//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

வன்னியில் இடைவிடாத மழை மக்கள் அவலம்




நேற்றும் இன்றும் வன்னி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடராக மழைபெய்து கொண்டிருப்பதாகவும் இதனால் மீள்குடியேறி தறப்பாள் கொட்டகைகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் அவலங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவனியா மாவட்டங்களில் இடைவிடாத மழை கொட்டித்தீர்த்துள்ளது இதன்போது பலத்த காற்றும் விசியுள்ளதால் தற்போது வதைமுகாமில் தங்கியுள்ள மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரான மழையினால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போக்கு வரத்து செய்யமுடியாத நிலை காணப்பட்டதாகவும் எமது வன்னி செய்தியாளர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக