//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

facebook ஆல் இறந்த கவர்ச்சி மொடல் அழகி



facebook இல் ஓர் படத்தை பதிவேற்றியதால் பரிதாபமாக கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் கவர்ச்சி மாடல் அழகி ஒருவர்.
நியூசிலாந்தை சேர்ந்த 17 வயதாகும் எமிலி லோங்லி என்ற பெண்ணே மேற்படி இறந்தவராவார்.
குறித்த பெண்ணும் நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் மகனான 20 வயதாகும் எலியொட் டோர்னர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
குறித்த பெண் கல்லூரியில் படித்து வந்ததுடன், பகுதி நேரமாக மொடலிங் துறையில் தொழில் புரிந்துள்ளார்.
அண்மையில் சுற்றுலா ஒன்றுக்கு சென்று வந்த எமிலி, சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படங்களை facebook இல் பதிவேற்றியுள்ளார்.
அப் படம் ஒன்றில் அவரது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றும் இருந்துள்ளது.
குறித்த படத்தை பார்த்து ஆத்திரமடைந்த எமிலியின் காதலனான டோர்னர், எமிலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இறுதியில் வாக்குவாதம் எல்லை மீறி, தனது துப்பாக்கியால் எமிலியை சுட்டு கொன்றார். சம்பவ இடத்திலேயே எமிலியின் உயிர் பிரிந்தது.
தற்போது டோர்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக