//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

இம்மாத ராசி பலன் ஜோ‌திட‌ம்








இந்த மாதத்தில் எல்லாவற்றிலுமே சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுஅவசியமாகும். ஒரு மீட்டர் ஏறினால் நான்கு மீட்டர் சறுக்கும். ஆயிரம் ரூபாய் கைக்கு வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாது. பின்னாலேயே ஐயாயிரம் ரூபாய்க்கு செலவு ஓடி வரும். மாத பிற்பகுதியில் இருந்து சக்கைப் போடு போட இருக்கின்றீர்கள். பரிகாரம்: தினமும் சூரிய வழிபாடு செய்யவும்.
இதுவரை எதிரிகளால் உங்களுக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டிருக்கலாம். இனி அந்தத் தொல்லை இராது. பெரும்பாலான எதிரிகள் வலிய வந்து உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். இம்மாதத்தைப் பொருத்தவரை சொந்த இடத்தில் இருந்து கொண்டு தனிக்காட்டு ராஜாபோல செயல்பட இருக்கின்றீர்கள். பரிகாரம்: கணபதி வழிபாடு மிகவும் நல்லது.
இம்மாதத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் அல்லது மனைவியின் உடல் நலம் பாதிக்கப்படும். வேலை காரணமாகச் சில மாதங்கள் பிரிந்திருக்க நேரிடலாம். அலுப்பு, சலிப்பு, நெருக்கமின்மை போன்றவையும் ஏற்படலாம். திருமண வயதில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களுக்குத் திருமணம் நிச்சயமாவதில் தாமதம் ஏற்படலாம். பரிகாரம்: அனுமனை வழிபாடு செய்து வரவும்.
இம்மாதத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆபத்து வரக் கூடும் என்று எச்சரிக்கையுடன் இருந்தால் ஆபத்து வரும் போது தடுமாறிப் போக வேண்டியதும் இல்லை. ஆபத்தைச் சமாளிக்க முடியாமல் தவிக்க வேண்டியதும் இல்லை. பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.

இம்மாதத்தில் போட்டிகளும் பொறாமைகளும் தலை தூக்க முடியாமல் தரையோடு தரையாக அமுங்கிப் போகும். பகை விவகாரம், வம்பு, வழக்கு போன்றவை முறியடிக்கப்படும். கடமைகளையும், காரியங்களையும் சிறப்பாக நிறைவேற்றி உங்கள் முக்கியத்துவத்தை உணரச் செய்வீர்கள். பல சாதனைகள் புரிந்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதத்தில் யாருக்கும் கடன் கொடுத்து விடாதீர்கள். கடன் அன்பை முறிக்கும். போக்குவரத்துகள் எளிதாக இருக்காது. சில சிரமங்களைச் சந்திப்பீர்கள். வண்டி பழுது பார்த்தல், பராமரித்தல் போன்றவற்றிலும் சிரமங்கள் ஏற்படலாம். முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும். அதுவரை பொறுமை தேவை. பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் சீராகவே இருக்காது. அடிக்கடி நோய் நொடிகள் வந்து தொல்லைப்படுத்தும். நீங்களும் எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு உங்கள் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் அதை உடனே செய்து முடிக்க வேண்டும் என்று தோன்றாது. சாவகாசமாகச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள். பரிகாரம்: அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
இம்மாதத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்காது. எப்போதுமே பற்றாக்குறையாகவே இருக்கும். தட்டுப்பாடுகள் அடிக்கடி உங்களைச் சுற்றி வரும். எப்போதும் வரவுகள் சிக்கல் இல்லாமல் வந்து விடாது. தடைகள், தாமதங்கள் போன்றவை குறுக்கிடும். கொடுக்கல், வாங்கலில் தேக்க நிலை ஏற்படும். மாத பிற்பகுதியில் இருந்து சற்று நிதானத்துடன் செயல்பட்டு பலரும் பாராட்டும் அளவிற்கு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். பரிகாரம்: பிரதோஷ வழிபாடு செய்து வருவது நல்லது.
இம்மாதம் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதை உடனே வெற்றிகரமாக செய்து முடித்து விடலாம் என்று தோன்றும். அவநம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை. எப்போதும் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்திருக்கும். உங்களுடைய உற்சாகமான பேச்சு பல நல்ல நண்பர்களைத் தேடிக் கொடுக்கும். முக்கியமாக தொழில், வேலைவாய்ப்புகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். பரிகாரம்: முருகன் வழிபாடு நல்லது.
இம்மாதத்தில் சுயமாகத் தொழில் செய்ய முயற்சிப்பவர்கள், சொந்தமாக வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் ஆகியோருக்கு அதற்கான சந்தர்ப்பம் கூடி வருவது அரிதாக இருக்கும். அப்படியே அடித்துப் பிடித்து சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டாலும் அதன் பின் முன்னேறுவது சிரமமாக இருக்கும். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் உபத்திரவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இலாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். பரிகாரம்: அனுமனை வழிபாடு செய்வது நல்லது.
இம்மாதத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அது வெளியே தெரியாது. உடன் பிறந்தவர்களால் செலவினங்களும் ஏற்படும். விரயங்களும் உண்டாகும். உடல் நலனில்கூட சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திருமணப் பேச்சுவார்த்தையில் மந்தமான போக்கு காணப்படும். இம்மாதத்தைப் பொறுத்த வரை எதிலும் சற்று மந்தத் தன்மை தொடரும். வாழ்க்கை துணைவர், நண்பர்கள் வகையில் சிறு கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது. பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
இம்மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. நீங்கள் இலட்சக்கணக்கில் சம்பாதிப்பவராக இருந்தாலும் இந்தக்காலக் கட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துதான் தீர வேண்டும். கொடுக்கல், வாங்கலில் குளறுபடிகளும் சிக்கல்களும் ஏற்படும். எப்போதோ வாங்கிய கடன் இப்போது வந்து தொல்லைப்படுத்தலாம். காரியத் தடைகள், கடுமையான வாக்கு வாதங்களால் ஏற்படும் கை கலப்புகள், வம்புச் சண்டைகள், அடிதடிகள் போன்றவற்றை நீங்கள் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் எப்போதும் சண்டைச் சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக