதற்காகவும், பொய் முறைப்பாடு அளித்தமைக்காகவும் குறித்த பெண்ணுக்கு 14 வருட சிறை தணடனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை கூட்டு உடலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடியோவாக்கி பைத்தியமாக்கிய கும்பல் கைது


சிறுமியை கூட்டாக உடலியல் துஷ்பிரயோகம் செய்து, அதனை வீடியோவாக்கி இணையத்தில் பதிவேற்றி, குறித்த சிறுமியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி பைத்தியமாக்கிய சம்பவம் தென் ஆபிரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினத்தன்று பாடசாலை முடிந்து வீடு திரும்பிய 17 வயது சிறுமியை 14 வயது மற்றும் 20 வயது சிறுவர்கள் உள்ளடங்கலான 7 பேர் கொண்ட குழு கூட்டாக உடலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளது.
அதனை வீடியோ ஏடுத்து வயதுவந்தவர்களுக்கான தளம் ஒன்றில் பதிவேற்றி பணம் சம்பாதித்து இருக்கிறார்கள் குறித்த குழுவினர்.
இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு காணாமல் போயுள்ளாள். பின்னர் மீட்கப்பட்ட சிறுமி மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாள்.
பொலீசரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வர, அந்த ஏழுவரும் நேற்று முன்தினம் (20) மடக்கி பிடிக்கப்பட்டனர். அவர்களின் குற்றத்துக்கு ஆதாரமாக 10நிமிடம் 33 செக்கன்கள் அளவிலான குறித்த துஷ்பிரயோக காட்சி அடங்கிய வீடியோ சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பொலீசார் தெரிவித்தனர்.

இலங்கையில் 3000 இற்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி.



இலங்கையில் 3000 இற்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
நிர்ப்பீடன குறைப்பாட்டு அறிகுறிகளை கொண்டவர்களின் பட்டியலில் தினமும் ஒரு நோயாளி இணைவதாக மருத்துவ தரப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் மாநாடு அண்மையில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய எயிட்ஸ் தடுப்பு பிரிவுத் தலைவர் நிமல் எதிரிசிங்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் இலங்கையில் 150 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தனர். அதுதவிர, 50 குழந்தைகள் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுடன் பிறந்துள்ளனர்.
இனங்காணப்பட்ட எச்.ஐ.வி. நோயாளிகளில் 61 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தவறான உடலுறவு மற்றும் தவறான குருதிப்பரிமாற்றம் ஆகியன காரணமாக பரவியதாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடத்தில் ராகம மருத்துவமனையில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் முதல் இரு மாதங்களுக்குள் 5 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடிப்பு



லிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஸ்டெம்செல்கள் எனப்படும் குருத்து உயிரணுக்களை மாற்றியமைத்து, அவற்றை எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் செலுத்தி, அதன்மூலம் எயிட்ஸ் நோயை குணப்படுத்த வாய்ப்பிருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
பரிசோதனைக் கூடத்தில் எலிகள் மத்தியில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இந்த முயற்சி நம்பிக்கையளிக்கக்கூடிய பலன்களைத் தந்திருப்பதாகவும், எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருத்துவ உலகின் போராட்டத்தில் இது முக்கிய முன்னேற்றம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களை தாக்கும் எச் ஐ வி கிருமியானது, மனித உடலில் புகுந்ததும் குறிப்பிட்ட திசுக்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பின்பு அங்கிருந்தபடி பல்கிப்பெருகி ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச்செல்களை தாக்கி அழிப்பதன் மூலம் எயிட்ஸ் நோயை உருவாக்குகின்றன. இதை குணப்படுத்தாவிட்டால் மரணத்தில் முடியும்.
இந்த எச் ஐ வி கிருமியின் உயிர்ச்சுழலில், அவை தங்கியிருக்கும் திசுக்களை குறிவைத்துச் செல்லக்கூடிய வகையில் குருத்து உயிரணுக்களை ஆய்வாளர்கள் முதலில் மாற்றியமைத்தனர்.
இப்படி மாற்றியமைக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை எயிட்ஸ் தாக்கிய எலிகளின் உடலில் செலுத்திய சில நாட்களில் அந்த எலிகளின் ரத்தத்தில் இருந்த எச் ஐ வி தொற்றின் அளவு குறைந்திருப்பதையும், நோய் எதிர்ப்புச்செல்கள் அதிகரித்திருப்பதையும் இவர்கள் கண்டுபிடித்தனர்.
இதன்மூலம் குருத்து உயிரணுக்களை பயன்படுத்தி எயிட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

வாடகைக்கு வீடு தேடும் பாணியில் கொள்ளை



வாடகைக்கு வீடு தேடும் தோரணையில் வீடொன்றிற்குள் நுழைந்து அவ் வீட்டிலிருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கை, கால்களை கட்டி வைத்து விட்டு தங்க நகைகள் உட்பட பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று கொழும்பு ஆமர்வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆமர்வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த 70 வயதுடைய பரமேஸ்வரி நடராஜா என்ற மூதாட்டியின் வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அவரிடமிருந்த ஐந்தரை பவுண் தங்க நகைகளும் கையடக்க தொலைபேசி மற்றும் டீ. வீ. டி. போன்றவையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மூதாட்டி தெரிவிக்கின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த மூதாட்டியின் வீட்டிற்கு வந்த இருவர் வாடகைக்கு வீடு பார்க்க வந்ததாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அதன் போது தனது வீடு ஏற்கனவே வேறொருவருக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளதாக மூதாட்டி கூறியுள்ளார். அதற்கு அச்சந்தேக நபர்கள் இருவரும் உங்களுடைய மகள் தான் எங்களை வீடு பார்க்க அனுப்பினார் மற்றதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
இந்த தாட்டியின் மகள் மற்றும் மகன்மார்கள் அப்பகுதியிலேயே வேறு வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். சந்தேக நபர்கள் கூறியதைக் கேட்ட மூதாட்டி அவர்களை உள்ளே அனுமதித்ததுடன் அவர்களிடம் கதைக்கவே, சந்தேக நபர்களில் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீர் எடுப்பதற்காக மூதாட்டி சமையலறைக்குச் சென்ற போது பின்னால் சென்ற சந்தேக நபர்கள் அம் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கை, கால்களை கட்டி விட்டு மூதாட்டியின் முகத்தை பிளாஸ்ரர் ஒன்றினால் ஒட்டி மறைந்து விட்டு கைகளில் இருந்த மூன்று காப்புகளையும் மோதிர மொன்றினையும் தோட்டினையும் கழற்றிக் கொண்டு வீட்டிலிருந்த அவருடைய கையடக்கத் தொலைபேசி மற்றும் டீ. வீ. டி இயந்திரம் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு மூதாட்டியை தாக்கி சமையலறையில் தள்ளி விட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அந்த மூதாட்டி மெல்ல மெல்ல நகர்ந்து சமையலறையிலிருந்து முன் அறைக்கு வந்ததுடன் “மிகவும் கஷ்டப்பட்டு ஓரளவு சத்தமெழுப்பியுள்ளார். அதனைக் கேட்ட அயல் வீட்டு பெண் உடனே வீட்டிற்குள் வந்து பார்த்து சத்தமிட்டதையடுத்து அந்தத் தோட்டத்தில் உள்ளவர்கள் ஒன்று திரண்டு மூதாட்டியின் முகத்தில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்ரரையும் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த பட்டிகளையும் கழற்றியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி அதன் பின்னர் தனது மகளுக்கு தொலைபேசியில் இவ்விடயம் தொடர்பாக அறிவிக்கவே உடனடியாக அந்த மூதாட்டியின் மகள் அங்கு வந்து அவரை அழைத்துக் கொண்டு ஆமர் வீதியில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு சென்றுள்ளார். அங்கு பொலிஸார் கொட்டாஞ்சேனை பொலிஸில் சென்று முறைப்பாடு செய்யுமாறு கோரவே அவர்கள் அங்கு சென்று முறைப்பாடு செய்தார்கள். அதன் பின் மூதாட்டி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காட்டுப் பன்றி என நினைத்து காதலியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம்



காட்டுப் பன்றி என நினைத்து காதலியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்தேறியுள்ளது.
ஸ்ரிவன் ஏகன் என்பவர் தனது காதலியுடன் வனப்பகுதி ஒன்றில் வேட்டைக்கு சென்றிருந்தார். அங்கு இரவுப் பொழுதை கூடாரத்தில் கழித்தார்.
இரவு 7.30 மணியளவில் பொருள் ஒன்றை தேடுவதற்கு எதிர் கூடாரத்தில் காதலி நுளைய, அந்த சரசரப்பை தவறாக புரிந்து கொண்டு, காட்டுப்பண்றி கூடாரத்துக்குள் நுளைந்துவிட்டது என்று, அக் கூடாரத்தை நோக்கி கலீபர் ரக துப்பாக்கியால் இருமுறை சுட்டுள்ளார்.
அங்கே காதலியின் அலறல் சத்தம் கிழம்பவே, ஓடிச் சென்றவர், அங்கே கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் காதலி துடிப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனியில் சேர்த்தார்.
தற்பொழுது மனைவி உயிருக்கு போராடிய நிலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ் மின்சார சபையின் நவீன கட்டுப்பாடு அறை: பணிகள் முடுக்கம்!



யாழ்.மின்சார சபைக்கு புதிய கட்டுப்பாட்டு அலகு ஒன்றை அமைக்கும் வேலைத் திட்டம் கொழும்பு மின்சார சபையின் விசேட தொழிற்பாட்டுப் பிரிவால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த வேலைத் திட்டம் இந்த வருட இறுதிக்குள் 50 வீதம் பூர்த்தியடைந்துவிடும் என்று மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுப்பாட்டு அலகு வடமாகாணத்தில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள மின்சார விநியோகம் அனைத்தையும் இந்தக் கட்டுப்பாட்டு அலகு மூலம் சீர்செய்ய முடியும்.
சுன்னாகம் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் இது இயங்கி வருகிறது. வடமாகாணத்தில் லக்ஷபானா மின்சாரம் விநியோகிக்கப்படும் இடங்கள் தவிர ஏனைய பகுதிகளில் மின் பிறப்பாக்கிகள் ஊடாகவே மின் விநியோகம் இடம்பெறுகின்றது.
இந்தக் கட்டுப்பாட்டு அலகை அமைப்பதன் மூலம் குறித்த பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தனித்தனியே ஆளிகள் அமைத்து மின் துண்டிப்பை மேற்கொள்ள முடியும்.
இதனால் முழு இடங்களுக்குமான மின் துண்டிப்பு தவிர்க்கப்படும்.

அனைத்துப் பகுதிகளுக்கும் 30 வரையான ஆளிகள் இந்தக் கட்டுப்பாட்டு அலகு மூலம் பொருத்தப்படும். இவ்வாறு கட்டுப்பாட்டு அலகின் மூலம் ஆளிகளைப் பொருத்தி இயக்குவதால் தேவையற்ற விபத்துக்களையும் கட்டுப்படுத்த முடியும்.
இந்த வேலைத் திட்டத்துக்கான இயந்திரங்கள், ஆளணி வளம் என்பன கொழும்பில் இருந்து வந்த விசேட குழுவால் எடுத்துவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மின்சார சபையின் அதிகாரி ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்

facebook ஆல் இறந்த கவர்ச்சி மொடல் அழகி



facebook இல் ஓர் படத்தை பதிவேற்றியதால் பரிதாபமாக கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் கவர்ச்சி மாடல் அழகி ஒருவர்.
நியூசிலாந்தை சேர்ந்த 17 வயதாகும் எமிலி லோங்லி என்ற பெண்ணே மேற்படி இறந்தவராவார்.
குறித்த பெண்ணும் நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் மகனான 20 வயதாகும் எலியொட் டோர்னர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
குறித்த பெண் கல்லூரியில் படித்து வந்ததுடன், பகுதி நேரமாக மொடலிங் துறையில் தொழில் புரிந்துள்ளார்.
அண்மையில் சுற்றுலா ஒன்றுக்கு சென்று வந்த எமிலி, சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படங்களை facebook இல் பதிவேற்றியுள்ளார்.
அப் படம் ஒன்றில் அவரது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றும் இருந்துள்ளது.
குறித்த படத்தை பார்த்து ஆத்திரமடைந்த எமிலியின் காதலனான டோர்னர், எமிலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இறுதியில் வாக்குவாதம் எல்லை மீறி, தனது துப்பாக்கியால் எமிலியை சுட்டு கொன்றார். சம்பவ இடத்திலேயே எமிலியின் உயிர் பிரிந்தது.
தற்போது டோர்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இம்மாத ராசி பலன் ஜோ‌திட‌ம்








இந்த மாதத்தில் எல்லாவற்றிலுமே சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுஅவசியமாகும். ஒரு மீட்டர் ஏறினால் நான்கு மீட்டர் சறுக்கும். ஆயிரம் ரூபாய் கைக்கு வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாது. பின்னாலேயே ஐயாயிரம் ரூபாய்க்கு செலவு ஓடி வரும். மாத பிற்பகுதியில் இருந்து சக்கைப் போடு போட இருக்கின்றீர்கள். பரிகாரம்: தினமும் சூரிய வழிபாடு செய்யவும்.
இதுவரை எதிரிகளால் உங்களுக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டிருக்கலாம். இனி அந்தத் தொல்லை இராது. பெரும்பாலான எதிரிகள் வலிய வந்து உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். இம்மாதத்தைப் பொருத்தவரை சொந்த இடத்தில் இருந்து கொண்டு தனிக்காட்டு ராஜாபோல செயல்பட இருக்கின்றீர்கள். பரிகாரம்: கணபதி வழிபாடு மிகவும் நல்லது.
இம்மாதத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் அல்லது மனைவியின் உடல் நலம் பாதிக்கப்படும். வேலை காரணமாகச் சில மாதங்கள் பிரிந்திருக்க நேரிடலாம். அலுப்பு, சலிப்பு, நெருக்கமின்மை போன்றவையும் ஏற்படலாம். திருமண வயதில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களுக்குத் திருமணம் நிச்சயமாவதில் தாமதம் ஏற்படலாம். பரிகாரம்: அனுமனை வழிபாடு செய்து வரவும்.
இம்மாதத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆபத்து வரக் கூடும் என்று எச்சரிக்கையுடன் இருந்தால் ஆபத்து வரும் போது தடுமாறிப் போக வேண்டியதும் இல்லை. ஆபத்தைச் சமாளிக்க முடியாமல் தவிக்க வேண்டியதும் இல்லை. பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.

இம்மாதத்தில் போட்டிகளும் பொறாமைகளும் தலை தூக்க முடியாமல் தரையோடு தரையாக அமுங்கிப் போகும். பகை விவகாரம், வம்பு, வழக்கு போன்றவை முறியடிக்கப்படும். கடமைகளையும், காரியங்களையும் சிறப்பாக நிறைவேற்றி உங்கள் முக்கியத்துவத்தை உணரச் செய்வீர்கள். பல சாதனைகள் புரிந்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதத்தில் யாருக்கும் கடன் கொடுத்து விடாதீர்கள். கடன் அன்பை முறிக்கும். போக்குவரத்துகள் எளிதாக இருக்காது. சில சிரமங்களைச் சந்திப்பீர்கள். வண்டி பழுது பார்த்தல், பராமரித்தல் போன்றவற்றிலும் சிரமங்கள் ஏற்படலாம். முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும். அதுவரை பொறுமை தேவை. பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் சீராகவே இருக்காது. அடிக்கடி நோய் நொடிகள் வந்து தொல்லைப்படுத்தும். நீங்களும் எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு உங்கள் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் அதை உடனே செய்து முடிக்க வேண்டும் என்று தோன்றாது. சாவகாசமாகச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள். பரிகாரம்: அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
இம்மாதத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்காது. எப்போதுமே பற்றாக்குறையாகவே இருக்கும். தட்டுப்பாடுகள் அடிக்கடி உங்களைச் சுற்றி வரும். எப்போதும் வரவுகள் சிக்கல் இல்லாமல் வந்து விடாது. தடைகள், தாமதங்கள் போன்றவை குறுக்கிடும். கொடுக்கல், வாங்கலில் தேக்க நிலை ஏற்படும். மாத பிற்பகுதியில் இருந்து சற்று நிதானத்துடன் செயல்பட்டு பலரும் பாராட்டும் அளவிற்கு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். பரிகாரம்: பிரதோஷ வழிபாடு செய்து வருவது நல்லது.
இம்மாதம் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதை உடனே வெற்றிகரமாக செய்து முடித்து விடலாம் என்று தோன்றும். அவநம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை. எப்போதும் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்திருக்கும். உங்களுடைய உற்சாகமான பேச்சு பல நல்ல நண்பர்களைத் தேடிக் கொடுக்கும். முக்கியமாக தொழில், வேலைவாய்ப்புகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். பரிகாரம்: முருகன் வழிபாடு நல்லது.
இம்மாதத்தில் சுயமாகத் தொழில் செய்ய முயற்சிப்பவர்கள், சொந்தமாக வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் ஆகியோருக்கு அதற்கான சந்தர்ப்பம் கூடி வருவது அரிதாக இருக்கும். அப்படியே அடித்துப் பிடித்து சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டாலும் அதன் பின் முன்னேறுவது சிரமமாக இருக்கும். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் உபத்திரவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இலாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். பரிகாரம்: அனுமனை வழிபாடு செய்வது நல்லது.
இம்மாதத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அது வெளியே தெரியாது. உடன் பிறந்தவர்களால் செலவினங்களும் ஏற்படும். விரயங்களும் உண்டாகும். உடல் நலனில்கூட சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திருமணப் பேச்சுவார்த்தையில் மந்தமான போக்கு காணப்படும். இம்மாதத்தைப் பொறுத்த வரை எதிலும் சற்று மந்தத் தன்மை தொடரும். வாழ்க்கை துணைவர், நண்பர்கள் வகையில் சிறு கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது. பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
இம்மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. நீங்கள் இலட்சக்கணக்கில் சம்பாதிப்பவராக இருந்தாலும் இந்தக்காலக் கட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துதான் தீர வேண்டும். கொடுக்கல், வாங்கலில் குளறுபடிகளும் சிக்கல்களும் ஏற்படும். எப்போதோ வாங்கிய கடன் இப்போது வந்து தொல்லைப்படுத்தலாம். காரியத் தடைகள், கடுமையான வாக்கு வாதங்களால் ஏற்படும் கை கலப்புகள், வம்புச் சண்டைகள், அடிதடிகள் போன்றவற்றை நீங்கள் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் எப்போதும் சண்டைச் சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்யவும்

மீண்டும் இணைகிறார் மலிங்கா



இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இண்டியன்ஸ் அணியின் முக்கிய வீரருமான லசித் மலிங்கா காயம் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்
ஐந்தாவது ஐ.பி.எல் தொடரில் கடந்த ஏப்ரல் 11ம் திகதி ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியின் பின்பு காயமடைந்ததன் காரணமாக மலிங்கா எந்தவிதமான ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடவில்லை.
கடந்த 16ம் திகதி இலங்கைக்குத் திரும்பியிருந்த அவர் தற்போது முதுகு உபாதை குணமாகியுள்ளதன் காரணமாகவே இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லவுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் விளையாட வில்லை. ஆனால் 27ம் திகதி நடைபெறவுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அல்லது 29ம் திகதி நடைபெறவுள்ள டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மலிங்கா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலிங்கா, மும்பை இண்டியன்ஸ் அணி சார்பாக விளையாடாத இரண்டு போட்டிகளிலும் மும்பை இன்டியன்ஸ் அணி தோல்வியடைந்திருந்தது.
முதுகு உபாதை காரணமாக மலிங்கா கடந்த 14 மாதங்களுக்குள் போட்டிகளைத் தவறவிடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் ஆரம்ப இரண்டு போட்டிகளையும் மலிங்கா முதுகு உபாதை காரணமாக தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.