//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

நடிகைகள் இலியானா,பிரியங்கா நேரடி மோதல். பாலிவுட்டில் பரபரப்பு




தமிழில் நண்பன்  படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியில் பர்பி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இருவருக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒருவரையொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவினர் சமரசப்படுத்தியதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளது. இது குறித்து இலியானாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பிரியங்கா சோப்ராவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம். பிரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன். ஒரு நடிகை என்ற ரீதியிலேயே எங்களுக்குள் அறிமுகம் உள்ளது. வேறு எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்குள் மோதல் நடந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை.
சினிமாவில் யார் தயவும் இன்றி தனி ஆளாக நின்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். கடவுள் தயவால்தான் இதை சாதிக்க முடிந்தது. சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது முதல் தெலுங்கு படம் ஹிட்டானது. அதன் பிறகு எனக்கு தைரியம் வந்து விட்டது. இவ்வாறு இலியானா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக