//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

தான் உடலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்த பெண்ணுக்கு 14 மாத சிறை!



கிறிஸ்ரி சோடென், 21 வயதாகும் பிருத்தானியாவை சேர்ந்த பெண். தான் ஆண் ஒருவரால் உடலியல் நீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலீசில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவரின் முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபரை கைது செய்து பொலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதன் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. குறித்த பெண் தன்னை விலைமாதுவாக, வயதுவந்தோருக்கான இணையதளம் ஒன்றில் விளம்பரப்படுத்தியிருந்தாராம்.
அதை பார்த்து குறித்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்த இளைஞன் மீது கற்பளிப்பு புகார் கொடுத்துள்ளாள் குறித்த பெண்.
இணையதள சட் பதிவுகள் மூலம் இளைஞனனின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்திய பொலீசார், பொய் குற்றச்சாட்டு அளித்த குற்றத்துக்காக அப் பெண்ணை கைது செய்தனர்.
குறித்த இளைஞனின் பணத்துக்கு ஆசைப்பட்டு இவ்வாறான புகாரை கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பொலீசாரின் 376 மணிநேரத்தை வீணாக்கி, பொலீஸ் திணைக்களத்துக்கு 14000 பவுன்ஸ் இழப்பு ஏற்படுத்தியதற்காகவும், பொய் முறைப்பாடு அளித்தமைக்காகவும் குறித்த பெண்ணுக்கு 14 வருட சிறை தணடனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக