//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

மர்மப் பொருள் வெடித்து சகோதரர்கள் இருவர் உடல் சிதறிப் பலி



கிளிநொச்சி பளை- முல்லையடி பகுதியில் மர்மப் பொருள் ஒன்றை அடித்து விளையாடிய சகோதரர்கள் இருவர் உடல் சிதறிப் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நகரத்தை அண்டியுள்ள இந்தப் பகுதியில் வீட்டு வளவினுள் மர்மப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து வந்த மு. தமிழ்மாறன்(வயது4), மு. தனோஜன்(வயது2) ஆகிய சிறுவர்கள் இருவரும் அதனை கத்தியினால் வெட்டியும், அடித்தும் உள்ளனர், இதன் போது மிகப் பாரியளவு சத்தத்துடன் அது வெடித்துள்ளது.
இதில் சிறுவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுபயங்கரமாக முறையில் உயிரிழந்துள்ளார், மற்றய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பளை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதே வேளை, குறித்த சிறுவர்களின் தாய், ஒரு முன்பள்ளி ஆசிரியை எனவும், தந்தை ஒரு கூலித் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் இருவருக்கும் இந்த இரு பிள்ளைகளே உள்ளனர் என்பதும் சோகமான விடயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக