எங்களது நாட்டில் அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு ஆயுதங்கள் உள்ளன என்று வட கொரியாவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று ஹவுஸ் ஆஃப் கல்ச்சர் என்ற கூட்டம் நடைபெற்றது. அதில் பங்குபெற்ற துணை மார்ஷல் ரி யோங் ஹோ கூறுகையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிடமிருந்து வட கொரியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
மேலும் ஒரே அடியில் அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு எங்களிடம் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என்று அவர் இராணுவ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதே போன்று தென் கொரியாவின் தலைநகர் சியோலை மூன்றே நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என வட கொரியா எச்சரித்திருந்ததும் குறிப்பிட.த்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக